வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, May 19, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 6

கரடி கூட்டத்தின் தலைவனும், சிறுத்தை கூட்டத்தின் தலைவனும் ஒரு உடன்படிக்கை மேற்கொண்டனர். அதில், சிறுத்தை வேட்டையாடும் மிரங்களில் பாதி கரடி கூட்டத்திற்கும், கரடி வேட்டையாடும் மிருங்களில் பாதி சிறுத்தை கூட்டத்திற்கும் கொடுக்க வேண்டும்.

இதனால், ஒரு நாளுக்கு இரண்டு விதமான மிருங்களை இரண்டு கூட்டமும் சுவைக்க முடியும். இந்த உடன் படிக்கை இரண்டு கூட்டத்திற்கும் பிடித்திருந்தது. இரண்டு கூட்டத்திற்கும் பரம திருப்தி.



ஒவ்வொரு நாளும் இரண்டு மிருக இறைச்சியை சுவைத்த சந்தோஷத்தில் இரண்டு மிருகக் கூட்டங்களும் இருந்தன. ஆனால், நாளாக நாளாக சிறுத்தையின் தலைவன் மனம் மாறத்தோடங்கியது.

பழைய மிருக இறைச்சி , சுவையில்லாத பாகத்தை கரடியிடம் கொடுத்து நல்ல மிருக இறைச்சியை வாங்க தொடங்கியது. தரமில்லாத இறைச்சிக்கு சுவையான இறைச்சி கிடைப்பதால் சிறுத்தை நமக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்று மகிழ்ந்தது. ஆனால், அது நீண்ட நாள் நீடிக்கவில்லை.

முதலில் கரடியின் தலைவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், கரடி கூட்டத்தினர் சுவையில்லாத இறைச்சிக்கு தங்கள் உழைப்பை வீணாக்குகிறோம் என்று கூற தொடங்கினர்.

இதனால், கரடி கூட்டத்தினர் சிறுத்தையிடம் இறைச்சி மாற்றத்தை நிறுத்திக் கொண்டது. அது மட்டுமில்லாமல் தங்கள் கூட்டத்தினரை இரண்டாக பிரிந்து சென்று இரண்டு விதமான மிருகங்களை வேட்டையாட தொடங்கியது. அதனால், எப்போதும் போல கரடி கூட்டத்திற்கு இரண்டு மிருக இறைச்சி கிடைத்தது.

 Management நீதி : 

இன்றைய லாபத்திற்காக வாடிக்கையாளரை ஏமாற்றத் தொடங்கினால், நாளைய வியாபாரம் இல்லாமல் போகும்.

Thursday, May 14, 2015

சினிமா 1913 -2013 : 12. சினிமா ஸ்டூடியோ

தமிழ் சினிமாவின் ஆரம்பக் காலத்தில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பார்கள் எவ்வளவு பங்கு ஆற்றினார்களோ அதே அளவிற்கு சினிமா ஸ்டூடியோக்கள் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது. மேடை நாடகளில் நாடகத்தின் பின் புறம் இடத்திற்கு தகுந்தாற் போல் ஓவியங்கள் இருக்கும். பார்வையாளனுக்கு கதாபாத்திரங்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்கிற உணர்வை எற்படுத்த மேடை பின்ப்புற ஓவியங்கள் உதவியாக அமையும். அதேப் போல் ஸ்டூடியோவில் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தாற்போல் வடிவமைத்தார்கள். கிராமம், பூங்கா, நிறுவனம், மருத்துவமனை என்று எந்த பொது இடமாக இருந்தாலும் அதற்கான மாதிரி வடிவம் ஒவ்வொரு ஸ்டுடியோவில் இருந்தது அல்லது அதை உருவாக்கும் வசதிகள் இருந்தது. அறுபதுகளில் பொது இடங்களில் காட்சிப்படுத்தியதை விட ஸ்டுடியோவில் செட் போட்டு அமைக்கப்பட்ட காட்சிகளே அதிகம். 

பொது இடங்களில் காட்சி அமைக்க முன் அனுமதி, ரசிகர்கள் பிரச்சனை, போக்குவரத்து நெருக்கடி என்று எந்த பிரச்சனையில்லாமல் ஸ்டூடியோவில் குறைந்தக் காலத்தில் படத்தை எடுத்து முடிக்க முடிந்தது. தயாரிப்பாளரின் செலவு குறைவாக இருந்தது.

ஏ.வி.எம் ஸ்டூடியோ 




 உலகப் போர் காரணமாக சென்னையில் மின்சார வெட்டு அமலில் இருந்ததால், ஏவி.எம் அவர்கள் தனது சொந்த ஊரான காரைக்குடியில் ஸ்டூடியோ அமைத்தார். தேவக்கோட்டை ஜமீந்தார் சோமநாதன் செட்டியாருக்கு சொந்தமான (நாடகத்திற்கான இடம்) கொட்டகையில் ரூ.2000யும், காலியான இடத்திற்கு ரூ.1000 வாடகைக்கு ஸ்டூடியோ அமைத்தார். 

அங்கு முதன் முதலில் ‘நாம் இருவர்’ படமாக்கப்பட்டது. காரைக்குடியில் கீற்றுக் கொட்டகையில் படமாக்குகிறார் என்று ஆரம்பத்தில் கேலிப்பேசினார். ஆனால், புராணப்படங்களில் இருந்து சமூகப்படத்திற்கு அனைவரையும் ‘நாம் இருவர்’ படம் திரும்ப வைத்தது. 

ராம்ராஜ்யா, வேதாள உலகம் போன்ற படங்கள் அங்கு தான் படமாக்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளில் தேவக்கோட்டை ஜமீன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை வாடகையை ரூ.10,000யாக உயர்த்தினார். உலகப் போர் முடிந்து மின்சாரம் கிடைக்கும் சூழல் இருந்ததால் ஏவி.எம் அவர்கள் சென்னையில் ஸ்டூடியோ அமைக்க நினைத்தார். 

அப்போது, வட பழனியில் 10 ஏக்கர் நிலம் காலியாக இருந்தது. தொல் கிடங்கு வைத்திருக்கும் முஸ்லிமுக்கு சொந்தமாக அந்த இடம் இருந்தது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை போது அந்த இடத்தை அப்படியே விட்டு விட்டு பாகிஸ்தானுக்கு அந்த முஸ்லீம் சென்றுவிட்டார். அகதி இடம் என்பதால் குறைந்த விலையில் ( ரூ. 37,500) அந்த இடத்தை வாங்கினார். 

 ”வாழ்க்கை” படம் புதிய இடத்தில் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓர் இரவு, பெண், அந்த நாள் போன்ற பல படங்கள் ஏவி.எம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு படத்தின் வெற்றில் ஏவி.எம் ஸ்டூடியோவும், தயாரிப்பு நிறுவனமும் மிகப் பெரியளவில் வளர்ந்தது. 

ஏவி.எம் தயாரித்த ”ஹம்பஞ்சி ஏக் டால்கே” (ஹிந்தி) படத்திற்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. 

ஏவி.மெய்ப்பச் செட்டியார் மறைவுக்கு பின்னர் அவரது மகன் எம்.பாலசுப்பிரமணியன் நிறுவனத்தை எடுத்து நடத்தினார். அவரை தொடர்ந்து எம்.சரவணன், எம்.எஸ்.குகன், என்று நான்கு தலைமுறைகள் நிர்வாகம் செய்யப்பட்ட நிறுவனமாக ஏவி.எம் ஸ்டூடியோ திகழ்கிறது. 

ஜெமினி ஸ்டூடியோ 


”மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்” பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடு. அதில் முக்கிய பங்குதாரராக இயக்குனர் கே.சுப்பிரமணியம் இருந்தார். அவரிகளின் உரிமையான ஸ்டூடியோ கோர்ட் உத்தரவுப் பெயரில் ஏலத்திற்கு விடப்பட்டது. அதை, ரூ.86,423க்கு டெண்டர் மூலம் எஸ்.எஸ்.வாசன் வாங்கினார். ஸ்டூடியோவுக்கு “ஜெமினி” என்ற பெயர் சூட்டப்பட்டது. 

 எஸ்.எஸ்.வாசன் ஆரம்பத்தில் வாடகைக்கு விட நினைத்தார். ஆனால், அவர்களின் தயாரிப்பான “மதன காமராஜன்” படம் அங்கு படமாக்கப்பட்டது. 1941ல் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றிப்பெற்றது. 

 அதைத் தொடர்ந்து பாலநாகம்மா, நந்தனார், மங்கம்மா சபதம் போன்ற பல வெற்றிப்படங்கள் ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. அந்த காலத்தில் 2 லட்சத்தில் ”சந்திரலேகா” படத்தின் இறுதியில் வரும் நடனக் காட்சி ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கினர். ( சந்திரலேகா படத்தில் நடிப்பதற்கான தனியாக ஒரு சர்க்கஸ் கம்பெனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னாளில், அந்த கம்பெனியை “ஜெமினி சர்க்கஸ்” என்று பெயர் மாற்றப்பட்டது.) 

 எஸ்.எஸ்.வாசன் மறைவுக்கு பிறகு அவரது மகன் பாலசுப்பிரமணியன் ஸ்டூடியோவை கவனித்துக் கொண்டார். 

கால மாற்றம். செட் போட்டு படம் எடுக்கும் முறை மாறத் தொடங்கியதால் பல ஸ்டூடியோக்களுக்கு வேலையில்லாமல் அப்படியே இருந்தது. அதனால், 1975 ஜெமினி ஸ்டூடியோ மூடப்பட்டது. அந்த இடத்தில் “பார்சன் காம்ப்ளக்ஸ்” என்ற பெயரில் பல மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டது. 

இன்றும், அண்ணா சாலையில் இருக்கும் “அண்ணா மேம்பாலைத்தை” பலர் “ஜெமினி ப்ளைஓவர்” என்று சொல்லுவதற்கு காரணம் அதன் அருகில் இருந்த ஜெமினி ஸ்டூடியோ தான். 

மாடர்ன் தியேட்டர்ஸ் 

தமிழ் சினிமாவில் கார்ப்ரேட் கலாச்சாரம் தெரியாத காலத்தில் கார்ப்ரேட் பாணியில் படங்களை தயாரித்தவர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள். அவர் சேலத்தில் தொடங்கிய பரபலமான ஸ்டூடியோ தான் “மாடர்ன் தியேட்டர்ஸ்”. 

சேலம் – ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தில் ஸ்டூடியோ அமைக்கப்பட்டது. ஸ்டூடியோவுக்குள் நுழைந்தால் படம் எடுக்கும் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்று எல்லா வசதிகளும் ஸ்டூடியோவுக்குள் அமைத்தார். முதல் படமாக “சதி அகல்யா” தயாரிக்கப்பட்டது. 

”சதி அகல்யா” படத்தை தொடர்ந்து பத்மஜோதி, புரந்தரதாஸ் (கன்னடப்படம்) போன்ற படங்கள் இங்கு தயாரிக்கப்பட்டது. மலையாளத்தின் முதல் பேசும் படமான ‘பாலன்’ படம் இங்கு தான் எடுக்கப்பட்டது. 100வது தமிழ் படமான “நாம தேவர்” படமும் இங்கு எடுக்கப்பட்ட பெருமை உண்டு. 

நடிகைகள் உள்ள பகுதிக்கு நடிகர்கள் போகக் கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாட்டை டி.ஆர். சுந்தரம் தனது ஸ்டூடியோவில் போட்டிருந்தார். குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடித்து முடித்துக் கொடுக்க வேண்டும் என்று டி.ஆர்.சுந்தரம் நினைப்பார். ஒரு முறை பி.யு.சின்னப்பா வராததால் தானே கதாநாயகனாக “சுலோசனா” படத்தில் நடித்தார். 

தொடர்ந்து பல படங்கள் தோல்வி அடைந்ததால் “மார்டன் தியேட்டர்ஸ்” மூடப்பட்டது. தற்போது அந்த ஸ்டுடியோ இருந்த இடத்தில் ‘சுந்தர் அப்பார்ட்மெண்ட்” என்கிற அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கிறது.

நெப்டியூன் ஸ்டூடியோ என்கிற சத்யா ஸ்டூடியோ 

வேலைக்காரி, மனோகரா போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் ஜூபிடர் சோமு அவர்கள். கோவையில் செண்ட்ரல் ஸ்டூடியோவை ஆரம்பித்தார். பிறகு, தனது ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்ற விரும்பிய சோமு அவர்கள், செண்ட்ரல் ஸ்டூடியோவை குத்தகைக்கு விட்டுவிட்டு நெப்டியூன் ஸ்டூடியோவை எடுத்து நடத்தினார். 

கற்புக்கரசி,எல்லோரும் இந்நாட்டு மன்னர், அரசிளங்குமரி போன்ற பல இங்கு எடுக்கப்பட்டது. எனினும் பெரியளவில் வெற்றிப் பெறவில்லை. உடல்நலக் குறைவால் ஜூபிடர் சோமு இறந்தார். நெப்டியூன் ஸ்டூடியோ ’சத்யா’ ஸ்டூடியோ என்கிற பெயரில் இயங்கி வருகிறது. 

விஜயா ஸ்டூடியோ 


ஏவி.எம் போலவே மிக பழமையானது விஜயா  ஸ்டூடியோ . சவுக்கர், பக்த பிரகலாத தெலுங்கு படத்தில் தொடங்கிய விஜயா தயாரிப்பு இன்றைய “வீரம்” வரை வெற்றிக்கரமாக தொடர்கிறார்கள். தங்களுக்கு சொந்தமான ஸ்டூடியோ என்பதால் தமிழ் – தெலுங்கு என்று ஒரே சமயத்தில் இரண்டும் மொழிகளில் படம் எடுத்தார்கள். 

ஸ்டூடியோக்களில் வேலை குறைந்ததால் மருத்துவமனையாக மாற்றினர். இன்று வடபழனியில் பஸ் நிறுத்தம் அருகே விஜயா மருத்துவமனை ஒரு காலத்தில் விஜயா ஸ்டூடியோவாக திகழ்ந்தவை. சில சுவர்கள் அரண்மை அலங்காரத்தை நினைவுப் படுத்துவதாக இருக்கும். 

இன்று தயாரிப்பாளரின் படச் செலவு அதிகமாகி போனதற்கு ஸ்டூடியோக்கள் வணிக கட்டினமாகவும், பண்நாட்டு நிறுவனமாகவும் மாறிவிட்டதால் என்று கூட சொல்லலாம். அதே சமயம், ஹைதரபாத், நொய்டா, ப்ரயாக் போன்ற நகரங்களில் இருக்கும் ‘பிலிம் சிட்டி’ ஸ்டூடியோக்களில் நீட்சியாகவே திகழ்கிறது.

நன்றி : நம் உரத்தசிந்தனை இதழ் ( மே, 2015)

Wednesday, May 13, 2015

கோர்ட் தீர்ப்பு - எல்லாமே நமது illusion தான் !!

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி குமாரசாமியை பலர் விமர்சித்து வருகிறார்கள். அதுவும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்கு நேர் எதிர் தீர்ப்பாக குமாரசாமியின் தீர்ப்பு இருப்பதால், எந்த நீதிபதி தவறு செய்திருக்கிறார் என்ற ரீதியில் விமர்சனம் வருதை பார்க்கிறேன். 

எப்படி ஒரு தீர்ப்புக்கு சம்மந்தமில்லாத நேர் திர் தீர்ப்பு வழங்க முடியும் என்று பலர் வாதம் செய்கிறார்கள். 

எனக்கு என்னவோ நீதிபதி குமாரசாமியின் பார்வையில் இருந்தும், நீதிபதி குன்ஹா அவர்களின் பார்வையில் இருந்தும் பார்த்தால் அவரவர் தீர்ப்பு சரியே என்றே படுகிறது. 

உதாரணத்திற்கு, 

ஒரு பையனுக்கு திருமணத்துக்காக பெண் பார்க்கப்படுகிறது. தனக்கு வரப் போகும் மனைவி ஒரு வீடு, 50 பவுன் நகையோடு வர வேண்டும் நினைத்து பெண் வீட்டாரிடம் கேட்டால்.. அது வரதட்சனை. சட்டப்படி தவறு. நீதிபதி குன்ஹா தீர்ப்பு இதன் அடிப்படையில் அமைந்தது. 

அதே பையன் வரப் போகும் மனைவியிடம் சொந்தமான ஒரு வீடு, நகை, பணம் இருப்பதை உறுதி செய்துக் கொண்டு திருமணம் செய்துக் கொண்டால் தவறா ? தன் வசதிக்கு அல்லது விருப்பத்திற்கு ஏற்றப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறான். அவ்வளவு தான். அது வரதட்சனையில்லை. அதனால் தவறில்லை. குமாரசாமி தீர்ப்பு இதன் அடிப்படையில் வந்திருக்கிறது. 

இரண்டுமே சரி தான். பார்க்கும் பார்வைதான் மாறுபடுகிறது. புரிந்த மாதிரி இருக்கு, புரியாத மாதிரி இருக்கிறதா ? 

எல்லோருக்கு புரிந்த கிரிக்கெட்டை உதாரணமாக காட்டுகிறேன். 

போலர் ‘LBW' அவுட் கேட்கிறார். அம்பையர் கொடுக்கவில்லை. 'Review System' மூலம் போலர் தீர்ப்பை பரிசீலனை செய்ய சொல்கிறார். மூன்றாவது அம்பையர் அவுட் கொடுகிறார். ஆனால், டி.வியில் பார்க்கும் நமது கண்ணுக்கு அவுட்டாக தெரியவில்லை. மூன்றாவது அம்பையர் தவறு என்று சொல்கிறோமா ? நமது பார்வைக்கு அவுட் இல்லாமல் தெரிந்திருக்கலாம். களத்தில் இருப்பவர்களுக்கு தான் உண்மையான பார்வையில் அவுட்டா ? அவுட்டில்லையா என்பது தெரியும். 

இதற்கு பெயர் தான் 'Illusion'. 

எல்லாவற்றிக்கும் மேலாக, நமது எண்ணம் அடுத்த பேட்ஸ்மென்னை நோக்கி செல்லும். அவனின் ஆட்டத்தை பற்றி பேசுவோம். முந்தைய பேட்ஸ்மென் அவுட் குறித்து கவலைப்பட மாட்டோம். அதே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த வழக்குகளில் நமது கவனம் செல்ல வேண்டும். 

ஆகையால் குன்ஹாவின் தீர்ப்பும் சரி தான். குமாரசாமி தீர்ப்பு சரி தான். நாம் பார்க்கும் கண்ணோட்டமே தவறாக இருக்கிறது. நம் மூக்குக்கு நேராக ஒரு விரல் நீட்டும் போது சில சமயம் ஒரு விரல் இரண்டு விரலாக தெரிவதில்லையா ? அது போல தான் இதுவும். வழக்கு ஒன்றாக இருந்தாலும், இரண்டு தீர்ப்பும் ஒன்று தான். 


குற்றவாளிகளே 100% சட்டத்தை நம்பும் போது பொதுமக்களாகிய நாம் சட்டத்தை நம்புவதில் தவறில்லையே !! 

விசு போல் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…. தவறு நடந்திருக்கலாம். தவறு நடக்காமல் இருந்திருக்கலாம். தவறு நடந்ததாக கருதப்பட்டிருக்கலாம். அந்த தவறுக்காக தவறாக வழக்கு பதிவாகியிருக்கலாம். தவறான வழக்கு என்பதால் தவறாக தீர்ப்பு வழங்கியிருக்கலாம். அல்லது சரியான தீர்ப்பை தவறாக புரிந்திருக்கலாம். மீண்டும் தவறை சரி செய்ய மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கலாம். அல்லது சரியாக இருப்பதை தவறாக மாற்ற முயற்சித்திருக்கலாம். சரி, தவறு யாருக்குமே புரியாமல் இருந்திருக்கலாம். அதை தவறாக புரிந்து நாமே குழம்பிபோய்யிருக்கலாம். 

மொத்தத்தில் சரி, தவறு புரிந்துக் கொள்ள முடியாத நமது 'illusion' மனநிலை தான் காரணம். 

இன்னும் ஒரு உதாரணம் சொல்லுங்க... புரிஞ்சிக்குறோம் என்பவர்களுக்கு... இவ்வளவு நேரம் கட்டுரை படிக்கும் நீங்கள், நான் ஏதாவது கருத்து சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்க்கும் உங்கள் மனமே 'illusion'. 

ஆகவே, இரண்டு நீதிபதிகள் சரியான தீர்ப்புகள் வழங்கினார் என்று கூறி.... நமது ‘illusion'ல் இருந்து விடுப்பட வேண்டும் என்கிற என் வாததை நிறைவு செய்கிறேன். 

( பின்குறிப்பு : உங்கள் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டு அண்ணன் கவுண்டமணி வாயிலாக கருத்தை பதிவு செய்கிறேன். )



Monday, May 11, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 5

ஒரு நாள் சுப்பிரமணி என்கிற குரங்கு ( சுப்பிரமணி நாய்க்கு தான் பெயர் வைக்க வேண்டும் என்று இல்லை. குரங்குக்கு வைக்கலாம்.) இயற்கை அழகை வரைய விரும்பியது. மலை சார்ந்த இடத்திற்கு சென்று மலை, ஆறு, பறவை என்று அழகாக அனைத்து இயற்கை காட்சியையும் படம் போல் வரைந்தது. 

முதல் முறையாக வரைந்தப்படம் என்பதால் தனது நண்பர், உறவினரிடம் படத்தை காட்டி, 

"நான் முதல் முறையாக வரைந்த படம். உங்கள் கருத்தை தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்க தவறாக அல்லது நன்றாக இல்லாததை சுட்டிக் காட்டினால், நன்றாக இருக்கும்" என்றது. 



ஒவ்வொரு குரங்கும் தங்கள் கண்ணில் பட்ட குறைகளை எடுத்துக் கூறியது. ஒரு கட்டத்தில் சுப்பிரமணிக்கு நம்பிக்கையற்று போனது. இனி நம்மால் எந்த ஓவியமும் வரைய முடியாது என்று நம்பிக்கை இழந்தது. தனியாக அழுதுக் கொண்டு இருந்தான்.

அப்போது, சுப்பிரமணிக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுத்த குருநாதர் வருகிறார். 

"தாங்கள் கற்றுக் கொடுத்த ஓவியம் பயனில்லாமல் போயிவிட்டது. அனைவருக்கும் பிடித்ததுப் போன்ற ஓவியத்தை என்னால் வரைய முடியவில்லை" என்று வருந்தியது. 

குருநாத குரங்கு எவ்வளவு சொல்லியும் சுப்பிரமணி ஆருதல் அடையவில்லை. குரு குரங்கு சுப்பிரமணி வரைந்த ஓவியத்தை அவனது நண்பர்கள், உறவினர்களிடம் எடுத்து சென்றார். 

"சுப்பிரமணி வரைந்த ஓவியத்திற்கு தாங்கள் கூறிய கருத்து உதவியாக இருந்தது. ஆனால், எப்படி இருக்க வேண்டும் என்று வரைந்து காட்டினால், தனது ஓவியத்தை சுப்பிரமணி சரி செய்துக் கொள்ள உதவியாக இருக்கும்" 
என்று குரு குரங்கு கூறியது.

குறை கூறிய எந்த குரங்கும் அந்த ஓவியம் எப்படி இருக்க வேண்டும் வரைய முடியவில்லை. 

Management நீதி : 

நிர்வாக முடிவுகளையும், திட்டங்களையும் குறைக் கூறுவது மிக எளிது. ஆனால், அதற்கான மாற்று யோசனை, செயல் திட்டம் இல்லை நம்மிடம் இல்லாத பட்சத்தில் குறைக் கூறக்கூடாது.

Friday, May 8, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 4

கதிரேசன் என்கிற சிங்கக்குட்டி காட்டில் வழி தெரியாமல் தவித்தது. அப்பா சிங்கம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்பா சிங்கமும் தனது குட்டி கதிரேசனை தேடி அலைந்தது. 

அப்போது, சிங்கக்குட்டி தன்னை போன்ற குட்டி கரடியைப் பார்த்தது. இரண்டும் நேருக்கு நேர் முறைத்தது. அப்பா சிங்கம் வேட்டையாடும் போது சண்டைப் போட்டிருப்பதை கதிரேசன் பார்த்திருக்கிறான். தனியாக மாட்டியிருக்கிறோம் என்று அஞ்சாமல் சண்டைப் போட வேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டது. குட்டி கரடி தாக்கும் முன்பே கதிரேசன் தாக்கத் தொடங்கினான். குட்டி கரடி வலியில் துடித்தது. கத்தியது. நம்மால் பிரச்சனையை சமாளிக்க முடியும். 



வேட்டையாட முடியும் என்று கதிரேசனுக்கு நம்பிக்கை வந்தது. ஆனால், வலியில் அலரிய குட்டி கரடியின் குரல் கேட்ட அப்பா கரடி அந்த இடத்துக்கு வந்தது.. முன்பு கிடைத்த வெற்றியில் கதிரேசன் உருவத்தில் பெரிய கரடியிடம் மோத சென்றது. 

ஒரே அடி... குட்டி கதிரேசன் பறந்து விழுந்தான். தன்னால் பெரிய கரடியிடம் மோதி வெற்றிப் பெற முடியாது என்று புரிந்துக் கொண்டான். ஆனால், அப்பா கரடி விடுவதாக இல்லை. தன் குட்டியை தாக்கிய குட்டி சிங்கத்தை கொல்ல வந்தது.

நல்ல வேளை. அப்பா சிங்கம் அந்த இடத்தில் வர, கதிரேசன் தப்பித்தான். குட்டி கதிரேசனுக்கு விழுந்த அடிப்போல், பெரிய கரடிக்கு விழுந்தது. குட்டி கரடியும், பெரிய கரடியும் ஓடிப்போனது. 

 Management நீதி :

சிறு பிரச்சனை தீர்வு காணும் போது சில நம்பிக்கை பிறக்கும். அந்த நம்பிக்கையில் பெரிய பிரச்சனையை கையாளக் கூடாது. மேலாளரிடம் கூறி பெரிய பிரச்சனைக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த பிரச்சனைக்கு நம்மால் முடிவு எடுக்க தகுதியிருக்கோ அதற்கு மட்டுமே முடிவு எடுப்பது நல்லது.

Thursday, May 7, 2015

கமல் என்னும் மாபெரும் கலைஞன் !

சிவகுமார் எழுதிய ”இது ராஜப்பாட்டை அல்ல” நூலில், சிவாஜி கணேசன் நடிகர் முத்துராமன் மரணத்தை பற்றி இப்படி கூறிப்பிட்டிருப்பார். 

”ஒரு நடிகன் தான் நடித்துக் கொண்டு இருக்கும் போதே இறப்பது பெரும் பாக்கியம்” என்று சிவகுமாரிடம் கூறியிருப்பார். ஏறக்குறைய ‘மனோரஞ்சன்’ பாத்திரம் அப்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அறிவுக்கு தெரிகிறது கமல் ஏற்று நடித்தது ‘மனோரஞ்சன்’ பாத்திரம் என்று. ஆனால், மனதுக்கு ‘கமலுக்கு அப்படி ஏதாவது இருக்குமோ’ என்று அஞ்சுகிறது. 

எத்தனையோ படங்களில் (வாழ்வே மாயம், நாயகன், குருதிபுனல், குணா etc.) கமல் இறந்திருக்கிறார். அதில் எல்லாம் அவர் நடித்த பாத்திரங்கள். ஆனால், இதில் எனக்கு கமல் ‘கமலாக’ தான் தெரிகிறார். 



தன் வாழ்வில் உச்சத்தை தொடுவதற்காக எத்தனை உறவுகளை கடந்திருப்பார். அத்தனை உறவுகளை தேடி கடைசி நிமிடத்தில் மன்னிப்பு கேட்ட முடியாது என்பதற்காக இப்படி ஒரு படத்தை எடுத்தாரோ என்று தோன்றுகிறது. 

ரஞ்சன் பாத்திரத்தை பார்த்த ரசிகர்கள் அழுதுக் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக, ‘உத்தமன்’ பாத்திரித்தில் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். தனக்கு கிடைத்த குறைவான நேரத்தில் ரசிகர்களை எப்படியாவது சிரித்து திருப்திபடுத்திவிட வேண்டும் என்று நினைத்ததால் என்னவோ, உத்தமன் பாத்திரத்தில் செயற்கை தனம் இருக்கலாம். ஆனால், மரணத்தை நெருங்கும் ஒருவன் மற்றவர்களை சிரிக்க வைக்க நினைக்கும் உழைப்பை பார்க்கத் தோன்றுகிறது. 

பல வருடங்களாக கமலின் நடிப்பை, அறிவு ஜீவி தனத்தை பார்த்து வருகிறோம். தலைகனம், திமீர் பேச்சு, அரசியல் கருத்து என்று தனது படத்தில் எதையாவது பதிவு செய்வார். ஒரு கலைஞனுக்கு உரிய பிடிவாதம் அவரிடத்தில் இருக்கும். ஆனால், அப்படி எதுவும் இந்த படத்தில் இல்லை.

இப்படி ஒரு படம் செய்ய வேண்டும் என்று கமலுக்கு அவசியம் இல்லை. சிவாஜி, நாகேஷ், பாலு மகேந்திரா போன்றவர்களின் மரணம் கமலை இப்படி யோசிக்க வைத்ததா ? கே.பி மரணத்துக்கு கூட இதற்கு தான் வரவில்லையா ? தன்னை சுற்றியிருப்பவர்களின் மரணத்தால் வந்த பிரதிபலிப்பா ?

 உண்மையில், தனது மரணத்துக்காக ரசிகர்களை ஒத்திகை பார்க்க சொல்கிறாரரா ? ஒரு கலைஞன் தனது ரசிகர்களை தேற்றுவதற்கும், தனது மரணத்தை கூட கொண்டாட வேண்டும் என்பதாக படம் எடுத்திருக்கிறாரா?

இந்த படத்தில் கமல் சொல்ல வருவது புரிகிறது. ஆனால், மனம் ஏற்க மறுக்கிறது.

என் கமல் எனக்காக, என்னை போன்ற தன் ரசிகர்களான படம். அவருடன் பழகிய உறவுகளுக்கான படம். லிங்காவாசிகளுக்காகவோ, தல – தளபதி ரசிகர்ளுக்காகவோ, ஏன் மற்ற ரசிகர்களுக்காவோ இந்த படம் எடுக்கவில்லை.

”தலைவா ! நீ நூறு வருடம் வாழனும்” என்று உரக்கச் கத்த வேண்டும் போல் இருக்கிறது. 

’சாக வரம் போல் சோகம் உண்டோ’ தனது ரசிகர்களை தேற்றுவதற்காக எழுதினாரோ என்று தோன்றுகிறது. அதில் ஒவ்வொரு வரியும் தனது மரணத்தை குறித்து கமல் எழுதியது போல் இருக்கிறது. படத்தின் அறிமுகக் காட்சிக்கு பாடல் எழுதுபவர்களின் மத்தியில் தனது வாழ்வின் மரணத்தை குறித்து யாரால் எழுத முடியும். 

எந்த ரசிகனுக்கு கிடைப்பார் இப்படி ஒரு கலைஞன். தனது மரணத்தை ரசிகர்களோடு உரையாடும் கலைஞன் எனக்கு கிடைத்திருக்கிறார். இது நடிப்பு என்று கமலே வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். 

இதை படிக்கும் உங்களுக்கு ‘சினிமாவை சினிமாவாக பார்க்க தெரியாத முட்டாளாக தெரியலாம்’. அதை பற்றி எனக்கு கவலையில்லை. வாழ்க்கை எத்தனையோ தருணத்தில் நான் முட்டாளாக இருந்திருக்கிறேன். இந்த கட்டுரையில் அப்படி தெரிவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் கமலுக்கான நான் அழுதுக் கொண்டு எழுதும் இந்த கட்டுரையில் முட்டாளாக இருந்துவிடுகிறேன்.

உண்மையில் படம் முடியும் போது கமலை கட்டிபிடித்து அழ வேண்டும் போல இருந்தது.

Wednesday, May 6, 2015

சுடுகாடும் சில சுந்தரிகளும் - மரண கானா விஜி வாழ்க்கை வரலாறு

இது வரை எந்த நூலிலும் சொல்லப்படாத பெண்களை பற்றி இந்த நூலில் பார்க்க முடிகிறது. ஒரு வேலை, விஜிக்கு மட்டும் எழுத தெரிந்திருந்தால், எல்லா எழுத்தாளர்களையும் தூக்கி சாப்பிட்டிருப்பார் என்று சொல்லலாம். சமக்கால இலக்கியம் எல்லாம் குப்பை என்று சொல்லும் அளவிற்கு அவரிடம் அனுபவம் கொட்டிக்கிடக்கிறது. அந்த அளவுக்கு பல மோசமான பெண்களை, அனுபவங்களை கடந்திருக்கிறார். 

“டங்கமாரி” பாடலின் குரலுக்கு பின் இப்படி பெரிய சோகம் இருப்பது மனதை கனமாக்கிறது.



’விஜி’ என்பது தன்னுடைய பெயரல்ல. உண்மையில் தனக்கு பெயரே இல்லை என்று தான் அவர் சொல்கிறார். தன்னை முதன் முதலாக கவனித்துக் கொண்ட விபரச்சாரியின் பெயர் விஜி. விஜியுடன் இருந்ததாலே அந்த பெயர் தனக்கு வந்தது என்கிறார். 

தனக்கு கிடைத்த முதல் தோழி எக்மோர் ராணி. விஜிக்கு டீ வாங்கி தருவதற்காக அடுத்தவரிடம் படுக்க தயங்காதவள் (அப்போது ராணிக்கு 8 வயது). விஜியுடன் இருக்கும் மூன்று நண்பர்களுடன் ஒன்றாக உறங்குபவள். புணர்ச்சிக் கொள்பவள். குடிப்பவள். எல்லாவற்றிக்கும் மேலாக அவர்களிடம் அன்பு காட்டும் ஒரே பெண். இது தவறு, சரி சொல்ல ஆளில்லாததால், தங்களுக்கு தெரிந்ததை செய்பவர்கள். 

இன்னொரு பெண் (பெயர் குறிப்பிடப்படவில்லை), தான் இறக்கும் தருவாயில் விஜியின் பாடலை கேட்க விரும்புகிறாள். தான் சாகும் முன் ஒரு ஆண்ணுடன் இருக்க வேண்டும் என்று விரும்பி விஜியுடன் உறவுக் கொள்கிறாள். 

பல உலக இலக்கியமே கொண்டாடிய தாய்மைக்கு எதிராக தான் சந்தித்த மோசமான தாய்யை கூறியிருக்கிறார். சென்னை மெரினா கடற்கரை குற்றத்தின் பிறப்பிடமாக இருப்பதற்கு எடுத்துக்காட்டு ’மரண கானா’ விஜி வாழ்க்கை ஒரு உதாரணம். 

பணக்காரன், நடுத்தரம், ஏழை என்று பொருளாதார அடிப்படையில் மக்களை மூன்று விதமாக பிரித்திருக்கிறோம். ஆனால், ஏழைக்கு கீழ் ஒரு மக்கள் வாழ்க்கிறார்கள். அவர்களுக்கு சரி, தவறு என்பதே தெரியாது. அன்றைய தின உணவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள். மரணத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள். மரணத்தோடு வாழ்பவர்கள். மரணத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்கள். 

இவர்களுடைய வாழ்க்கை முறையை யாரும் பதிவு செய்ததில்லை. பதிவு செய்ய இவர்களின் வாழ்க்கை முறை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அது மிகப் பெரிய கடினமான விஷயம். ஒரு வேலை அப்படி சாத்தியப்பட்டால், அது சமக்கால புத்தகங்களில் மிக முக்கியமானதாக இருக்கும். 

இந்த புத்தகத்தில் விஜி தன் வாழ்க்கைப் பற்றி முழுமையாக சொல்லவில்லை என்றே தெரிகிறது. அப்படி ஒரு வேலை சொல்லியிருந்தால், மிகவும் அருவருப்பான மனிதர்களை பற்றியதாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. 

வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் You tubeல் “சொல்வதெல்லாம் உண்மை”யில் மரண கானா விஜி பேட்டி பார்க்கவும். 

Tuesday, May 5, 2015

காஞ்சனா 2 (திரை விமர்சனம்)

தனது பழைய கதையை ராகவா லாரன்ஸ் அப்படியே ரீ-மேக் செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக மூன்றாவது பாகம் வருவதால் இந்த படத்தை வாழ்த்தியாக வேண்டும். அந்த விஷயத்தில் இந்த படம் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பதிவு என்று சொல்லலாம்.


முனி - 2 விட தனது நடிப்புக்கு அவரே தினிப்போட்டுக் கொண்டார் என்று சொல்லலாம். முனி -2வில் ஒன்றுக்கு மூன்று ஆவி என்றால், முனி-3யில் மூன்றுக்கு ஆறு ஆவி இருக்கிறது. ப்ளாஷ்பேக்கில் லாரன்ஸ் இரண்டாவது வேடத்தில் நடிப்பதற்கு பதிலாக ஆர்யா, விஷால் போன்றவர்களை நடிக்க வைத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் முனி-2வில் சரத்குமார் கெஸ்ட் ரோல் ஏற்பத்திய தாக்கம், இந்த படத்தில் இருந்திருக்கும்.

நித்யா மேனன் நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டிய பாத்திரம். விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது. அவரை விட பெய் வேடத்தில் டாப்ஸிக்கு நன்றாக பொருந்தியிருக்கிறது.

முனி - 2 அளவுக்கு இல்லை என்றாலும், முனி - 1 விட நன்றாக இருக்கிறது.

இரண்டு நாட்களில் 10 கோடி வசூலாகியிருக்கிறது. அதை விட பெரிய விஷயம், ஒரு சில திரையரங்குகளில் ’உத்தம வில்லன்’ படத்திற்காக காஞ்சனா 2 படத்தை எடுக்கவில்லை. புது படத்தை வாங்கி வெளியிடுவதற்கு பதிலாக, காஞ்சனா 2 இருக்கட்டும் என்று நினைத்திருப்பது தான்.

ராகவா லாரன்ஸ், முனி - 4வது sequence படமாக எடுங்கள். ஒரு கதையை திரும்ப திரும்ப பார்க்க போர் அடிக்கிறது.

Monday, May 4, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 3

அதே காடு. அதே சிங்க ராஜா. தலைமை நரி. அதற்கு கீழ் இரண்டு நரி. அதற்கு கீழ் பண்ணிரண்டு வேட்டை நாய்கள்.



முன்பை விட அளவுக்கு அதிகமாகவே உணவு கிடைக்கிறது. பண்ணிரண்டு வேட்டை நாய்களுக்கு பதிலாக பத்து வேட்டை நாய் இருந்தாலே போதுமானதாக இருக்கும். இரண்டு வேட்டை நாய்யை வெளியே அனுப்பிவிடலாம் என்று சிங்கம் கருதியது. தலைமை நரி எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்கவில்லை.

தலைமை நரிக்கு கீழ் இருக்கும் இரண்டு நரிகளை சிங்கம் அழைத்தது.

"பண்ணிரண்டு வேட்டை நாய்களில் வேலை சரியாக அல்லது குறைவாக செய்யும் வேட்டை நாய்யைப் பற்றி சொல்லுங்கள். அதை நமது கூட்டத்தை விட்டு விளக்கிவிடலாம். தேவையில்லாமல் அதற்கு நாம் ஏன் வேலை, உணவு கொடுக்க வேண்டும்" என்று கூறியது.

சிங்கத்தை எதிர்த்து அந்த இரண்டு நரிகள் எதுவும் பேசவில்லை. பேசினாலும், எடுப்படாது என்பது அதற்கு நன்கு தெரியும். அதனால், ஒரு காகிதத்தில் இரண்டு பேரை எழுதி சிங்கத்திற்கு நரி அனுப்பியது.

அதில், அந்த இரண்டு நரிகளின் பெயர் இருந்தது.

இந்த இரண்டு நரியை நீக்கிவிட்டால், பண்ணிரண்டு வேட்டை நாய்களை தான் வேலை வாங்க வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பதை சிங்கம் உணர்ந்தது. அதனால், யாரையும் கூட்டத்தை விட்டு சிங்கம் அனுப்பவில்லை.

Management நீதி : :

உண்மையான மேலாளர் தனது வேலை காப்பாற்றிக் கொள்ள தனது கீழ் இருப்பவர்களை பலியாடாக்க கூடாது. தனது வேலையை விட அவர்களின் வேலை பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உணர்ந்தால் தான், அவர்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியும். தங்கள் வேலைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து உண்டு என்று தெரிந்தால், அவர்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது. மேலாளர்களால் வேலை வாங்குவதும் சிரமம்.

LinkWithin

Related Posts with Thumbnails