வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, July 30, 2013

மாற்றம் தந்த இந்திய சினிமா - 5 :: ஹரிஷ்சந்திரச்சி பாக்ட்ரி

மொழி : மராத்தி
இயக்கம் : பரேஷ் மோகஷி

இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் இத்தருணத்தில் நாம் கொண்டாட வேண்டியப்படம் ‘ஹரிஷ்சந்திரச்சி பாக்ட்ரி'.(Harishchandrachi Factory).

வருடம் வருடம் தாதாசாஹேப் பால்கே விருது சினிமா கலைஞர்களுக்கு வழங்குவது கேள்விப் பட்டிருப்போம். அந்த விருதைப் பற்றியும், விருந்தின் கௌரவத்தை பற்றியும் முதன் முதலாக சிவாஜி அவர்களுக்கு கொடுக்கும் போது தமிழ் நாட்டு மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.


சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு "தாதாசாகேப் பால்கே" விருது பெயரில் விருது வழங்குவதை தெரிந்திவர்களுக்கு, பால்கே என்பவர் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. சினிமாவில் இருப்பவர்களுக்கு இந்திய சினிமாவின் தந்தையாக தெரிந்திருக்கும். ஆனால், சினிமா என்று ஒன்று அறியப்படாத காலத்தில் முதன் முதலில் சினிமா எடுக்க நினைத்த பால்கேவின் கஷ்டம் தெரியுமா ? அதற்கான தொழிற்நுட்பத்தை எப்படி அறிந்துக் கொண்டார் என்பது தெரியுமா ? அவர்ப்பட்ட கஷ்டங்களை எல்லாம் ஒரு சொட்டு கண்ணீர் இல்லாமல் நகைச்சுவையாக, நல்ல தரமான உலக சினிமாவை கொடுத்திருக்கிறார்கள்.

"உலக சினிமா" என்றால் பார்வையாளனை அழ வைக்க வேண்டும் எழுதப்படாத விதியில் இருந்து இந்தப் படம் மாறுப்படுகிறது. முழுக்க முழுக்க பார்வையாளர்கள் ரசித்து சிரித்துப் பார்க்க முடிகிறது.


இந்திய சினிமா தொடக்க காலமான 1913ல் கதை தொடங்குகிறது. வறுமையில் வாடும் பால்கே, படம் எடுக்க வேண்டும் ஆசைப்படுகிறார். நண்பர்கள் மூலம் கடன் வாங்கி அதற்கான தொழிற்நுட்பத்தை கற்றுக் கொள்ள இங்கிலாந்து செல்கிறார். திரும்பி வந்த பால்கே, செடி வளர்வதை படம் பிடிக்கிறார். செடி வளர்வதை படப்பிடித்ததை வைத்து தான் எடுக்க இருக்கும் ‘ராஜா ஹரிசந்திரா’ படத்திற்கு நிதி திறட்டுகிறார்.

தன் படத்திற்கு வேலை செய்ய நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரையும் தேர்வு செய்கிறார். சரித்திரத்தில் இடம் பெறபோகிறோம் என்று தெரியாமலே வேறு வேலை கிடைக்காததால் அந்த கலைஞர்களும் சம்மதிக்கிறார்கள். கதாநாயகி மட்டும் கிடைக்காததால், ஆணுக்கு பெண் வேடமிட்டு நாயகியாக்குகிறார். ' ராஜா ஹரிசந்திரா' படம் எடுக்க சென்ற இடத்திலும், காவல்த்துறையினரால் கைது செய்யப்படுகிறார்கள். சினிமா என்றாலே தெரியாத காலக்கட்டத்தில் பால்கே சினிமாவைப் பற்றி விளக்குகிறார்.

ஒரு வழியாக பல இன்னல்கள் கடந்து, பால்கே படத்தை எடுத்து முடிக்கிறார். இந்தியாவில் இந்தியனால் எடுக்கப்பட்ட முதல் சினிமா ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெருகிறது. இங்கிலாந்திலும் அவரது படம் வெற்றி பெறுகிறது. அவரை இங்கிலாந்தில் படம் எடுக்க அழைப்பு விடுக்கும் போது, " நான் இங்கிலாந்து வந்துவிட்டால், இந்தியாவில் இந்த கலை எப்படி வளர வைக்க முடியும்" என்கிறார். "இந்திய சினிமாவின்" தந்தை என்ற பெயரை பெறுகிறார்.

பால்கேவின் நண்பர் படத்தின் ஒத்துகை பார்க்கும் இடம், நாயகிக்காக தாசிகள் இருக்கும் இடத்தில் தேடுவது, படத்தைப் பற்றி விவாதிப்பது, பால்கேவும், அவரது மனைவியின் உரையாடல் என்று நகைச்சுவை தழும்ப காட்சி அமைத்திருக்கிறார்கள். கலைக்காக போராடிய எல்லோருடைய வாழ்கையிலும் சோகம் நிறைந்து தான் இருக்கிறது. பால்கே வாழ்கையும் அப்படி தான்.

ஆனால், சினிமாவுக்காக உழைத்த மனிதரை அழுது வடிய விரும்பவில்லை. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ரசிகர்களை பால்கே பாத்திரம் சிரிக்க வைத்திறது.

இந்திய சினிமாவை நூற்றாண்டை கொண்டாடும் வேலையில், இந்த படம் இந்திய சினிமா தந்தைக்கு மணி மகுடமாக “ஹரிசந்திரச்சி பாக்ட்ரி” அமைந்திருக்கிறது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails