வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, November 26, 2014

Mitr, My friend

49வது தேசிய விருது விழங்கும் விழாவில் சோபனாவுக்கு சிறந்த நடிகை விருதும், சிறந்த ஆங்கிலப்படத்திற்கான தேசிய விருதும் பெற்றப்படம்.

லஷ்மி பிரித்வியை மணந்துக் கொண்டு இந்தியாவில் இருந்து கலிப்போர்னியாவில் குடி புகுகிறாள். அவர்களுக்கு மகள் பிறக்கிறது. அங்கையே வளர்வதால், லஷ்மியின் பருவ வயதில் மகள் திவ்யா வெளிநாட்டு கலாச்சாரத்தில் இருக்கிறாள். அம்மா லஷ்மியால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மகளுக்கும், அம்மாவுக்கும் நடக்கும் சண்டையில் அப்பா பிரித்வி புரிந்துக் கொண்டாலும், மனைவியின் உணர்வுக்கு அதிகம் மதிப்பு கொடுப்பதில்லை.


பல நாள் தனிமையில் இருக்கும் லஷ்மி இண்டர்நெட் சாட்டிங்யில் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. முகம் தெரியாத நபரோடு தனது மனக்கவலையை பகிர்கிறாள். பக்கத்து வீட்டில் குடிவந்திருக்கும் சிறுவனும், அவனது அண்ணன் ஸ்டிவ்வும் அவ்வப்போது பேசுகிறாள். ஒரு நாள் திவ்யா தனது ஆண் நண்பனை முத்தமிடுவதை பார்த்த லஷ்மி, அவளை அரைகிறாள். கோபத்தில் திவ்யா வீட்டை விட்டு செல்கிறாள். இதனால், பிரித்விக்கும், லஷ்மிக்கும் உள்ள இடைவேளை இன்னும் அதிகமாகிறது.

தனது தனிமையைப் போக்க இண்டர்நெட் நண்பன் சொன்னது போல் தனக்கு பிடித்த வேலையில் கனவம் செலுத்துகிறாள். மனைவி, அம்மா ஆனப் பிறகு தான் செய்ய மறந்ததையை எல்லாம் செய்து பார்க்கிறாள். தனது மனைவி மாற்றத்தை புரிந்துக் கொண்ட பிரித்வி அவளை சந்தேகப்படுகிறான். கோபத்தில் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு செல்கிறான்.

கணவன் வீட்டில் இல்லை. மகள் புரிந்துக் கொள்ளாமல் விட்டு சென்றுவிட்டாள். தனிமையில் வாடும் ஒரு நடுத்தர வயது பெண்ணின் சோகம், அதை எதிர்க்கொள்ளும் திறன் தான் படம்.

படம் வந்து பத்து வருடங்கள் மேலாகிறது. இன்றைய இணையப் புரட்சியில் ஏறக்குறைய கணவன் – மனைவி உறவு மட்டுமல்லாமல் பல உறவுகள் இணையத்தில் மட்டுமே வாழ்கிறது என்பதை இந்த படம் உணர்த்துகிறது. இணையத்தில் பிடித்தது கேட்கும் நாம் நேரில் பழகும் போது கேட்பதில்லை. விசாரிப்பதும் இல்லை. இணையம் / மோபைல் என்ற ‘Virtual’ உலகத்திற்கு நாம் பலகிவிட்டோம் என்பதை பல சம்பவங்கள் உணர்த்துகிறது.

கதையின் ஒரு வரி எடுத்துக் கொண்டால் English Vinglish படத்திற்கும் Mitr, my friend படத்திற்கும் எந்த வித்தியாசம் இல்லை. கணவன், மகளிடம் அங்கிகாரம் தேட நினைக்கும் குடும்பப் பெண்ணின் மனப் போராட்டம் தான் கதை. ஆனால், Mitr,My friend படத்தை இயக்கிய ரேவதி நேர்க்கோட்டில் கதையை சொல்லியிருக்கிறார். ஆனால், English Vinglish படத்தில் கமர்ஷியலாக ஆங்கிலம் பேச தெரியாத அம்மா பாத்திரத்தில் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.

இந்தப்படத்தில் 'நடிகை 'ரேவதி இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருது கிடைத்தது. ஆனால், அதன் பிறகு ரேவதி என்ற இயக்குனரை பார்க்க முடியவில்லை.

பெண் இயக்குனர்கள் சினிமாவில் தொடர்ந்து 'இயக்குனராக' ஏன் செயல்ப்பட முடியவில்லை என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கிறது.

Wednesday, November 19, 2014

சினிமா 1913 -2013 : 10. மறக்க முடியாத நகைச்சுவை கலைஞர்கள் (1930-50)

காலையில் ஒரு சிலர் பூங்காவில் வாய்விட்டு சிரித்து பயிற்சி எடுப்பதை பார்த்து வருகிறோம். பொருள் தேடும் வாழ்க்கையில் பலர் முகத்தில் சிரிப்பு எப்படி இருக்கும் என்பதை அவர்களே மறந்துவிட்டார்கள். உடம்பில் இருக்கும் அத்தனை உறுப்புகளும் இயல்பாய் இயங்க இப்போது செய்ற்கை சிரிப்பு தேவைப்படுகிறது.

சிரிப்பு. நமக்கும், மிருகத்துக்கும் உள்ள வேறு. 

என்.எஸ்.கிருஷ்ணன் 

’சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் சொல்லும் முன்பே, மக்களுக்கு புரிய வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள். 

1935ல் மேனகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 1936ல் ‘சதிலீலாவதி’, ‘வசந்தசேனா’ போன்ற படங்களில் நடிக்கும்போதே மதுரம் அம்மாவை திருமணம் செய்துக் கொண்டார். 

கலைவாணர் முற்போக்கு சிந்தனைகள் உடையவர். தனது படங்களிலும் தனது கருத்துக்களை நகைச்சுவையாக சொல்லி மக்களை சிரிக்க வைத்தவர். இன்று பல நகைச்சுவை நடிகர் கையாலும் கிண்டலும், கேலியும் கலைவாணர் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணம் செய்கிறார்கள்.

‘அம்பிகாபதி’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் முதன் முதலாக நடித்தார். அன்று தொடங்கிய அவர்களது நட்பு லட்சுமிகாந்தன் வழக்கு வரை தொடர்ந்தது. இந்த வழக்கு இரண்டு பெரும் கலைஞர்களை வாழ்க்கையிலும், நடிப்புலகத்திலும் புயலை வீசியது. 

வழக்கில் இருந்து மீண்டு வந்த கலைவாணர் நடிப்போடு படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். 

1957ல் தனது 49 வயதில் இறந்தார். 



டி.ஏ.மதுரம் 

என்.எஸ்.கே – டி.கே.மதுரம் அவர்களைப் போன்ற கலை தம்பதிகள் என்று சொல்லுவதை விட எங்கும் காண முடியாத தம்பதிகள் என்று சொல்லலாம். கணவன் – மனைவி சேர்ந்து நூறுக்கு மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். 

கணவரின் எல்லா சுகத் துக்கத்திலும் பங்கு கொண்டு இருக்கிறார். கலைவாணர் சிறையில் இருக்கும் போது அவரது நாடக சபாவை திறம்பட நிறுவாகம் செய்தார். கலைவாணர் சிறையில் இருக்கும் போது ‘பைத்தியக்காரன்’ படத்தை தயாரித்தார். 

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட “சந்திரலேகா” படத்தில் என்.எஸ்.லே - டி.ஏ.மதுரம் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது. கலைவாணர் மறைவுக்கு பிறகு ஒரு சிலப்படங்கள் நடித்தார். மே 23, 1974 காலாமானார். 

காளி என். ரத்தினம் 

கலைவாணர் காலத்தில் புகழ்ப் பெற்ற இன்னொரு நகைச்சுவை நடிகர் காளி என். ரத்தினம் அவர்கள். நடிப்பு, பேச்சு, பாட்டு பாடுவது என்று தனி திறமை வாய்ந்த அவரை ‘ரத்தின வாத்தியார்’ என்று பலராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். 

1936ல் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உரிமையாளரான எஸ்.எம்.சச்சிதானந்தம் பிள்ளையின் மேற்பார்வையில் உருவான ‘பதிபக்தி’ படத்தின் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு இரண்டு வேடங்கள் !!! 

அதைத் தொடர்ந்து சந்திரகாந்தா, ராஜமோஹன், பஞ்சாப் கேசரி, மாத்ருபூமி, போலி பஞ்சாலி, போன்ற பல படங்களில் நடித்தார். 

சந்திரகாந்தா படத்தில் “சுவாமிகளே ! யோகாப்பியாசம் செய்யலாமா?” என்று போலி சாமியார்களை சாடும்படி இரட்டை அர்த்த வசனங்களை பேசியிருக்கிறார். ஆனால், கலைவாணரைப் போல் பகுத்தறிவு, தீண்டாமை, அடிமைத் தனம் சமுக சிந்தனைகள் இவர் தனது நகைச்சுவையில் சேர்த்ததில்லை. தனது நகைச்சுவையில் கிராமிய பாணியை அதிகம் கலந்து நடித்திருக்கிறார்.


டி.ஆர்.ராமசந்திரன் 

 நாடகங்கள் நடித்தவாரே சினிமாவில் நடித்து புகழ்ப் பெற்ற நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமசந்திரன் அவர்கள். 

ஏவி.எம். செட்டியார் இயக்கிய முதல் படமான ’சபாபதி’ படத்தில் அறிமுகமானார். சபாபதியாக டி.ஆர்.ராமசந்திரனும், வேலைக்காரனாக காளி என்.ரத்தினமும் நடித்தக் காட்சிகள் அந்தக் காலத்தில் புகழ் பெற்றது. 

‘ஸ்ரீ வள்ளி’ போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். ‘வாழ்க்கை’ படம் இவரை நாயகன் அந்தஸ்த்தைப் பெற்று தந்தது. ஒரு பக்கம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, வித்யாபதி போன்ற நாயகனாகவும், கள்வனின் காதலி, வண்ணக்கிளி போன்ற படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடிப்பார். 

அஞ்சலி தேவி தயாரித்த ‘அடுத்த வீட்டு பெண்’ படத்தில் இவரும், தங்கவேலு செய்த நகைச்சுவை காட்சி இன்று எல்லா மொழிகளிலும் ரீமேக் வடிவத்தில் பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கே.சாரங்கபாணி 

அந்த காலத்தில் நகைச்சுவை கலந்த அப்பா பாத்திரத்தில் பொருந்தக் கூடிய நடிகர் கே.சாரங்கபாணி அவர்கள். எல்லா இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் மரியாதையுடன் பழகக் கூடிய நடிகர் என்று பெயர் எடுத்தவர்.

’வேதாள உலகம்’ படத்தில் தன்னை கொல்ல வந்த ராட்சர்களை வயிறு முழுக்க சாப்பிட வைப்பார். ’மிஸ்சியம்மா’ படத்தில் ஒவ்வொரு விஷயத்தை சொல்லுவதற்கு பணத்தை பெறுவதும் பல நகைச்சுவை நடிப்பில் பல பரிமானங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 துகாரம் படத்தில் தொடங்கி பந்துலுவின் ‘தங்கமலை ரகசியம்’, டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘மோகனசுந்தரம், சிவாஜியின் ‘தெய்வப்பிறவி’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

நன்றி : நம் உரத்தசிந்தனை, நவம்பர், இதழ், 2014

Thursday, November 13, 2014

உங்கள எப்படி கூப்பிடுறது ?

அஞ்சலிலியை எதுக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் அழைத்து வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. அவளுக்கு உதவி செய்கிறேனா, பிரச்சனை கொடுக்க போகிறேனா என்பது கூட புரியவில்லை. அவள் கேட்டாள் என்பதற்காக அவளுக்காக செய்கிறேன்.

"என்ன கல்யாணம் பண்ணிக்க தான் கூட்டிட்டு போறீங்களா ?"

இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. இருந்தாலும் அவளின் உடல் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. பதினாறு, பதினெழு வயது தான். யாராக இருந்தாலும் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசை வரும்.

"எதுக்கு சிரிக்கிறீங்கனு தெரியது. நா கல்யாணத்த பத்தி ஆசப் படக்கூடாதா ?"

 "அப்படியில்ல. சும்மா தான் சிரிச்சேன்."

"நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது” என்று சொல்லி, கொஞ்ச நேரத்தில் “உங்கள எப்படி கூப்பிடுறது ?" என்றாள்.

என்னுடன் வந்ததில் இருந்து பல முறை இந்த கேள்வியை கேட்டு விட்டாள். அவளாகவே அதற்கு பதில் சொல்லிக் கொண்டாள். நான் எதுவும் பேசவில்லை. சொல்லவும் விருப்பமில்லை.

"உங்க பேரு சங்கர் தானே. சங்கர் கூப்பிடட்டா !! " நான் அவளை பார்த்து முறைத்தேன். எனக்கு இருபத்தியெட்டு வயதாகிறது. என்னைவிட சிறிய பெண் பெயர் சொல்லி அழைப்பதை என்னால் ரசிக்க முடியவில்லை.

"அண்ணானு கூப்பிட முடியாது. சார் சொன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசம் இருக்காது. எப்படி கூப்பிடட்டும் நீங்களே சொல்லுங்க ?"

"நீ எதுக்கு என்ன கூப்பிடனும். உன்ன பஸ் எத்திவிட்டுறேன். அதுக்கப்புறம் நீ யாரோ நா யாரோ"

"அப்போ எதுக்காக எனக்கு எச்.ஐ.வி டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க...?" அஞ்சலி கேட்டாள்.

**

"சங்கர் ! ஃப்ரீயா இருக்கியாடா?" மதன் குரலில் ஓர் எதிர்பார்ப்பு கலந்து இருந்தது.

"ஃப்ரீயா தான்டா இருக்கேன் ! "

"சரஸக்கா வீட்டுல புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கு, சூப்பர்  கம்பேனி தரா. நானே ரெண்டு வாட்டி போனேன். நீ வரீயா."

"போடா ! நானே டென்ஷன்ல இருக்கேன்."

"என்னாச்சு ?"

"ரெண்டு வாரம் முன்னாடி பாண்டிக்கு போகும் பொது சூப்பர் பிகர் கம்பேனி கொடுத்தா. காண்டம் கட்டானது கூட தெரியாமா பண்ணியிருக்கேன். அப்போ தெரியல. இப்போ நினச்சா பயமா இருக்கு."

"ஒண்ணுமாகாது. இப்போ எல்லாம் நம்பல விட பொண்ணுங்க உஷார். டென்ஷனாகாத. சரஸக்கா வீட்டுல இருக்குற பொண்ண இரண்டு வாரத்துல சிங்கப்பூர் பேக்-அப் பண்ணுறாங்க. ஒரு வாட்டி ஜாலிய இருந்துட்டு வரலாம்."

சங்கர் மனசு சபலப்பட்டது. இரண்டு வாரம் முன்பு நடந்தை நினைத்து கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை விட மனமில்லை.

 "சரிடா போகலாம்."

 **

"அக்கா... அக்கா..."

"போடா தேவுடியா மகனே. இன்னொரு வாட்டி அந்த பொண்ண பத்தி பேசிட்டு இங்க வந்த உன்ன கொன்னுடுவேன்."

சரஸ்வதி அக்கா கோபமாக போனை வைத்தாள். 'அக்கா' அப்படி சொல்லி பழகிவிட்டது. அந்த வார்த்தைக்கு அவள் தகுதியற்றவள். மாமா வேலை செய்பவள். இருந்தாலும், என்னை போன்ற திருமணமாகாவதர்களின் உடல் பசியை தீர்த்து வைக்க பல பெண்களை வைத்திருக்கிறாள். அதற்காகவது அவளை 'அக்கா' என்று அழைக்க வேண்டியதாக இருக்கிறது.

அங்கு இருக்கும் எல்லா பெண்களை நிர்வாணமாக பார்த்திருக்கிறேன். ஆனால், அஞ்சலியிடம் நிர்வாணத்தை மீறி என்னை பாதித்திருக்கிறது. கண்டிப்பாக காதல் இல்லை. இப்போது, அதற்கு தகுதியானவன் நான் இல்லை. ஆனால், என்னால் அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாளா என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 "இன்னொரு தபா அந்த சங்கர் பய வந்தா சேத்துகாதீங்க..." கோபமாக லோகுவிடம் சொல்லிவிடு சாரஸ்வதி தனது இரண்டு அடியாட்களோடு சிங்கப்பூர் பார்ட்டியை பார்க்க வெளியே சென்றாள்.

எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. சரஸ்வதி அக்காவை சந்திக்க அவள் இடத்திற்கே சென்றுவிட்டேன்.

"டேய் ! உன்னதா அக்கா வர வேண்டாம் சொல்லிட்டாங்கள. அப்ப எதுக்கு மறுதாப வந்த..." லோகு என்னை வழி மறித்தான்

"இல்ல அண்ண. போன வாட்டி பணம் தரல. அந்த கோபம் தான் அக்காவுக்கு. இதோ பாருங்க போன வாட்டி வந்ததும் சேர்த்து இப்போ பணம் கொண்டு வந்திருக்கேன்."

 "சரி... சரி.. கொடு." என்று பணத்தை வாங்கி லோகு எண்ணி பார்த்தான்.

"எதுக்கு 5000 அதிகமா கொடுத்திருக்க."

 "அந்த அஞ்சலி பொண்ண ஒரு நாள் கூட்டிட்டு பொய் ஜாலிய இருக்கலாம் தான்."

"என்னது ஓவுட்டிங்க.. அப்போன 10000 ரூபாய் அச்சே."

"என்ன அண்ணே ! ரெகுலர் கஸ்டமர் அட்ஜஸ்ட் பண்ணமாட்டிங்களா..?"

"வேணும்னா இங்கையே இராத்திரி புல்லா இரு. வெளியே அனுப்ப முடியாது"

முடியாத காரியம். எப்படியாவது அஞ்சலியை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும். வேறு வழியில்லை அவன் கேட்கும் பணத்தை கொடுத்தேன். இது வரை செய்து வந்த பாவத்திற்கு அது பிராயிசித்தம்.

**




"என்ன சார் ஹோட்டல்லுக்கு போகலையா. இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க ?"

"ஒரு டெஸ்ட் எடுத்துட்டு போகலாம்..." என்றேன். அஞ்சலி உள் மனதில் சந்தோஷம்.

"அப்போ என்ன காப்பாத்த போறீங்களா...?"

"உனக்கு ப்ளட் டெஸ்ட் தான் கூட்டிட்டு வந்தேன். நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத."

அஞ்சலி உள்ளுக்குள் நம்பிக்கையிருந்தது. எப்படியாது இந்த நரகத்தில் இருந்து விடுபடுவோம் என்று.

சங்கர் தன்னை காப்பாற்றுவான் என்று நம்பினாள். தன்னை திருமணம் செய்துக் கொண்டால் சரி. வைத்துக் கொண்டாலும் சரி. பிரச்சனையில்லை. வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது. அவ்வளவு தான்.

ஒரு வேளை சரஸ்வதி மாதிரி வேறு யாரிடமாவது தன்னை விற்றுவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தாள். அது பிரச்சனையாக இருக்க போவதில்லை. இப்போது வாழ்கிற வாழ்க்கையை இன்னொரு இடத்தில் வாழப்போகிறோம். ஆனால், சரஸ்வதி வீட்டில் இருந்தால் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். தனது இளமையும், பணத்தை முழுவதுமாக அபகரிக்கப்படும். மீண்டும் இந்தியாவுக்கு வருவது, தனது அம்மாவை தம்பியை பார்ப்பது நடக்காத காரியம். அதனால், தன்னிடம் வரும் கஸ்டமர்களை ஒவ்வொரிடம் இங்கிருந்து அழைத்து செல்லும் படி கெஞ்சுவாள். அவர்கள் சொல்லுவதை எல்லாம் செய்வாள்.

ஆனால், அவளால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. சரஸ்வதிக்கு நெருக்கமானவர்கள் அவள் சொன்னதை போட்டுக் கொடுத்துவிடுவார்கள். ஒரு சிலர் அவள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முடிந்தவரை அவளை அனுபவிப்பார்கள்.

இப்போதைக்கு அஞ்சலிக்கு ஒரே வழி சங்கர் நம்பித்தான் ஆக வேண்டும். ப்ளேட் டெஸ்ட் ரிஸல்ட் வந்தது. சங்கர் நிம்மதி பெருமூச்சு விட்டான். அஞ்சலியை தனது பைக்கில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்றான்.

**

"அறிவுக்கெட்ட முண்டோம். அந்த சங்கர இங்க சேக்காத சொன்னா. ஒக்காலி அவன் கூட அனுப்பி வச்சிருக்க..."

"இல்லக்கா ! அவ போன வாடி தர வேண்டிய பணத்த கொடுத்தான்."

 "ஓ....தா.. அவள சிங்கப்பூர் பார்ட்டிக்கு இரண்டு லட்சம் விலை பேசி வச்சிருக்கேன்"

"எங்கக்கா போகப் போறான். ஆச தீர்ந்ததும் இங்க வந்து விட்டாகனும்."

"மயிரு... அவன் ஆசப்பட்டு கூட்டிட்டு போகல. காப்பாத்தனும் கூட்டிட்டு போயிருக்கான். அவன் பிரண்ட் மதன் தெரியும்ல."

 "தெரியும்க்கா..."

 "அவன வச்சி அந்த பையன தேடுங்க.. பஸ் ஸ்டெண்ட், ரயில்வே ஸ்டேஷன் இருக்குற நம்ப ஆளுங்க கிட்ட சொல்லிவை. ஓடுகாலி சிறுக்கி இன்னைக்கு இராத்திரிக்குள்ள வந்தாகனும்"

**

"உங்கள என்ன கூப்பிடுறது?" அஞ்சலி கேள்விக்கு எப்படி சொல்வது.

'அண்ணா' என்று சொல்ல முடியாது. எங்கள் உறவு அப்படியில்லை. பண்ணிரண்டு வயது இடைவேளை உள்ள ஆண், பெணுக்கு அண்ணன், தங்கை தவிர வேறு நாகரிகமாக உறவு சமூகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். வண்டி கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் வந்து நின்றது.

"என்ன கல்யாண பண்ணிக்க தான் கூட்டிட்டு போறீங்களா ?"

"எதுக்கு சிரிக்கீறீங்கனு தெரியது. நா கல்யாணத்த பத்தி ஆசப் படக்கூடாதா ?" 

"அப்படியில்ல. சும்மா தான் சிரித்தேன்."

 "நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது” என்று சொல்லி, கொஞ்ச நேரத்தில் “உங்கள எப்படி கூப்பிடுறது ?" என்றாள். 

"உங்க பேரு சங்கர் தானே. சங்கர் கூப்பிடட்டா" நான் அவளை பார்த்து முறைத்தேன். 

எனக்கு இருபத்தியெட்டு வயதாகிறது. என்னைவிட சிறிய பெண் வைத்து அழைப்பது என்னால் ரசிக்க முடியவில்லை. 

"அண்ணானு கூப்பிட முடியாது. சார் சொன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கு வித்தியாசம் இருக்காது. எப்படி கூப்பிடட்டும் நீங்களே சொல்லுங்க ?" 

 "நீ எதுக்கு என்ன கூப்பிடனும். உன்ன பஸ் எத்திவிட்டுறேன். அதுக்கப்புறம் நீ யாரோ நா யாரோ" 

"அப்போ எதுக்காக எனக்கு எச்.ஐ.வி டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க...?" 

அஞ்சலி கேட்டாள். என்னால் பதில் கூற முடியவில்லை. பதில் கூற நேரமும் இல்லை. சரஸ்வதி அக்காவுக்கு பஸ் ஸ்டெண்டிலும், ரயில் நிலையத்திலும் ஏஜெண்ட்டுகள் அதிகம். நிறைய கஸ்டமர்கள் இங்கிருந்து தான் பிடிப்பாள். நாங்கள் வந்திருபது கண்டிப்பாக இந்நேரம் அவளுக்கு தெரிந்திருக்கும். அதற்குள், அஞ்சலியை பாதுகாப்பாக ஒரு பஸ்ஸில் ஏற்றி விட வேண்டும்.

"நீ எந்த ஊருக்கு போக ஆசைப்படுற..."

"உங்க ஊருக்கு தான்."

"நா உன் கூட வரல. வரவும் முடியாது. இந்தா பணத்த வச்சிக்கோ.." என்று என் கையில் இருக்கும் ஐயாயிரத்தை தந்தேன்.

"இந்த தொழில விட்டு நல்ல படியா வேற வேலைய பாத்துக்கோ. சரஸ்வதி அக்கா மாதிரியான ஆளுங்க உன் வயசையும், உடம்பையும் எப்படி பணம் பண்ணலாம் தான் யோசிப்பாங்க..."

 "உங்களுக்கு என்கிட்ட இருந்து எதுவுமே வேண்டாம்னா. எதுக்கு என்ன காப்பாதுனீங்க..." அவள் தடுமாற்றம் தெரிந்தது. கொஞ்சம் காதல் கலந்திருப்பதாக தெரிந்தது. ஆனால், அதையெல்லாம் உணர்ந்து அவளிடம் அன்பாக பேச நேரமில்லை. சரஸ்வதி அக்காவின் ஆட்கள் வருவது போல் தெரிந்தது. அஞ்சலியை ஆந்திராவுக்கு போகும் பஸில் ஏற்றிவிட்டேன்.

அவளின் கண்கள் கலங்கி இருந்தது. அதை துடைக்கவோ, ஆறுதல் சொல்லவோ தோன்றவில்லை. அவள் பாதுகாப்பாக சென்றாள் போதும். சரஸ்ஸக்காவின் ஆட்கள் என்னை பார்த்துவிட்டார்கள். இங்கிருந்து நான் ஓட வேண்டும். அப்போது தான் என்னை துறத்திக் கொண்டு வருவார்கள். அஞ்சலிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஓடத் தொடங்கினேன்.

சரஸ்வதியின் ஆட்களும் என்னை தொரத்தத் தொடங்கினர்.அவர்களை ஏமாற்றிவிட்டு என் வண்டியை எடுக்க சென்றேன். என் வாண்டியை அவர்கள் நோட்டம் விட்டிருப்பார்கள் என்பதை நான் யோசிக்கவில்லை. கழுத்தில் பலமாக ஒருவன் தாக்கினான். நான் மயக்கமானேன். அவர்களின் மாருதி வண்டியில் ஏற்றினான். அங்கிருந்த பயணிகளும், காவலர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தண்ணியடித்தவனை தூக்கிக் கொண்டு செல்வது போல் சென்றனர்.

 சரஸ்வதி அக்கா அந்த வண்டியில் இருந்தாள். கோபமாக என்னை அறைந்தாள்.

"தேவிடியா மவனே... பத்து நிமிஷம் படுத்தானு அவள காப்பாதுறீயா. எங்கடா அவ."

 "சொல்ல முடியாது."

 மீண்டு அடிவிழுந்தது. நெற்றி போட்டில் லோகு துப்பாகி வைத்தான். அப்பவும் சொல்லவும் முடியாது என்றேன்.

"அவள விலை பேசிட்டேன். உனக்கு வேண்ணும்னா வேற பொண்ண எடுத்துக்க. வீணா லவ்வு கிவ்வு சொல்லி, அவளுக்காக அடி வாங்கி சாகதடா..."

எனக்கு சிரிப்பு தான் வந்தது.  ’காதல்’ அந்த வார்த்தைக்கு தகுதியற்றவன் நான்.

"இன்னும் கொஞ்ச நாள்ல எயிட்ஸால சாகப்போறேன். எனக்கு லவ்வா... போடி. தேவுடியா முண்டோம்" என்று அலட்சியமாக சொல்லி, என் தலையில் வைத்த லோகுவின் துப்பாக்கியை நானே அழுத்திக் கொண்டேன்.

வண்டியில் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் அங்கு வந்தனர்.

'உங்கள எப்படி கூப்பிடுறது' என்ற அவளின் குரல் மட்டும் என் காதில் ஒளித்துக் கொண்டே இருக்கிறது. எனக்கும் அவளுக்கும் இருக்கும் உறவுக்கு நாகரிகமான பெயரை நீங்களாவது சொல்லுங்கள் !!!

Monday, November 3, 2014

தமிழ் சினிமா 100 - பூபால் சிங் எதிர்வினை

நம் உரத்தசிந்தனை மாத இதழில் ‘தமிழ் சினிமா 100’ பற்றிய வரலாறு தொடர் எழுதி வருகிறேன். செப்டம்பர் மாத இதழில் 1930-40 களில் அறிமுகமாகி 1950-60 குணச்சித்திர நடிகர்களாக (9வது தொடர்) மாறிய நடிகர்களை பற்றி எழுதியிருந்தேன். ( அந்த கட்டுரையை வாசிக்க... )

அதற்கு, ’பூபால் சிங்’ சென்ற வாசகர் எஸ்.வி.சுப்பையாவை எப்படி எழுதாமல் விடுப்பட்டது என்று எதிர்வினை புரிந்திருக்கிறார். 1950-70 பற்றிய குணச்சித்திர நடிகர்களைப் பற்றி குறிப்பிடும் போது எஸ்.வி.சுப்பையா, மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.வாசு (நகைச்சுவை + குணச்சித்திரம்) போன்ற நடிகர்களை குறிப்பிட வேண்டும் என்று வைத்திருந்தேன் என்கிற விளக்கத்தை தொலைப்பேசி மூலம் அவருக்கு தெரிவித்தேன்.


சென்ற ஆக்டோபர் மாத இதழில் சினிமாவைப் பற்றிய எனது கட்டுரைக்கு பதிலாக இவருடைய வாசகர் கடிதம் இடம் பெற்றுயிருக்கிறது.

உரத்த சிந்தனை போன்ற தன் நம்பிக்கையூட்டும் இதழில் சினிமாவுக்கும், இலக்கியத்திற்குமான பக்கங்கள் மிக அறிதாகவே கிடைக்கும். அதில் சினிமாவைப் பற்றிய தொடர் எழுத வாய்ப்பு கொடுத்து, வாசகர்களில் கவனத்தை பெறுகிறது என்றால் மிகப் பெரிய விஷயம். மாதம் 10-15 பேர் தொலைப்பேசியில் பாராட்டுகிறார்கள். இந்த தொடருக்காக இன்னும் உழைக்க வேண்டும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

பூபால் சிங் எதிர்வினையை விட, அதை பிரசுரம் செய்த உரத்த சிந்தனை இதழுக்கு தான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails