வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, December 10, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 9

நாம் சிறு வயதில் படித்த கதை தான். 

நூறு பறவைகள் கூட்டமாக வானில் பறந்துக் கொண்டு இருக்கும் போது கீழே தானியங்கள் பரவி கிடப்பதைப் பார்க்கிறது. தானியங்களை உண்ணும் போது, வேடனின் வலை அவர்களை சிறைப்படுத்துகிறது. வேடன் வருவதை பார்த்த பறவைகள் ஆளுக்கு ஒரு பக்கம் பறக்க முற்படுகிறது. ஆனால், யாராலும் பறக்கமுடியவில்லை.

அப்போது, ஒரு பறவை தலைமை ஏற்று, “ நாம் அனைவரும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக முழு பலத்தோடு பறக்க வேண்டும்” என்றது. 

அப்படியே, எல்லா பறவைகளும் பறக்க முயற்சிக்கும் போது வலையோடு சேர்ந்து வானத்தில் பறந்தது. பறவை தப்பித்ததோடு இல்லாமல் வேடன் தனது வலையை இழந்தான். 

”ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு” என்ற நீதிக்கு இந்த கதையை படித்திருப்போம். ஆனால், இந்த கதை இத்தோடு முடியவில்லை. 



வேடனிடம் இருந்து பறவைகள் தப்பித்தாலும், காலில் சிக்கிய வலையோடு முன்பு போல் சுதந்திரமாக பறக்க முடியவில்லை. தங்கள் காலில் மாட்டிய வலையை அருக்க யாருடைய உதவியை நாடலாம் என்று பறந்தப்படி பறவையின் தலைவன் கேட்டான். 

“எலியின் உதவியை நாட்டலாம்” என்று ஒரு பறவைக் கூறியது. 

ஒரு சில பறவை அந்த கருத்தை ஆதரித்தாலும், “நாம் கூட்டமாக வருவதை பார்த்து எலி பார்த்து பயந்து ஓடிவிடும். இது சாத்தியமாகாது” என்றது. 

“சிங்கம், நரி போன்ற பெரிய மிருகங்களிடம் உதவிக் கேட்கலாம்.” என்று இன்னொரு பறவைக் கூறியது. 

இந்த கருத்தை ஒரு சில பறவைகள் ஆதரித்தாலும், “வேடனிடம் மாட்டியிருந்தால் ஒரு சிலராவது தப்பித்திருக்க முடியும். சிங்கம், நரி போன்ற கொடிய மிருகத்திடம் இருந்து யாரும் உயிருடன் தப்பிக்க முடியாது” என்றது.

பறவைகளின் தலைவன், “நம்மால் நீண்ட நேரம் இப்படியே பறக்க முடியாது. அதனால், முதலில் எலியிடம் உதவிக் கேட்போம்” என்றது. 

 ஆனால், 30 பறவைகள் அந்த கருத்தை ஏற்கவில்லை. சிங்கத்தின் உதவி பெறலாம் என்பதில் முடிவாக இருந்தார்கள். தங்கள் கருத்துக்கு அதிக பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும், அவர்களின் கருத்தில் பிடிவாதமாக இருந்தார்கள். 

நேரமாக ஒவ்வொரு பறவைகளின் காலில் வலு குறைந்துக் கொண்டே வந்தது. “தறையில் இறங்கிய பிறகு, யாருடைய உதவிப் பெறலாம்” என்று தலைமை பறவை கூறியது. 

 “முடிவெடுத்த பிறகு தரையில் இறங்கலாம்” என்று இன்னொரு 20 பறவைகள் கூறியது. 

இப்படியே பறந்தப்படி பேசிக் கொண்டு வரும் போது கடல் மத்தியில் பறந்துக் கொண்டு இருந்தது. ஒரு சில பறவையால் பறக்க முடியவில்லை. வலையில் இருந்த பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ இறங்கி கடலில் விழுந்தது. 

தப்பிக்கும் போது இருந்த ஒற்றுமை தங்களை விடுவித்துக் கொள்ளும் போது இல்லாததால் எல்லா பறவைகளும் மடிந்தது. 

 Management நீதி : 

 ஒரு குழு (Team) ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருப்பது பெரிய விஷயமில்லை. அந்த ஒற்றுமையை கடைசி வரைக்கும் தக்க வைத்துக் கொண்டால் தான் எடுத்த வேலையை சரியாக முடிக்க முடியும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails