வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, December 14, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 10

அடர்ந்த காடு.

புலி தனது இறையை தேடும் போது ஒரு நரியை தனியாக இருப்பதை பார்த்தது.

மறைந்திருந்து புலி நரியை தாக்கி உண்ணும் போது நரி கோபமாக “எவ்வளவு துணிவு இருந்தால், இந்த காட்டின் அரசனை தாக்குவாய்” என்றது.

புலிக்கு திகைப்பாக இருந்தது. எப்படி ஒரு நரி காட்டின் அரசனாக இருக்க முடியும். “நீ ஒரு நரி. எப்படி இந்த காட்டின் அரசன் என்று நம்புவது” என்று புலி கேட்டது.

“என் பின்னால் வா. நா நிருபித்துக் காட்டுகிறேன்” என்றது நரி.



நரி முன்னே செல்ல, புலி பின்னால் வந்தது.

இருவரும் மான் கூட்டம் விளையாடிக் கொண்டு இடத்தில் சென்றார்கள். மான் கூட்டம் நரி பின்னால் புலி இருப்பதை பார்த்து அஞ்சி ஓடியது.

“பார்த்தாயா ! என்னைப் பார்த்து எல்லா மான்களும் பயந்து ஓடியது.” என்றது. இதை புலியால் நம்ப முடியவில்லை.

”என்னோடு வா. மீண்டு நிறுபித்துக் காட்டுகிறேன்” என்று குரங்குகள் இருக்கும் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

 குரங்குகளும் புலியைப் பார்த்து மிரண்டு மரத்துக்கு மரம் தாவி ஓடியது. “இப்போது புரிந்ததா ! நான் தான் காட்டின் அரசன்” என்று நரி கூறியது.

“மன்னித்து விடுங்கள் அரசே ! உங்கள் பெருமை தெரியாமல் உங்களை தாக்கிவிட்டேன்” என்றுது புலி.

Management நீதி : 

நிர்வாகத்தில் பெரிய ஆளாக இருக்க  நாம் புலியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ‘புலி’ யை வேலைக்கு நியமித்தால் போதும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails