வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, January 16, 2014

மண்ட்டோ படைப்புகள்

ஒரு எழுத்தாளன் வாழ்வாதாரத்திற்கு வணிக ரீதியாக என்ன தான் எழுதி கூவித்தாலும், தான் எழுத்தாளனாக வாழ்ந்ததிற்கு பல ஆண்டுகள் தன் பெயரை பேசுவது போன்ற ஒரு படைப்பிலக்கியத்தை படைக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அப்படி படைப்பிலக்கியத்தை படைத்து என்ன சாதித்துவிட போகிறோம் என்பவர்களுக்கு சாதித்துக் காட்டிய மண்ட்டோவின் படைப்புகள் எடுத்துக்காட்டாக இருக்கும்.


இந்திய – பாகிஸ்தான் பிரிவினை முன் பிறந்த படைப்பாளியான மண்ட்டோ, அரசியல் சூழ்நிலையால் பாகிஸ்தான் நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தது. பிரிவினை முன்பு 3 முறையும், பிரிவினை பிறகு பாகிஸ்தானில் 3 முறையும் தனது படைப்புக்காக சிறை சென்றவர்.

பிரிவினைப் போது ஏற்ப்பட்ட வலியும், வேதனைகள் மட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுப்பட்டவர்களின் குற்றவுணர்வையும் தனது படைப்பின் பிரதிபலித்திருக்கிறார்.

“என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என்கதைகளில் எந்தத் தவறும் இல்லை” என்கிறார் மண்ட்டோ. தன் படைப்பு மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு கதையை கனத்த இதயத்தோடு கடந்து சென்று அடுத்த கதையை சென்றேன். ஒவ்வொரு கதைகளிலும் ஐம்பது வருடக் காலக்கட்டத்தை நினைவுப்படுத்தவில்லை. இப்போதுக் கூட பொருந்தும் வகையாக சம்பவங்களை நினைக்க வைக்கிறது.

 நண்பர் Prince Ennares Periyar “திற" ( Open it) என்ற மண்ட்டோவின் சிறுகதையை மையமாக வைத்து ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு பதிலாக குஜராத் இனக் கலவரத்தை களமாக மாற்றியிருக்கிறார். காலங்கள் மாறினாலும், பின்னனி மாறினால் மனிதனுக்கு இருக்கும் மிருக குணமும், அதனால் மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் வலியும் மாறுவதில்லை என்பதை இந்த குறும்படம் சொல்கிறது. 

சர்ச்சை செய்து விளம்பரம் தேடிக் கொள்ளும் படைப்பாளிகளின் படைப்பு சில நாட்களிலே நீர்த்து போகும். ஆனால், மண்ட்டோ போன்றவர்களின் படைப்புகள் இன்னும் ஐம்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். விவாதிக்கப்படும்.

இணையத்தில் வாங்க.. 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails