வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, May 23, 2013

இந்திரா காந்தியைக் கொன்றது யார் ?

தமிழர்கள் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால்  "இராஜீவ் காந்தி படுகொலை" என்று எளிதில் பதிலளித்துவிடுவோம். அதேப் போல், சீக்கியர் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால் "இந்திரா காந்தியின் படுகொலை" என்று தான் சொல்ல வேண்டும்.



எண்பதுகளில், தொன்னூறு தொடக்கத்தில் ஆப்கானில் அமெரிக்கா இஸ்லாமியதீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டு இருந்த காலக்கட்டத்தில், பாகிஸ்தான் சீக்கிய தீவிரவாதத்தை இந்தியாவில் வளர்த்து வந்தது. பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதற்காகவும், தங்கள் தலைவரைக் கொன்றதற்காகவும், இரண்டு சீக்கியர்கள் இந்திரா காந்தியை கொலை செய்தனர்.ஆனால், அதன் பின்னால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ இருக்கிறது என்று இந்த நூல் சொல்கிறது.

இந்திரா காந்தி மீது என்ன விமர்சனங்கள் இருந்தாலும், இந்திய இறையாண்மையை அமெரிக்காவுக்கு தலைவனங்காமல் பாதுகாத்தவர். அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் சோவித்துடன் கைகோர்த்தவர். இந்தியா பாகிஸ்தான் அணு உலை சோதனையை தடுக்க திட்டமிடுவதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. ஒரு வேலை இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், சோவியத்துக்கு எதிராக ஆப்கானுக்கு உதவ தங்களால் முடியாமல் போகுமோ என்று அமெரிக்கா அஞ்சுகிறார்கள்.

ஆப்கான் போராட்டம் பாதிக்கப்பட்டால், சோவியத் கை மேலோங்கும். அதனால்,சீக்கியர்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் அந்நிய சக்திகள் தங்களுக்கு சாதகமாகபயன்படுத்தி கொன்றார்கள் என்கிறது இந்த நூல்.

விறுப்பு விறுப்பு நிறைந்த நாவல் போலவே எழுதியிருக்கிறார் தாரிக் அலி. இடையே , இந்திராகாந்தியின் பகடி செய்வது போல் வசனங்களும் எழுதியிருக்கிறார்.

இன்று, அமெரிக்காவுக்கு அடிவருடும் இந்தியா, முப்பது வருடங்கள் முன்பு அமெரிக்கா,பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை எதிர்த்து போராடி இந்தியாவை நிமிர செய்த ஒரு இரும்பு பெண்மணி மரணத்தை திரை வடிவமாக காட்டுகிறார் இந்த நூலின் ஆசிரியர்.


நூலை வாங்க.....

இந்திரா காந்தியைக் கொன்றது யார் ?
தாரிக் அலி
மதுரை பிரஸ்
ரூ.160.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails