வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 18, 2015

’இலக்கியச் சவடுகள்’ நூலை வெளியிட்ட ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் !

பெரம்பூரில் நண்பர் உதயகண்ணன் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் நடத்தி வருகிறார். எங்கள் பகுதிக்காரர் என்பதாலோ என்னவோ இது என்னுடைய ‘பதிப்பகம்’ போன்ற உணர்வு. உரிமையாக எனக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்வேன். 

ம.காமுத்திரை எழுதிய ‘மில்’ நாவலுக்கு ’சுஜாதா’ விருது கிடைத்ததும், அதைப் படித்து விமர்சனம் எழுதிய முதல் ஆள் நானாக இருப்பேன். எஸ்.ஷங்கர்நாராயணன் நூல்களை பலருக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். இன்றைய இலக்கிய பதிப்புலகத்தில், இலக்கிய புத்தகத்திற்கு நியாயமான விலை வைத்து பதிப்பவர் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகத்தின் உதயகண்ணன். 



நான் ‘நண்பன்’ என்பதால் என்னுடைய நூல்களை பதிப்பிக்க கேட்டால் ‘முடியாது’ என்று தான் சொல்வார். நான் எழுதும் வாழ்க்கை வரலாறு, அரசியல் நூல்களுக்கு அவர் பதிப்பகத்தில் இடம் கிடையாது. கவிதை, கதை, நாவல், மொழியாக்கம் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கே முன்னுரை. படைப்பில் கொஞ்சமாவது இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர். பல வருடங்கள் போராட்டத்திற்கு பிறகே சென்ற வருடம் நான் எழுதிய ‘பெரியார் ரசிகன்’ (நாவல்) பதிப்பித்தார். 

தற்போது, ம.காமுத்திரை நூல்களை வம்சி புக்ஸ், எதிர் வெளியீடு பதிப்பகங்கள் வெளியிடுகிறது. மீரான் மைதீன் எழுதிய ‘அஜ்னபி’ நாவலை காலச்சுவடு வெளியிட்டுயிருக்கிறது. இவர்களின் முதல் நூலை வெளியிட்டது ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் தான். 

 பதிப்புலகத்தில் பதினைந்து வருடம் மேல் இயங்கி வருகிறார். இவர் பதிப்பித்த பல நூல்களுக்கு தமிழக அரசு விருது, பாரத் ஸ்டேட் வங்கி விருது, கவிதை உறவு விருது கிடைத்திருக்கிறது. ஆனால், இன்னும் இவருக்கு பாபஸி உறுப்பினர் வழங்கப்படாமல் இருப்பது கொஞ்சம் வருத்தமான விஷயம். 

இப்படி, One-Man Army யாக செயல்ப்பட்டு வரும் உதயகண்ணனுக்கு நேற்று அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருந்திருக்கும். காரணம், ஆ.மாதவன் எழுதி உதயகண்ணனின் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பித்த ‘இலக்கியச் சுவடுகள்’ நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. பல வருடங்கள் பதிப்பகம் நடத்திய உதயகண்ணனுக்கு நேற்று தான் அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. 


ஆ.மாதவனை பலர் பாராட்டியிருப்பார்கள். பலருக்கு அந்த நூலை பதிப்பித்தவர் யார் என்று கூட தெரிந்திருக்காது. இந்த பதிவின் மூலம் ‘இலக்கியச் சுவடுகள்’ நூலை பதிப்பித்த பதிப்பாளர் உதயகண்ணனை நான் வாழ்த்துகிறேன். 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails