வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, October 31, 2014

THE GHOST WRITER (2010)

Roman Polanski யின் Carnage படத்தைப் பற்றி பதிவிடும் போது ’கோஸ்ட் ரைட்டர்’ படத்தை பற்றிய சில குறிப்புகள் சொல்லியிருந்தேன்.

ஒரு படத்தை விவாதிக்கும் போது அந்த படத்தின் கதையை முழுவதுமாக சொல்லக் கூடாது என்று நினைப்பவன் நான். அதுவும் மர்ம படங்கள் என்றால் முக்கியமான மர்ம முடிச்சை பற்றி வெளியே சொன்னால் ஸ்வாரஸ்யம் போய்விடும் என்று சொல்வதில்லை. ஆனால், ’கோஸ்ட் ரைட்டர்’ படத்தைப் பற்றி பேசும் போது கண்டிப்பாக இந்த இரண்டையும் சொல்லிதான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், அந்த படத்தின் பின்னிருக்கும் அரசியல் களன்.


ஆரம்பக் காட்சியில், மர்மமான முறையில் ஒரு எழுத்தாளர் இறந்ததில் இருந்து படம் தொடங்குகிறது. அந்த எழுத்தாளர் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் அடம் லாங்யின் வாழ்க்கை வரலாற்றை எழுத வந்தவன். அமெரிக்கத் தொடுத்த போரில் பிரிட்டன் பிரதமராக இவர் ஆதரித்திருக்கிறார். அதனால், ‘போர் குற்றவாளி’ என்று இவரது அமைச்சரவையில் இருந்தவர்களே விமர்த்தார்கள். தனது வாழ்க்கை வரலாறு நூல் மூலம் அனைத்து விமர்சனத்திற்கும் பதில் கூற வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், அடம் லாங் தனது வாழ்க்கை வரலாற்றை எழுத புது எழுத்தாளரை நியமிக்கிறார்.

முன்னாள் பிரதமர் வாழ்க்கை வரலாற்றை எழுத 'கோஸ்ட்' வருகிறார். அதாவது, பிரதமர் எழுதுவது போல் அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும். புத்தகத்தில் பிரதமரின் பெயர் இருக்கும். எழுதியவரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படாது. புது எழுத்தாளர் முன்னாள் பிரதம மந்திரி ஒய்வு விடுதியில் தங்க வைக்கப்படுகிறார். தனது ஓய்வு நாட்கள் முடிவதற்குள், புத்தகத்திற்கு தேவையான தகவலை பெற்று எழுத வேண்டும் என்று அடம் லாங் சொல்கிறார்.

முன்பு வந்த எழுத்தாளர் பாதிக்கு மேல் முடித்து வைத்திருந்ததார். இருந்தாலும் அது முழுமையானதாக இல்லை. ஆரம்பத்தில் இருந்து புதிதாக தொடங்க வேண்டும் என்கிறார். அங்கு இருந்து எந்த குறிப்புகள் வெளியே எடுத்தச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த ஓய்வு விடுதியில் நடக்கும் சில விஷ்யங்கள் அவனுக்கு மர்மமாக இருக்கிறது.

இறந்துப் போன எழுத்தாளர் இறக்கும் முன் பிரதம மந்திரியோடு வாக்குவாதம் செய்திருக்கிறான். தன் மேல் சுமத்த பட்ட போர்க் குற்றத்திற்கு புத்தகத்தில் விளக்கம் சரியாக அளிக்கவில்லை என்று கோஸ்ட் நினைக்கிறான். இறந்த எழுத்தாளர் காரில் சாகும் போது ஹார்வட் பேராசிரியரை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். கோஸ்ட்டும் அந்த பேராசிரியரை சந்தித்து என்ன நடந்தது என்று விசாரிக்கிறான்.

இதற்கிடையில், முன்னாள் பிரதம மந்திரி அடம் லாங்யின் மனைவியோடு கோஸ்ட்டுக்கு நெருக்கம் ஏற்ப்படுகிறது. அவள் மூலம் சில தகவல்கள் கோஸ்ட் தெரிந்துக் கொள்கிறான்.

பல முக்கிய அரசியல் தகவல் தெரிந்துக் கொண்ட கோஸ்ட் முன்னாள் பிரதமர் அடம் லாங்கிடம் சொல்லலாம் என்று நினைக்கும் போது போருக்கு எதிராக போராட்டக்காரர்களிடம் இருந்த ஒருவன் அவரை சுட்டுக் கொண்டு விடுகிறான். காவலர்களும் சுட்டவனை கொன்று விடுகிறார்கள். முன்னாள் பிரதமர் மீது ‘போர் குற்றம்’ இருந்த நிலையில் அவர் இறந்தது பெரிய சர்ச்சையை கிளப்புகிறது.

அடம் லாங் இறப்பதகு முன் எழுதிய நூல் என்பதால், அவரது வாழ்க்கை வரலாறு விற்பனையில் சாதனை படைக்கிறது. இறந்த பழைய எழுத்தாளரின் சில குறிப்புகள் புத்தகத்தில் சேர்க்கப்பட்டாமல் இருந்தது. கோஸ்ட் அந்த இறந்த எழுத்தாளரின் குறிப்புகள் மீண்டும் ஒரு முறை பார்க்கும் போது ஒரு தகவல் கிடைக்கிறது. அதை கண்டதும் அதிர்க்கிறான்.

"முன்னாள் பிரதமரின் மனைவி சி.ஐ.ஏ ஏஜேன்ட். அவளை ஹார்வர்ட் பல்கலலைக்கழகத்தில் இருப்பவர் பயன்படுத்திக் கொண்டார்" என்று இருக்கிறது. அதாவது, பிரிட்டன் பிரதமரின் மனைவி உதவி மூலம் தங்கள் தேவைக்கு ஏற்றார் போல் அமெரிக்கா பயன்படுத்தி கொண்டது. அவரை போர் குற்றம் செய்ய வைத்திருக்கிறது. தனக்கு இந்த உண்மை தெரிந்துவிட்டது என்பதை ஒரு பேப்பரில் எழுதி பிரதமர் மனைவிக்கு கொடுக்கிறான்.

கோஸ்ட் வெளியே செல்லும் போது, விபத்து நடந்தது போல் சத்தம் கேட்கிறது. கோஸ்ட் கையில் இருந்த காகிதங்கள் பறக்க, நடைப்பாதையில் நடந்தவர்கள் அதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

அரசியலில் எத்தனையோ மர்மங்கள் இருக்கிறது. அரசியல் கொலைகளில் அதைவிட மர்மங்கள் நிறைந்திருக்கிறது. மோகந்தாஸ் காந்தி படுகொலை, ஜென்னடி படுகொலை தொடங்கி இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி படுகொலை வரை இன்னும் எத்தனையோ படுகொலைகளில் தெரியப்படாத உண்மைகள் இருக்கின்றன. அதை அறிந்து கொள்ள ஸ்வரஸ்யம் இருக்கும். அதே சமயம் அதன்பின் ஆபத்தும் இருக்கிறது.

சில அரசியல் உண்மைகள் சாமான்யனுக்கு தெரியக் கூடாது. அதை தான் எல்லா அரசாங்கம் விரும்பும். அப்படி தெரிந்துக் கொண்டால் தற்கொலையும், விபத்துக்களும் இந்த படத்தில் முடிவில் வருவது போல் தான் நடக்கும்.

அமெரிக்காவை விமர்சனம் செய்வது போல் இருந்ததால் இந்த படம் ஆஸ்கருக்கு பரிசீலனை செய்யப்படவில்லை. ஆனால், மற்ற இடங்களில் பல விருதுகள் வாங்கி இருக்கிறது. 

இந்த படத்தை யாரும் இந்திய மொழியில் எடுக்க முடியாது. எடுத்தால் தடைவிதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ( இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.)

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

நன்றி திரு Guhan Kannan.

LinkWithin

Related Posts with Thumbnails