வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, November 14, 2013

சினிமா 100 (1913 - 2013)

சலனப்பட காலங்கள் 

சினிமா - அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை கொண்டாடக் கூடிய ஒரே விஷயம். ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு ரசனை இருந்தாலும், சினிமாவை ஒதிக்கிவிட முடியாதபடி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கலந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு முதல்வர்களை தந்ததும், கோடிஸ்வரர்களை தெருவுக்கு கொண்டு வந்தது சினிமா தான். பொழுதுபோக்குக்கும் சரி, குடும்பத்துடன் செல்வதற்கும் சரி, தனிமையை மறப்பதற்கும் சரி சினிமா பலரின் தோழனாக இருக்கிறது.

இப்படிப்பட்ட சினிமா நூறு ஆண்டுகள் கடந்திருக்கிறது மிகவும் பிரமிப்பான விஷயம். எத்தனையோ தொழிற்துறை நூறு ஆண்டுகளை கடந்திருக்கிறது. சினிமாவுக்கு முன்பு தோன்றிய தொழிற்துறை இன்றும் இருக்கிறது. ஆனால், சினிமா நூற்றாண்டை கொண்டாடுவது போல் வேறு எந்த துறையை கொண்டாடியதில்லை. கொண்டாடப் போவதுமில்லை. காரணம், மற்ற தொழிற்துறையை விட சினிமா பல முதலாளிகளை உறுவாக்கியிருக்கிறது. தன் வரலாற்றை சரியாக பதிவு செய்து வளர்ந்த ஒரே துறை சினிமா மட்டும் தான்.


அழுது சத்தம் போட்டுக் கொண்டே பிறக்கும் குழந்தைப் போல் சினிமா தோன்றவில்லை. சினிமாவின் பிறப்பு மௌனமாக முறையில் தான் இருந்தது. திரையில் படம் பார்ப்பவர்களுக்கு சிறு சத்தம் கூட திரையில் இருந்து கேட்காது. ஓளியை மட்டும் பதிவு செய்யும் சாதனமாக தான் சினிமா தோன்றியது.

முதன் முதலில் இந்தியாவில் திரையிடப்பட்ட படம் ”ஸ்ரீ புண்டலிக்’ என்னும் மராத்தியில் எடுக்கப்பட்ட சலனப்படம் தான். மே 18, 1912ல் தாதாசாகேப் டோர்ன் என்பவர் மும்பையில் முதல் முதலாக படத்தை திரையிட்டார். இதில் பணியாற்றிய கெமிராமேன் ஜான்சான் வெள்ளையன் என்பதாலும், படத்தின் வேளைகள் முழுக்க முழுக்க லண்டனில் நடந்ததாலும் இதை முதல் இந்திய சினிமாவாக யாரும் கருவதில்லை.

முதல் இந்திய சினிமாவாக நாம் சொல்வது மராத்தியில் தாதாசாகேப் பால்கே அவர்கள் இயக்கிய “ராஜா ஹரிசந்திரா” படம் தான். மே 3, 1913ல் மும்பையில் திரையிடப்பட்டது. ஒரே ஒரு பிரதி மட்டும் எடுக்கப்பட்டு திரையிட்டனர். வியாபார ரிதியாகவும் இந்த படம் மிக பெரிய வெற்றிப் பெற்றது.

ராஜா ஹரிசந்திரா படத்தின் வெற்றிக்கு பிறகு மோகினி பஸ்மசூர், சத்தியவான் சாவித்திரி, லன்கா தாஹன், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மா போன்ற படங்களை பால்கே இயக்கினார். ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவுக்கு சினிமாவை அறிமுகப்படுத்திய பால்கே, தனது நிறுவனம் நஷ்டத்தில் முழ்கி கையில் பணமில்லாமல் இறந்தார்.

சினிமாவில் வாழ்நாள் சாதனையானையாளர்களுக்கு பால்கே நினைவாக “தாதாசாகேப் பால்கே” விருது வழங்கிவருகிறோம். இந்திய சினிமாவின் தந்தையாக பால்கேவை தான் நாம் கொண்டாடுகிறோம்.

இந்திய சினிமா எடுத்தத்தில் பால்கே எப்படி மிக முதன்மையாக திகழ்ந்தாரோ ஜம்ஷத்ஜி ப்ராம்ஜி மதன் படத்தை தயாரிப்பதிலும், விநியோகம் செய்வதிலும் மிக முக்கியமானவர். எல்பின்ஸ்டோன் பயாஸ்கோப் என்று நிறுவனத்தின் மூலம் பல குறும்படங்களை தயாரித்திருக்கிறார். அல்பர்ட் தியேட்டரை தொடங்கினார். முதல் பெங்காலிப் படத்தை தயாரித்தப் பெருமையும் இவரையே சாரும்.

பால்கே, ஜம்ஷத்ஜி இருவரால் சினிமாவை வட இந்தியாவில் பரப்ப முடிந்த அளவிற்கு, தென்னிந்தியாவில் பெரிதும் பரப்ப முடியவில்லை. தென்னிந்தியாவில் சினிமாக் கலை பரவியதற்கு மிக முக்கியமானவர் ரகுபதி வெங்கையா நாயுடு. தெலுங்கு திரையுலகின் தந்தையாக திகழ்கிறார். வருடந்தோறும், ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருது விழாவில் திரைப்பட கலைஞர்களுக்கு “ரகுபதி வெங்கையா” விருது வழங்கி வருகிறது.

அண்ணா சாலையில் இருக்கும் கெய்டி தியேட்டர், புரசையில் இருக்கும் க்ளோப் தியேட்டர், மிண்ட் தெருவில் இருக்கும் க்ரவுன் தியேட்டர் என்று சென்னையில் இருக்கும் பல முக்கிய தியேட்டர்கள் இவரால் நிறுவப்பட்ட வை. கஜேந்திர மோட்சம், நந்தனார் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.

சினிமாத் துறை இந்தியாவில் வளர்வதை கண்ட வெள்ளையர்கள் 1927ல் இந்திய சினிமா அமைப்பை உருவாக்கினர். ஆனால், இந்திய சினிமா வளர்ச்சிக்கு உதவுவதற்கு பதிலாக வெள்ளையர்கள் தங்கள் படங்களை கொண்டு செல்வதில் தான் அதிக கவனம் செலுத்தியது. அதனால், இந்த அமைப்பு விரைவிலே கலைக்கப்பட்டது.

இந்திய சினிமா வளர்ச்சிக்கு மிக ஆரம்பப் புள்ளியாக இருந்தது மௌனப்படங்கள் என்பது மறுக்க முடியாது. ஆனால், அதை நாம் பாதுகாக்கவில்லை என்பது தான் வரலாறு சொல்கிறது.

சமிபத்தில் தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்த சினிமா நூற்றாண்டு நிகழ்ச்சியில் 1913ல் எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் சினிமா என்று சொல்லப்படும் “ராஜா ஹரிசந்திரா” படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நாற்பது நிமிடங்கள் உள்ளப் படம் வேறும் இருபது நிமிடங்கள் தான் பார்க்க கிடைத்திருக்கிறது. மற்ற பகுதிகள் எல்லாம் அழிந்துள்ளது.

அதே நிகழ்ச்சியில், 1903ல் எடுக்கப்பட்ட “The Great Train Robbery" என்ற அமெரிக்கப் படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டதை பார்த்தேன். 14 நிமிடங்கள் எடுக்கப்பட்ட படம். எந்த பகுதியும் பாதிக்கப்படவில்லை.

இந்தியாவில் 1936 முன்பு வரை 1500 சலனப்படங்கள் வந்துள்ளது. அதில் “மார்த்தாண்ட வர்மன்” என்ற படம் மட்டும் தப்பி பிழைத்து புனே திரைப்பட காப்பகத்தில் இருப்பது 'தமிழ் ஸ்டூடியோ' அருண் கூறினார். 23 வருட வரலாற்றை காப்பாற்ற முடியாமல் இந்திய சினிமாத்துறை இருந்துள்ளது. சினிமா நூற்றாண்டை கொண்டாடும் இந்நேரத்தில் சினிமாவை தந்த முன்னோர்களின் பொக்கிஷத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பதை நாம் வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அசையும் படங்கள் மக்கள் மனதில் அதிக வரவேற்பு பெற்றாலும், ரசிகர்களுக்கு எதோ ஒரு குறை இருந்துக் கொண்டு தான் இருந்தது. அதைக் குறையை நீக்க பேசும் படம் இந்திய சினிமாவில் மெல்ல அடியெடுத்து வைத்தது.

இன்னும் பேசுவோம்.

(நன்றி : நம் உரத்தசிந்தனை மாத இதழ், நவம்பர் )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails