வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, May 7, 2013

நான் இலக்கியவாதி அல்ல !

ஒரு முறை எழுத்துலக நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன். என்னை தவிர மற்றவர் அனைவரும் இலக்கியவாதிகள். நான் இலக்கிய நூலை வாசிப்பவன். அப்போது “விபச்சாரத்தை” பற்றின பேச்சு வந்தது.

ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம், “நீ எத்தன தடவ போயிருக்க ?” என்று விளையாட்டாக கேட்டார்.

 “நா எதுக்கு போனும், அதை விட சுவையான இலக்கியம் படிக்கிறேனே ! ” என்றார்.

“ நல்ல இலக்கியத்தை விட ஒரு பெண் கொடுக்கும் சுகம் பெருசில்ல… ” என்று விளக்கம் தந்தார்.

ஒரு பெண் கொடுக்கும் சுகம் ஒரு இரவு வரைக்கும் தான். ஆனால், நல்ல இலக்கிய நூல் கொடுக்கும் பாதிப்பு வாழ்நாள் வரை தொடர்ந்து வரும். குறைந்த பட்சம் இரண்டு நாளாவது நம்முள்ளே அந்த பாத்திரங்கள் குடித்தனம் நடத்தும். கதையை மாற்றியமைக்க தோன்றும். சில பாத்திரங்களோடு பேசுவோம். இருந்தாலும், அந்த நண்பர் கொடுத்த விளக்கம் எனக்கு கொஞ்ச நெருடலாக இருந்தது.

“ நீங்க சொல்லுறத எத்துக்குறேன். ஆனா , நீங்க சொல்லுற நல்ல இலக்கியம் ஏதாவது பெண்ண தாங்கி தான் இருக்கு. ஒரு பெண்ணோட உணர்வு, பெண் மேல இருக்குற உணர்வு ஒதுக்கி வச்சி நல்ல இலக்கிய நூல் யாரும் கொடுத்ததில்ல. அப்படி கொடுக்கனும் நினச்சா அது ஆன்மீக புத்தகமா தான் இருக்கும்.” என்றேன்.

“குகன் ! நீங்களும் இலக்கியவாதி வந்துட்டு இருக்கீங்க…” என்றார்.

இலக்கியவாதிகளின் பிரச்சனையே இது தான், ஒருத்தன் நல்ல இருந்தா அவனையும் இலக்கியவாதியாக்கிடுவாங்க…. எஸ்கேப்… !!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயா(யோ) சாமீ ! நல்ல எஸ்கேப்… வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts with Thumbnails