வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, September 12, 2013

வன்னி யுத்தம் - கடைசி நேரப் பயணம்

 ”ஈழம்”

இன்று வரை கனவு தேசமாகவே இருக்கிறது. உலக நாடுகளும் அதை கனவாகவே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. பணமோ, தங்கமோ இருக்கும் தேசமில்லை. ஆனால், இலங்கை பிரியக்கூடாது என்பதில் மட்டும் எல்லா நாடுகளும் ஒரே மாதிரியாக யோசிக்கிறது. ஆசிய நாடுகள் தங்கள் ஆயுதம் விற்க இலங்கையை நல்ல வியாபார தளமாக மாற்றிக் கொண்டது. அதில், இலங்கை அர்சு வெற்றிப் பெற்ற பிறகு, வேறு வியாபாரங்கள் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

வன்னி யுத்தம் ஈழத்தை முன் வைத்து வந்த நூல் அல்ல... ஈழப் போராட்டத்தை பற்றின கடைசி நாட்களை பற்றியது. விடுதலைப் புலிகளை பற்றின விமர்சனங்கள், அலசல்கள் என்று சொல்லலாம். ஆனால், இதை எல்லாம் ஏற்றுக் கொண்டு, திருத்தி மீண்டும் போராட அவர்களால் முடியாது. 

ஈழப் போராட்டத்தை அங்கு இருக்கும் ஈழத் தமிழர்கள் எப்படி பார்த்தார்கள், போராட்டத்தில் அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகள் என்று பல விஷயங்கள் இந்த நூல் சொல்கிறது.



குறிப்பாக சில பகுதிகள்…..

“இந்த நூல் ஈழப் போராட்டம், விடுதலை, சுதந்திரம் போன்ற மந்திரச் சொற்கள் வறிய கூலிக் குடும்பங்களை சார்ந்த இளைஞர்களின் ஏற்படுத்திய தாக்கங்கள் மேட்டுக்குடி இளைஞர்களிடம் ஏற்படுத்தவில்லை ! அவர்கள் எப்போதும் மேட்டுக்குடியாகவும் அளும் வர்க்கமாக கருதிக் கொண்டார்கள் என்ற கருத்தை முன் வைக்கிறது.”

 அத்தியாயம் 6ல், மாமிச பொங்கல், பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டாலும் சைவ வேளாளர், வன்னி மெட்டு குடியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் விமர்சனங்களாக புலிகளுக்கு எதிராக முன் வைக்கும் கருத்துக்கள் இலங்கை இனவாத அரசுக்கு சாதகமாக அமைகிறது.”

தமிழ் தேசிய போராட்டங்களுக்கு சம்மந்தமான விமர்சனங்கள் கோட்பாடு ரீதியான தர்மங்களை மீற தாக்குதல்களாகவே இருக்கிறது. 

ஆரம்ப காலங்களில் சிறுவர் புலிகளில் இணைந்தார்கள். புலிகளும் ஏற்றுக் கொண்டார்கள். அதற்காக காரணத்தை பக், 59, அத்.9.

குழந்தை இராணுவம் பற்றி ஆரம்ப காலத்தில் புலிகளின் சிறுவர்கள் இருந்தார்கள். ஆனால், 18 வயது கீழ் புலிகளின் சேர்ப்பதில்லை என்று அவர்களுக்கு பின்பற்றினார்கள்.

வன்னியில் நல்லிரவில் ஒரு பெண் தனியாக நடக்கலாம். வேலையில்லா திண்டாட்டம் இல்லை, (பக்.52)

சிங்களவர்கள் தமிழர்கள் மீது எவ்வளவு வெறுப்புடன் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அத்தியாயம். 20ல் ஒரு பகுதி.

”காயத்துடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட சிங்கள வீரர்கள் யுத்த மரபுப்படி நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அந்த இராணுவ வீரனை அன்புடன் கவனித்துக்கு ஐயர் அவனிடம் ‘ ஒரு வேளை நான் உன் ஊருக்கு வந்தால், நீ உனக்கு என்ன தருவாய் ?” என்ற கேட்டதற்கு, “ நீ ஒரு தமிழன்; நீ என் ஊருக்கு வந்தால் உன்னை நான் சுடுவேன்’ என்று தனது வன்மத்துடன் பதில் சொன்னான். 

சகோதர இனத்தின் சோகங்களையும், கோரத்தனமாக மரணங்களையும், ஈழத்தின் அவலத்தையும் சிங்கள பட்டாசு சத்ததால் எவ்வளவு நாள் மறைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

மனித நேயம் இறந்த மண்ணில் மனித உரிமையைப் பற்றி பேசப் போகும் காமன்வெல்த் மாநாடு….!!!

சிங்களர்கள் ஈழத்தில் நடத்தியது யுத்த வெறியல்ல, வர்த்தகத்தின் திமிர். காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது போல் தன் மீது இருக்கும் இனப்படுகொலை கரையை சிங்களவர்கள் துடைத்துவிடுவார்கள். வர்த்தக வாய்ப்பை பார்த்து வல்லரசு நாடுகளும் ஆதரவு தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள்.இறந்த தமிழர் உயிர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களாக இருக்கும்.

நூலை இணையத்தில் வாங்க.....

வன்னி யுத்தம்
ரூ.125. பக். 336
விகடன் பிரசுரம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails