வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 17, 2016

வெட்டி கௌரவம் !

இரண்டு நாட்களாக எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் ஒரு சிலர் ”ஆணவக்கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால், ஒரு குடும்பத்தில் இருந்து பெண்ணை இழுத்துச் சென்று அந்த குடும்ப சந்தோஷத்தை கெட்டுப்பது தவறு” போன்ற கருத்து தெரிவித்திருப்பதை பார்க்கிறேன். 

ஏறக்குறைய, அவர்கள் கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக தான் கருத்துச் சொல்கிறார்கள். அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று சொல்லியிருந்தால் அவர்கள் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நடந்திருப்பது கொலை. பல வருடங்களாக வளர்த்த மகளை விட ஜாதிப்பெருமை பெரிதாக நினைப்பவர்களின் ஆணவச்செயல். அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.



உண்மையில் அவர்கள் மகளை அன்பு காட்டி வளர்த்திருந்திருந்தால், அந்தப் பெண்ணுக்கு பெற்றோர்களை பிரிந்து சென்றிருக்கமாட்டாள். பெற்றோரின் அன்புக்கு முன் ‘காதல்’ பெரிதாகவும் தெரிந்திருக்காது. ஆனால், தங்கள் ஜாதிப் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கருவியாக மகளை வளர்த்திருக்கிறார்கள். அது நிறைவேறாத கோபத்தில் கொலையில் முடிந்திருக்கிறது. 

அந்தப் பெண்ணும் ஜாதிப்பார்க்கும் பெற்றோருக்கு மகளாக இருப்பதை விட தாழ்ப்பட்டவனாக இருந்தாலும் அவரின் மனைவியாக இருக்க விரும்பியிருக்கிறாள். அது சரியா ? தவறா ? என்பதை அவர்கள் வாழப்போகும் வாழ்க்கையில் தெரிந்துவிடும். அவர்கள் வாழ்வே கூடாது என்று நினைப்பவர்களின் செயலுக்கு பின்னால் என்ன காரணம் சொன்னாலும் அது தவறு தான். 

நாம் ஒருவர் மீது உண்மையாக அன்பு காட்டி, அவர் நம்மை விட்டு பிரிந்து செல்கிறார் என்றால் ஒன்று நாம் சரியாக அன்பு காட்டவில்லை என்று சொல்ல வேண்டும். அல்லது நமது அன்பை புரியாதவராக இருக்க வேண்டும். இரண்டுக் காரணத்திற்காக ’கொலை’, ‘தற்கொலை’ தீர்வில்லை. அது சரி என்று சொல்லவும் முடியாது.

Thursday, March 10, 2016

அபிநேத்திரி (2015) - கன்னடப்படம்

யுவகிருஷ்ணா எழுதிய ‘நடிகைகளின் கதை’ நூலின் மூலம் இப்படி ஒரு படம் வந்திருப்பதை அறிந்து கொண்டேன். அதுவும், ’தண்டுபாலயா’ படத்தில் பயமுருத்திய பூஜா காந்தி (அர்ஜுன் நடித்த ‘திருவண்ணாமலை’ படத்தின் நாயகி) நடித்தப்படம் என்பதால் டவுன்லோட் செய்து பார்த்தேன். 

கதை என்று பார்த்தால் மற்றுமொரு நடிகையைப் பற்றிய கதை என்று சொல்லலாம். ஆனால், வணிகத்தில் பின் தங்கிய கன்னடப்படத்தின் சகாப்தமாக இருந்த நடிகை கல்பனா பற்றியப்படம் என்பதால் இந்தப்படம் அதிக முக்கியத்துவம் பெருகிறது. தமிழில் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சோப்பு சீப்பு கண்ணாடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.


நாடக நடிகையான நந்தா நடித்த முதல் படமே படுத்தோல்வி. ராசியில்லாத நடிகை என்பதால் எல்லாப் பட நிறுவனங்களும் அவளுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறது. அறிமுக இயக்குனரால் மீண்டும் கன்னட சினிமாவில் நுழைந்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார். 

காலத்தின் ஓட்டத்தால் வாய்ப்புகள் குறைய தொடங்குகிறது. நடித்த படங்களும் தோல்வியை தழுவுகிறது. ஒரு கட்டத்தில் கையில் படமில்லை. கடன் தொல்லை. அதனால், மீண்டும் நாடகத்தில் நடிப்பதை தொடர்கிறார். 

சக நாடக நடிகர், கம்பெனி முதலாளியான சாய் ரவியை காதலிக்கிறார். ஏற்கனவே அவருக்கு திருமணமாகி, திருமண வயதில் ஒரு பெண் இருப்பதை நந்தா கவலைப்படவில்லை. கருத்துவேறுபாட்டால் அவரையும் விட்டு பிரிந்து தனிமையில் வாடுகிறாள். தற்கொலையும் செய்துக் கொள்கிறாள். 

60களில் கன்னடப் பெண்கள் நவீன உடை அலங்காரத்தில் நடிகை கல்பனாவை தான் காப்பி அடிப்பார்களாம். அவளுடைய உடை அலங்காரத்தில் மற்ற நடிகைகளால் ஈடுக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு புகழ் உச்சியில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்டவர், பட வாய்ப்பு குறைந்தவுடன் அதாளப்பாலத்தில் விழுந்திருக்கிறார் என்றால் சினிமா என்ற மாய உலகம் எப்படிப்பட்டது என்பதை யூகிக்கிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அன்றைய தேதியில் கன்னட திரையுலகம் எப்படிப்பட்டது என்பதை ஒரு சில காட்சிகளில் தெரிந்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இரவு நேர வாடகை குறைவாக இருக்கும் என்பதால் கன்னடப்படங்கள் படப்பிடிப்பு இரவு நேரங்களில் நடக்குமாம். 

பூஜா காந்தி வழக்கம் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்பக் காட்சியில் மட்டும் தன்னை இளமையாக காட்டிக் கொள்ளும் போடும் மேக்-கப், ஆடை தான் பார்க்க சகிக்கவில்லை. ஆனால், போக போக ‘நந்தாவாகவே மாறியிருக்கிறார். 

கல்பனா என்ற சகாப்தத்திற்கு தனது நடிப்பால் உண்மையான காணிக்கை செலுத்திய பூஜா காந்திக்கு வாழ்த்துகள் !!

Tuesday, March 8, 2016

பெண்கள் தின வாழ்த்துகள் !!



அன்பாய் இருப்பவள்
ஆச்சாள் என்பவள்
இல்லத்தை ஆள்பவள்
ஈரவன் முகம் கொண்டவள்
உயிரைக் கொடுப்பவள்
ஊக்கத்தின் உருவானவள்
எழில் மொழி பேசுபவள்
ஏணிப்படியாய் இருப்பவள்
ஐயத்தை போக்குபவள்
ஒவ்வாததை செய்யாதவள்
ஓங்காரத்தை போற்றுபவள்
ஔவியம் கொள்ளாதவள்

அவள் தான்
‘பெண்’ என்பவள் !

**
meanings
ஆச்சாள் - அம்மா, ஈரவன் - நிலவு, ஓங்காரம் - கடவுள், ஔவியம் - பொறாமை⁠⁠⁠⁠

Friday, March 4, 2016

மர்லின் மன்றோ : கருப்புவெள்ளைக்கு வண்ணம் கொடுத்தவள்

நடந்து செல்லும் காலடி சத்தம். நகங்களில் அழகு சேர்க்கும் நெயில் பாலிஷ். காலை உயரத்தி வைக்கக் கூடிய ஹை ஹில்ஸ். வல வலவான கால்கள். அப்படியே காலின் மேல் நோக்கி முட்டி வரை சென்றால் நெஞ்சம் பதை பதைக்கும். அவ்வப் போது முட்டியை மூடியப்படி அவளது ஸ்கர்ட் ஆடை வந்துப் போகும். ஆடை காற்றில் இன்னும் மேலே பறக்காதா என்று பார்ப்பவர் மனது ஏங்கும். அவளைச் சுற்றிய செயற்கை காற்றும் அந்த எண்ணத்தோடு செயல்ப்படும். அதை அறிந்தும், அவளது இடது கை ஆடைக் கொண்டு முட்டி வரை மூடி மறைக்கும். 

அந்த நோடியில், நமக்கு அவளது இடது கை மீது அதிகமாக கோபம் வரும். ஆனால், அதே அளவுக்கு அவளது வலது கை மீது மரியாதை பிறக்கும். காரணம், பார்ப்பவர்கள் மனதை புரிந்துக் கொண்டு அவளின் இதழில் இருக்கும் முத்தத்தை பெற்று அனைவரும் பரிபாறியப்படி காற்றில் பறக்கவிடுவாள் அந்த தேவதை.

தனது ஆடைப் பறந்துவிடுமோ என்ற அச்சம் அவள் முகத்தில் இருக்காது. ஆனால், பார்ப்பவர்கள் கண்கள் அவள் ஆடை விலகுவதே விரும்புவார்கள். தன்னைப் தவறாக பார்க்கிறார்கள் என்று தெரிந்தும் அவளது புன்னகையில் ஒரு செட்டிமீட்டர் கூட குறையாது. அவளது அனைத்து பற்களும் விளக்கு வெளிச்சத்தை விட பிரகாசமாக எரியும். சிவப்பு வண்ணம் புசப்பட்ட அவளது லிப்ஸ்டிக் இதழ் முத்தம் கொடுப்பது போன்று வைத்திருப்பாள். 

தங்கத்தால் செய்யப்பட்ட தேகம் என்பதை இலக்கியத்தில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இவளின் தேகம் மட்டுமல்ல கூந்தலும் தங்க நிறத்தில் மின்னக்கூடியவை. மற்ற பெண்களை போல் முதுகுவரை கூந்தல் வைத்து கொண்டு தன் பின்னழகை மறைப்பவள் இல்லை. பாப் கட் முடி வைத்திருப்பவள். தன் கழுத்தின் அழகைக் கூட மறைக்க மாட்டாள். 

காற்றில் பறக்கும் அவளது முத்தத்தை பிடிக்க ஆயிரம் கைகள் தவமாய் தவம் காத்திருந்தது. ஹாலிவுண்டில் பல நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவள் இந்த அழகு தேவதை தான். பல நாயகர்களை ஓரம் கட்டிவிட்டு தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவள். 



ஆடையை குறைத்து கவர்ச்சி காட்டுவதில் உலகப் புகழ் பெற்றவள். தன் அழகை எப்படி வெளிப்படையாக காட்டினாலோ, தன் மனதையும் வெளிப்படையாக காட்டினாள். ஆனால், அவள் அழகை பார்த்து ரசிக்க கோடி கண்கள் இருந்தாலும், அவள் மனதுக்கு ஆறுதலான ஒரு மனமுமில்லை. 

ஒரு நடிகை எப்படி எல்லாம் பொருள் ஈட்டலாம் என்பதற்கு இன்றைய நடிகைகளுக்கு சொல்லிக் கொடுத்தவள். அதே சமயம், எப்படி எல்லாம் வழி தவறிப் போகக் கூடாது என்பதற்கும் முன் உதாரணமாக இருந்தவள்.

தமிழகத்தில் சில்க் சுமிதா தமிழர்களின் கனவை எப்படி கலைத்தாரோ, உலகளவில் பலரின் கனவுகளை இந்த தேவதை கலைத்தாள். சில்க் சுமிதாவுக்கு ரோல் மாடலே இந்த தேவதை தான். அதனால் தான் இந்த தேவதை தேர்ந்தெடுத்த முடிவை சில்க் சுமிதாவும் தேர்ந்தெடுத்தாள். 

சில்க் சுமிதா மட்டுமல்ல... புகழ் உச்சியில் இருந்து விழ்ச்சியடைந்த நடிகை விஜி, இப்படி ஒரு நடிகை இருந்தாரா என்பதை தெரியாமல் போன நடிகை பிரதிக்ஷா, தமிழ் நாட்டை தனது இடுப்பால் ஆட்டி வைத்த சிம்ரனின் சகோதரி நடிகை மோனல், ஹிந்தி திரையுலகின் நம்பர் ஒன் இடத்தில் இருந்த திவ்ய பாரதி. இன்னும் இந்த பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம். அவர்களுக்கெல்லாம் இந்த தேவதை காட்டிய வழியை தேர்ந்தெடுத்தார்கள்.

அவள் இறந்த ஐம்பது வருடங்கள் மேலாகியும், அவள் இருந்த சுவடு ஹாலிவுட்டால் மறக்க முடியாது. அவள் பெயர் தெரியாதவர்கள் கூட அவளது புகைப்படத்தை அடையாளம் கண்டுக் கொள்வார்கள். தன் அறையில் மாட்டி வைத்து தினமும் அதன் முன் முழிப்பார்கள். 

அந்த தேவதைக்கு பெற்றோர் வைத்த பெயர் ‘நோர்மா ஜீன்’. திரையுலகம் அவளுக்கு வைத்த பெயர் ‘மர்லின் மன்றோ’ !! 

கருப்பு வெள்ளை காலத்தில் நடித்தவள் தான். ஆனால், பலரின் கனவுகளுக்கு வண்ணம் கொடுத்தவள். அவளின் ஒவ்வொரு புகைப்படமும் பல டாலருக்கு விற்பனையானது. அவளின் கடைக்கண் பார்வைக்கு பல சீமான்கள் காத்திருந்தார்கள். அவள் பாட்டை கேட்பதற்கு அமெரிக்க அதிபர் கென்னடி கூட தவமாய் இருந்தார். 

மர்லின் மன்றோ என்னும் தேவதை பூமியில் இருந்த காலம் 36 ஆண்டுகள். திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியது 15 வருடங்கள். ஆனால், ஐம்பது வருடங்கள் கடந்தும் அவளை யாராலும் மறக்க முடியவில்லை. அவளின் புன்னகையை யாராலும் மறைக்கவும் முடியாது. வாழும் போது சர்ச்சைகளில் நாயகியாகவே இருந்தார். இறந்தப் பின்னும் சர்ச்சகையாக இருக்கிறார். அவரின் மரணம் இன்று வரை தொடரும் மர்மமாகவே இருக்கிறது. 

மன்றோவின் அழகை வைத்து பலர் கோடிக் கணக்கான டாலர்களை சம்பாதித்திருக்கிறார்கள். மன்றோவின் பார்வைக்காகவும், அழகுக்காகவும் எத்தனை கோடி வேண்டிமானாலும் கொடுக்கலாம் என்று பலர் வரிசையில் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட அவளது மனதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவள் அழகுக்கு இருந்த மதிப்பு, அவளது மனதிற்கு யாரும் கொடுக்கவில்லை என்பது தான் இந்த தேவதையின் கண்ணீர் முடிவுக்கு காரணம். 

இன்றைக்கும் இணையத்தில் தேடினால் மர்லின் மன்றோவின் கவர்ச்சிப்படம் கிடைத்துவிடும். நிர்வாணப்படம் கூட கிடைக்கலாம். ஆனால், அவளின் வெள்ளை உள்ளம், அன்பும் பாசம் கொண்ட மனது இருந்தது. அதைப் பற்றி யாரும் அறியவில்லை. 

”என்னை Sex Symbol ஆக பலர் பார்ப்பதை வெறுக்கிறேன். Sex எல்லோரின் வாழ்க்கையில் ஒரு பகுதி. அதன் அடையாளமாக நான் இருக்க விரும்பவில்லை. Sex தவிர்த்து வேறொரு அடையாளமாகவே இருக்க விரும்புகிறேன்.” – மர்லின் மன்றோ .

LinkWithin

Related Posts with Thumbnails