வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 19, 2014

எம்.ஜி.ஆர் பேட்டிகள்

”உங்களை தாக்கி எழுதும் தமிழ்வாணனை பற்றி தங்கள் கருத்தென்ன ? வல்லவர், திறமையானவர், வியாபார ரகசியம் தெரிந்தவர் ! 

அரசியல் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதில் கூறுவது கலைஞரின் சொத்தல்ல. திராவிடக் கழகத்தின் சொத்து என்பதை இந்த நூல் நிருபிக்கிறது. பல கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர் கூறியிருக்கும் பதில் மிக சிறப்பானது. 



தமிழக அரசியல் வரலாற்றிலும், சினிமாவிலும் மறக்க முடியாதவர் எம்.ஜி.ஆர் அவர்கள். இன்றைக்கு ஒரு படம் ஓடிவிட்டால், அரசியலில் சாதித்துவிடலாம் என்று பலருக்கு நம்பிக்கை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். எந்த வயதானாலும் மீண்டும் கதாநாயகன் வாய்ப்பு கிடைத்துவிட்டால் சினிமாவில் பெரிய இடத்துக்கு செல்லலாம் என்ற தன்னம்பிக்கை ஊட்டுவது எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை. 

தன்னம்பிக்கை என்பதன் பொருள் என்ன ?
தான் கையாலாகாதவன் என்று உணர்வது. 

முயற்சி இல்லாமல் கிடைப்பது எது ?
மரணம். 

கண்ணதாசன் பாணியில் தத்துவ நிறைந்த பதில்களை அளித்திருக்கிறார். 

அரசியலில் மாணவர்கள் ஈடுப்படக் கூடாது என்பதற்கு கூறும் விளக்கம், கலைஞரை நகைச்சுவையாக தாக்குவது, மத்திய அரசை ஆதரிப்பது, பச்சைக்குத்தி கொள்வதற்கு எம்.ஜி.ஆர் மீது சுமத்தப்பட்ட விமர்சனத்திற்கு கூறும் விளக்கம், ஜெயலலிதாவுடன் இருந்த நட்பு, சிவாஜியுடன் இருக்கும் போட்டி என்று தமிழக அரசியல் வரவாற்றில் எம்.ஜி.ஆரின் பதில் மிக முக்கியமானது. 

கேள்வி – பதில் இவ்வளவு ஸ்வரஸ்யமாக நான் படித்ததில்லை. சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்” நூல் போல், இந்த கேள்வி – பதில் நூலும் ஸ்வரஸ்யமாக இருக்கிறது. ஆனால், ஒரே வித்தியாசம்,சுஜாதாவின் பதில்கள் அறிவு சார்ந்தது. எம்.ஜி.ஆர் பதில்கள் அரசியல் சார்ந்தது. 

முதல் இரண்டு பதிப்பை ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதற்கடுத்து மூன்று பதிப்புகளை தொகுப்பாசிரியரே வெளியிட்டிருக்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தக கண்ணில் பட்டால் அவசியம் வாங்குகள். 

** 
Manomani Pathippagam 
201 – P, S.S.K. Nagar, 5th Street, 
( near Railway Station) 
Kanchipuram – 631502 
Ph: 8754496134 / 9790576470

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails