வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, December 9, 2013

சரப்ஜித் சிங் : ரா உளவாளியின் கண்ணீர் கதை

சரப்ஜித் சிங் ஒரு விவசாயி. திருமணமானவன். அழகான இரண்டு பெண் குழந்தைகள். அன்பான சகோதரி. இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருக்கும் தர்ன் தரன் மாவட்டத்தில் இருக்கும் பிகிவிந்த் என்ற இடத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தான். மல்யுத்தம் என்றால் அலாதி பிரியம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களோடு மல்யுத்தம் விளையாடுவது சரப்ஜித்துக்கு பிடிக்கும்.

குடும்பதோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த சரப்ஜித் சிங் ஒரு நாள் மாயமாய் மறைந்தார். குடும்பத்திறனர் ஒவ்வொருவரும் அவனை தேடாத இடமில்லை. விசாரிக்காத உறவினர்கள் இல்லை. எங்கு சென்றான். எப்படி சென்றான் என்று எந்த விபரமும் இல்லை. இரண்டு பெண் குழந்தையை சரப்ஜித் சிங் மனைவி செய்வதறியாமல் இருக்க அவர்களுக்கு துணையாக இருந்தது சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பிர் சிங் தான்.


1991ல் ஒரு நாள் சரப்ஜித் சிங்யிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் தான் பாகிஸ்தான் இராணுவத்தால் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும், தன் பெயரை பாகிஸ்தான் சிறை பதிவு ஏட்டில் ”மன்ஜித் சிங்” என்ற பெயரில் இருப்பதாகவும் எழுதியிருந்தார். தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று தன் கண்ணீர் துளிகள் குறிப்பிட்டிருந்தான். அன்றில் இருந்து தன் சகோதரனின் விடுதலைக்காக தல்பீர் போராடினாள்.

 இந்திய அரசு, பாகிஸ்தான் அரசு, கருணை மனு, மக்கள் உதவி என்று ஒவ்வொருவராக கெஞ்சி தன் சகோதரனின் விடுதலைக்காக கேட்டு பார்த்தாள். ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல..... கிட்ட தட்ட இருபத்தி இரண்டு வருடங்கள் தன் சகோதரனின் விடுதலைக்காக போராடினாள்.

 பாகிஸ்தான் இராணுவம் பிடித்திருப்பது இந்திய ஏழை விவசாயி என்று தான் சரப்ஜித் சிங்கை முதலில் கைது செய்தனர். பின்னர் பாகிஸ்தான் அரசு சரப்ஜித் சிங்யை 'ரா உளவாளி' என்று கூறியது. அது மட்டுமில்லாமல் லாகூர், பைசிலாபாத் இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது குற்றத்திற்காக சரப்ஜித் சிங்க்கு மரண தண்டனை விதித்தது.

 சரப்ஜித் சிங் ரா உளவாளி அல்ல என்று இந்திய அரசு மறுத்தது. வெடிகுண்டு தாக்குதலுக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அவர்கள் குடும்பம் மறுத்தனர். ஆனால், பாகிஸ்தான் சரஜித் சிங்யை விடுதலை செய்ய உதவவில்லை.

நாடெங்கும் சரப்ஜித் சிங் மரண தண்டனை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தது. சரப்ஜித் சிங்யின் மரண தண்டனை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடந்தது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூட சரப்ஜித் சிங் ஆதரவாக இணையத்தில் ஆதரவு கேட்டார். இந்திய அரசு சரப்ஜித் சிங் விடுதலை செய்ய கோரியது. ஆனால், பாகிஸ்தான் எதற்கும் செவி சாய்கவில்லை. தங்கள் நாட்டில் வெடிகுண்டு நிகத்திய சரப்ஜித்தை தண்டிக்காமல் விட மாட்டோம் என்று தான் சொன்னது.

இங்கிலாந்து வழக்கறிஞர் "freesarabjitsingh.com" என்ற இணைய்தளத்தை தொடங்கி சரப்ஜித் சிங் விஷயத்தை மனித உரிமை குழுவுக்கு கொண்டு சென்றார். உலகில் பல இடங்களில் இருந்து ஆதரவு கிடைத்தது. பாகிஸ்தான் வழக்கறிஞர் ஒருவர் கூட சரப்ஜித் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

 சரப்ஜித் கருணை இழுவையில் இருக்கும் சமயத்தில் 29 ஏப்ரல் 2013 அன்று பாகிஸ்தான் சிறைச்சாலையில் கைதிகளுக்குள் நடந்த சண்டையில் சரப்ஜித் சிங் பலமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நாட்களில் அவரது உயிர் பிரிந்தது.

இறந்த சரப்ஜித் சிங் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பெரிய பெரிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர். பெரிய தலைவர் இறந்தால் எவ்வளவு கூட்டம் கூடுமோ அந்த அளவுக்கு இறுதி ஊர்வலத்தில் கூடியது. பாகிஸ்தான் எதிரான கோஷங்கள் எழுப்பட்டது. இருபது வருடங்களுக்கு மேல் காத்திருந்த ஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைக்க அரசு என்ன செய்தாலும் சரப்ஜித் சிங் உயிருக்கு ஈடாகாது.

அவரது சகோதரி இது திட்டமிட்ட மிட்ட கொலை என்றார். அரசியல் பிரமுகர்கள் "அப்ஸல் குருவை தூக்கில் போட்டதற்காக பாகிஸ்தானின் பழி வாங்கும் நடவடிக்கை” என்றனர். பிரதமர் மன்மோகன் சிங் "துக்கக்கரமான செய்தி" என்று சரஜித் சிங் மரணத்திற்கு இறங்கல் தெரிவித்தார். இந்திய அரசு அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி உதவித்தொகை அளித்தது.

 மே 3, 2013 ஜம்மு சிறைச் சாலையில் இருக்கும் பாகிஸ்தான் கைதியான சனுல்லா ஹக் முன்னாள் இராணுவ வீரன் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தான். இதனால், இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தான் கைதிகள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்து.

 சரப்ஜித் சிங்க்காக இத்தனை பேர் போராடினார்கள். ஆனால், நிஜமாகவே அவர் ரா உளவாளி தானா என்ற சந்தேகம் அவருக்காக போராடியவர் மனதில் இருந்துக் கொண்டு தான் இருந்தது. 1990ல் பாகிஸ்தானில் வெடித்த குண்டு வெடிப்புக்கு சரப்ஜித் சிங்க்கு சம்மந்தம் இருக்கிறதா இல்லையா என்ற உறுதியான தகவல் இல்லை. ஆனால், சரப்ஜித் சிங் இறந்த பிறகு அவர் ரா உளவாளி தான் என்ற உண்மையை ரா தலைமை அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.

முக்கியமான பணிக்காக பாகிஸ்தானுக்கு உளவு பாக்க அனுப்பி வைக்கப்பட்டார் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால், பாகிஸ்தான் வெடிகுண்டு பற்றியும், சரப்ஜித் சிங் பங்கு பற்றியும் எந்த விபரமும் கூறவில்லை. 

கட்டுரைக்கு உதவியது

http://en.wikipedia.org/wiki/Sarabjit_Singh
http://indiatoday.intoday.in/story/surjeet-singh-admits-he-was-a-spy-raw-agent-in-pakistan/1/202866.html

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு கட்டுரை.... நன்றி....

வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts with Thumbnails