வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, August 26, 2015

வெள்ளை எலி என்கிற நான்சி வேக்

தகவல் கொடுப்பது தான் தனது வேலை என்று நான்ஸி இருக்கவில்லை. குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைக் கொடுக்கும் துணிச்சல் நான்ஸிக்கு இருந்திருக்கிறது. 

நாஜிப்படைகள் வீழ்ச்சி நெருங்கும் காலக்கட்டத்தில் பிரிட்டன் இராணுவத்தை உளவு பார்க்க ஒரு பெண்ணை அனுப்பியிருந்தார்கள். அந்தப் பெணிண் போராத நேரம் பிரிட்டன் இராணுவத்திடம் பிடிப்பட்டாள். அவள் நாஜிகளுக்கு ஆதரவாக பிரிட்டன் படைகளை வேவு பார்க்க வந்திருக்கிறாள் என்று விசாரனையில் தெரியவந்தது. 



நியாயமாக உளவு பார்ப்பவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது தான் யுத்தக் கள மரபு. கைது செய்யப்பட்டவள் பெண் என்பதால் அவளை சுட யோசித்தனர். அப்போது, நான்ஸி “தாங்கள் தண்டிக்க தயங்கினால், அந்த பெண்ணை நான் சுட்டுக் கொன்றுவிடுவேன்” என்று கூறினாள். 

பொதுவாக, உளவாளிகளுக்கு தண்டிக்க உரிமைக் கிடையாது. தகவலை சேகரித்து கொடுப்பது மட்டுமே வேலை. ஆனால், நடப்பது இரண்டாம் உலக யுத்தம். மாட்டிய உளவாளி ஹிட்லருக்கு ஆதரவாக செயல்ப்படுபவள். அவளுக்கு கருணைக் காட்டக் கூடாது என்று நான்ஸி நினைத்தாள். 

கைது செய்யப்பட்ட பெண்ணும் நான்ஸிக்கு சலைத்தவள் அல்ல. தான் உளவு பார்க்க வந்ததை தைரியமாக ஒத்துக் கொண்டாள். அவள் முகத்தில் எந்த விதமாக அச்சமோ, களேபரமோ இல்லை. ஹிட்லருக்காக பணி செய்த பெருமிதம் அவள் முகத்தில் இருந்தது. எந்த வித கொடுமைகளை கொடுத்தாலும், எதிர்க் கொள்ள தயாராக இருந்தாள். 

நான்ஸி அந்த பெண்ணுக்கு உணவளித்தாள். பிறகு அவளிடம், “உன்னை இங்கு வைத்திருப்பது எங்களுக்கு ஆபத்தானது. யுத்த தர்மப்படி நாங்கள் உன்னை சுட்டுக் கொள்ளப் போகிறோம்” என்றார். 

அந்த பெண் மரணத்திற்கு அஞ்சவில்லை. மரணத்திற்கு துணிந்து தான் பிரிட்டனை வேவு பார்க்க வந்தாள். உணவு உண்டப் பிறகு, அந்தப் பெண் தனது ஆடைகளைக் கலைத்து நிர்வாணமாக நின்றாள். பாதுகாப்புக்காக இருந்த ஆண்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இறக்க போகும் பெண் இப்படி ஒரு காரியத்தை எதற்காக செய்தாள் என்று அவர்களுக்கு விளங்கவில்லை. இங்கிருக்கும் ஆண்களை கவரவா, கவனத்தை தன் மீது ஈர்க்கவா அல்லது இறக்கும் முன் யாரையாவது உடலுறவு அழைக்கவா? நிச்சயம் இல்லை. ஹிட்லருக்காக எதை வேண்டுமானாலும் செய்பவள் என்பதையும், தான் எதற்கும் துணிந்தவள் என்பதையும் காட்ட இந்த பெண் அப்படி நடந்துக் கொண்டாள். 

அந்த பெண் “ஹெய்ல் ஹிட்லர்” என்று கூற, நான்ஸி அவளை சுட்டார். அவள் இறக்கும் வரை உண்மையான நாஜியாக அந்த பெண் இருக்க விரும்பினாள். அவளை சுட்டத்திற்காக நான்ஸி வருத்தப்படவில்லை. பெருமைப் பட்டுக் கொண்டார். 

நான்ஸி கையால் இறக்கப்பட்ட பெண் முக்கியமில்லை. யுத்தக் களத்தில் ஆண்கள் செய்ய தயங்கியதை துணிச்சலாக செய்த நான்ஸி தான் நமது உளவு ராணி. அவளது முழுமையான பெயர் நான்ஸி வேக். 

உண்மையான நாஜி பெண்ணை தனது கையால் கொன்ற சந்தோஷத்தை. ‘தி கைட்’ ( November 2, 1987) பத்திரிக்கைக்கு தனது நினைவோடை பற்றி பகிரும் போது நான்ஸி வேக் இப்படி பேட்டியளித்தாள்.

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

யுத்தங்களில் 'யுத்த தர்மம்' என்று எவருமே, எந்த நாடுமே கவலைப்படுவதில்லை.
இதைதான் 'ராஜதந்திரம்' என்பார்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//கொள்ளப் போகிறோம்” என்றார். //

கொல்லப் போகிறோம்
- என்று திருத்துங்கள்.
பின், எனது இந்த கருத்துரையை
அழித்துவிடுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails