வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, September 18, 2014

பிரமாண்டமல்ல.... பணத்திமிர் !!

ஏன் சங்கர் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம் என்று ஒரு நண்பர் கேட்கிறார் ?



தயாரிப்பாளராக சங்கரை நான் மதிக்கிறேன். குறைந்த செலவில் ஒரளவு தரமான படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால், இயக்குனர் சங்கரை ஒரு காலும் என்னால் மன்னிக்க முடியாது.

இந்த பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவெல்லாம் அதிக விலைக்கு விநியோகஸ்தர்களிடம் விற்பதற்கான வியாபார தந்திரம். சாட்டிலைட் உரிமையை இன்னும் அதிக விலைக்கு விற்க சூட்சமம். தயாரிப்பாளரும், இயக்குனருக்கு லாபம் கிடைக்கலாம். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்தால் தான் உண்மையான வெற்றியே !! அந்த அளவில் முந்தைய சங்கரின் எந்திரன், நண்பன் தோல்வி படமே !!

இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் செய்த செலவில் ஐந்து ஜிகர்தண்டா படங்களை தயாரிக்கலாம். (அர்னால்ட்டுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் அமெரிக்காவுக்கு சென்று போட்டோ எடுக்க வேண்டியது தானே !!)



இது ஆஸ்கர் ரவிசந்திரன் பணம். அவருக்கு இல்லாத கவலை. உனக்கு எதுக்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு படத்தின் வெற்றி மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் தருமானால், அவனுக்கு அடுத்த இரண்டு படம் தயாரிக்க நம்பிக்கை பிறக்கிறது. இன்னும் இரண்டு படங்கள் இயக்க இயக்குனருக்கு, அதில் வேலை செய்யும் தொழிற்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி நடந்தால் சினிமாவுக்கு நல்லது.

அதற்கு மாறாக ஒரு படம் தோல்வி அடையும் போது அந்த படத்தின் தயாரிப்பாளர் திரைப்படத் துறையில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறார். எத்தனையோ தயாரிப்பார்கள் முதல் படத்தோல்வியால் திரையுலகில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.

இதேப் போன்று தான் விநியோகஸ்தர்களும். அவர்கள் வாங்கும் படம் வெற்றிப் பெற்றால் தொடர்ந்து தொழிலில் இருக்க முடியும். இல்லையென்றால் அவர்களும் ஒதுங்க வேண்டியது தான். 

தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தேவை பணம் தான். அதை மறுப்பதற்கில்லை. அவர்களுக்கு சினிமாப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், சினிமா உருவாக இவர்கள் தேவை. (நடிகைகளுக்காக அவர்கள் செய்யும் செலவு இங்கு விவாதிக்க வேண்டாம்.)

படைப்பாளியே மக்களிடம் படத்தை கொண்டு செல்லும் வேலையை செய்ய முடியாது. அப்படி செய்தால் அவனால் அடுத்த படைப்பை சரியாக கொடுக்க முடியாது. திரைத்துறையில் எல்லா இயக்குநர்களும் சசிக்குமாரை போல் சொந்தப்பணத்தை முதலீடு செய்து தங்கள் திறமையை நிருபிக்க முடியாது.

இன்னும் கண்ணுக்கு தெரியாத பாலுமகேந்திராக்கள், மணிரத்னங்கள் திரையுலகில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் இருக்கிறார்கள். சங்கர் போன்ற இயக்குனர்கள் ஒரு தயாரிப்பாளர் பணத்தை இரண்டு வருடத்திற்கு குத்தகை எடுத்துக் கொள்வது எப்படி மன்னிக்க முடியும்.



நாளை விக்ரமுக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கலாம். படம் தோல்வி அடைந்தாலும், சங்கர் அடுத்த படத்தை இயக்க சென்றுவிடுவார்.

ஆஸ்கர் ரவிசந்திரனிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும், படம் தோல்வி அடைந்தால் கண்டிப்பாக அடுத்தப்படத்தின் வேலையில் இறங்க ஆறு மாதாவாது ஆகும். இதனால், ஒரு இயக்குனருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பரிப்போகிறது. ஒரு படம் உருவாகாமல் போகிறது.

ஐ பாடல் வெளியீட்டு... பிரமாண்டமல்ல. ஆஸ்கர் ரவிச்சந்திரன், சங்கர் இருவரிகளின் பணத்திமிர்.

பின்குறிப்பு : பணத்தை வீணாக்குவதில் சங்கர் மிகப்பெரிய குற்றவாளி. அவரைப் போல் புது இயக்குனர் தொடங்கி முன்னனி இயக்குனர் வரை அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் பணத்தை வீணாக்கிக் கொண்டு தான் இருக்கிறார். 

இயக்குனராக ஒருவன் செய்யும் தண்டச் செலவு இன்னொரு இயக்குனரின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கிறது. 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails