வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, July 23, 2015

உளவு ராணிகள் - புதிய தொடர் !!

உலகில் மிக ஆபத்தான ஆயுதம் எது ?

கத்தி. துப்பாக்கி. அணுகுண்டு. ரசாயனம். இன்னும் பிற ஆயுதங்கள் என்று பட்டியலிட்டு சொல்லலாம். உயிரை குடிக்க, துன்புருத்த எத்தனையோ ஆயுதங்கள் இருக்கிறது. பல நாடுகளுக்குள் இருக்கும் போட்டிகளில் இன்னும் பல ஆயுதங்களை கண்டு பிட்டிக்கத்தான் போகிறார்கள். மனித குலம் அழியும் வரை ஆயுத கண்டுப்பிடிப்புக்கு முற்றுப்புள்ளி வரப்போவதில்லை. 

ஆனால், இத்தனை ஆயுதங்களை விட மிக பெரிய ஆயுதம் ஒன்று இருக்கிறது. எல்லா ஆயுதங்களை விட மிக ஆபத்தாக ஆயுதம். உலகின் முதல் ஆயுதம். கடவுள் சொல்லுக்கு எதிராக ஆதாமை ஆப்பிள் பழத்தை உண்ண வைத்தது. மிக பெரிய ரோம் சாம்ராஜ்ஜியம் சரிய செய்தது. ராமன் இராவணன் மீது போர் தொடுக்க வைத்தது. இன்றைக்கும் பல சாமியார்களின் லட்சனம் வெளியே தெரியவருவது அந்த ஆயுதத்தால் தான். 

அந்த ஆயுதத்தின் பெயர்.... "பெண்". 

பெண் எப்போது தென்றலாக இருப்பாள். புயலாக இருப்பால் என்பது அவளுக்கு தான் தெரியும் என்று கவிதை நடையில் சொல்லலாம். பெண் எப்போது ஆயுதமாக இருப்பாள், ஆபத்தாக இருப்பாள் என்று அவளுக்கு தான் தெரியும் என்பதை எதார்த்த உண்மை நடையில் சொல்லலாம். அவள் மிக பெரிய சக்தி என்பது எல்லா மெகா சீரியலில் காட்டு உண்மை. நாம் அனைவரும் உணர்ந்த உண்மையும் அதுதான்.


அதேப் போல் உளவுத்துறையில் மிகப் பெரிய ஆயுதம் ‘பெண்’ தான். 

பத்து பேர் அடித்து துவைத்து கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையில் கொண்டு வந்துவிடுவாள். பல கோடி ரூபாய் கொடுத்து பெற வேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையில் பெற்றுவிடுவாள். பணத்தில் மயங்காதவன் கூட அவள் அழகில் மயங்கிவிடுவான். 

பத்து எதிரிகளை கூட அடித்து வென்றுவிடலாம். ஆனால், ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது மிக பெரிய விஷயம். பல ஆண்களில் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம். 

நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை உளவு பார்ப்பது மிக அவசியமானது. அவர்களின் ரசகசியத்தை தெரிந்துக் கொள்வது நல்லது. இதில் நேர்மை, நியாயம், தர்மம் என்பது கிடையாது. எதிரியின் ஜாதகம் நமது கையில் இருந்தால் தான் நமது ஆயுள் ரேகை நீண்ட நாள் இருக்கும். எதிரிக்கு சுக்ர யோகம் அடித்தால், நமக்கு ராகு, கேது சேர்ந்து நம் நாட்டின் மீது மானாட மயிலாட ஆடிவிடுவான். 

தர்மத்தை நிலை நாட்ட மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணரும் அதர்மத்தை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தது. இன்றைய உலக அரசியலும் நம் நாட்டின் பாதுகாப்புக்கு சில அதர்ம வழியில் செல்ல வேண்டியதாக தான் இருக்கிறது. 

இப்படி தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை மட்டுமில்லமால், கற்பு, மொழி, உறவு போன்ற விஷயங்களை கவலைப்படாமல் தகவல் திரட்டிக் கொடுத்த உளவு ராணிகள் ஏராளம். ஒரு சிலர் மாட்டிக் கொண்டு நரக கொடுமைக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள். சட்டப்படி சுடப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தகவல் சேகரித்து வெற்றிக்கரமாக நாடு திரும்பியிருக்கிறார்கள். 

இறந்தவர்களுக்கு மலர்வலையமில்லை. நினைவுசின்னம். வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் இல்லை. பூங்கொத்தில்லை. எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் மர்மமாகவே இருக்கும்.

தகவலுக்காக சில தருதலைகளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மூன்று திருமணம் செய்துக் கொள்ள நேரிடும். காதல், கணிவு, கருணை அனைத்தும் மறக்க வேண்டியதாக இருக்கும். பெண்ணுக்கு உண்டான அனைத்து மேன்மை குணங்களை இழக்கும் சூழ்நிலை உருவாகும். அனைத்தையும் தைரியமாக எதிர்க் கொண்டு நாட்டுக்காக தகவல் சேகரித்தவர்கள். 

அப்படி நாட்டுக்காக மர்மமாக இயங்கிய நிஜ உளவு ராணிகள் பற்றிய தொடர் இது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails