வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 22, 2016

உலக சினிமா : Birdcage Inn

உங்கள் வீட்டின் எதிரே ஒரு விபச்சாரி இருக்கிறாள். தினமும் அவளோடு தங்குவதற்கு ஆண்கள் வந்து போகிறார்கள். சில சமயம் எதிர் வீட்டில் இருக்கும் கூச்சல் சத்தம் உங்கள் வீடு வரை கேக்கிறது. அப்போது உங்களுடைய மனநிலை என்ன ? 

நான் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுப்பேன் என்று கூறி நல்லவர் போல் நடிக்கலாம். ஆனால், உங்கள் மனதில் அவளோடு ஒரு இரவு தங்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கும். அதற்கான விலையை அவளிடம் பேசத் தோன்றும். அதே சமயம் உங்கள் வீட்டு பெண்களுக்கு அந்த விஷயம் தெரியக் கூடாது என்ற அச்சமும் இருக்கும். 

இது ஆண்களுக்கான மனநிலை. மாற்ற முடியாது. ஒரு பெண் தன் வீட்டு எதிரில் விபச்சாரி தங்கியிருப்பதை எப்படி ஏற்றுக் கொள்வாள் ? தன் வீட்டின் இருக்கும் ஆண்களை அவளிடத்தில் காப்பாற்ற நினைப்பாள். அவளை அங்கிருந்து துரத்திவிடதான் நினைப்பாள். ஆனால், அவளால் அதிக ஆதாயம் இருக்கும் போது அவளை ஒரு பெண்ணால் எப்படி ஒதுக்கிவிட முடியும். வெளியே சிரித்து நடித்து, உள்ளுக்குள் கோபத்தை வளர்த்துக் கொள்வாள்.



விபச்சாரி எதிர் வீட்டில் இருக்கும் ஆண் – பெண் மனநிலையை கடந்து மூன்றாவது முக்கியமான ஒருவரின் மனநிலை இருக்கிறது. அந்த விபச்சாரியின் மனநிலை. இரவில் பணத்துக்காக ஒருவரோடு இருந்து, மறுநாள் மற்றவர்கள் போல் இயல்பான வாழ்க்கை வாழலாம் என்று நினைக்கும் போது, மற்றவர்கள் அவளை பார்க்கும் பார்வை எப்படி இருக்கும் ? பகலாக இருந்தாலும் இரவில் செய்யும் வேலையை தான் செய்ய வேண்டும் என்ற சுற்றியிருக்கும் பார்வைகள் நினைக்கும். தன்னுடைய செயல்பாடு நியாயம் சொல்ல முடியாமல், அவர்களின் பார்வையை கடந்து செல்ல முடியாமல் அந்த விபச்சாரியின் மனம் தள்ளாடிக் கொண்டு இருக்கும். 

அந்த விபச்சாரி தங்கியிருக்கும் எதிர் வீட்டில் அவள் வயதுடைய ஒரு பெண் அவளை எப்படி பார்ப்பாள் ? அவளோடு எப்படி பழகுவாள் ? அவர்களுக்குள் எப்படிப்பட்ட உறவு இருக்கும் ? இப்படி ஒரு விபச்சாரிக்கும், சாராசரி குடும்ப பெண்ணுக்கும் இருக்கும் உறவை சொல்வது தான் "Birdcage Inn" படத்தின் கதை.  

கடற்கரை சிறு ஹோட்டல் விடுதி. ஒரு பெண், தனது சாமான்களை எடுத்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருக்கிறாள். அவள் எதிரில் இன்னொரு பெண் சாமான்களோடு உள்ளே வருகிறாள். அந்தப் புதிய பெண், கிளம்பிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கையசைத்து, வழியனுப்புகிறாள். ஆனால், கிளம்பும் பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. 

புதிதாக வந்த பெண்ணின் பெயர் ஜின்-ஆ. புதிதாக வந்த இடத்தின் அழகை ரசிக்க கடற்கரை பாறை மீது அமர்கிறாள். அப்போது கண்கள் சொருகி கடலில் விழ, ஒருவர் அவளை காப்பாற்றுகிறார். மீண்டும் விடுதிக்கு வரும் ஜின்-ஆ தன் சம வயதில் இருக்கும் ஒரு பெண் அவளை முகம் சுளுத்து பார்க்கிறாள். அவள் “Birdcage Inn” நடத்தும் முதலாளியின் மகள் ஹ்யே – மி. 

அந்த விடுதியை நடத்தும் முதலாளிக்கு உதவாத கணவன். பள்ளிக்கு செல்லும் பதின்ம வயதில் ஹ்யூன்- வூ என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறாள். இரவில் தங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவோடு, ஜின்-ஆவும் விருந்தாக இருக்கிறாள். அது தான் ஜின்-ஆவின் தொழில் என்பது நமக்கு அப்போது தான் புரிகிறது. 

அந்த விடுதி மூலம் வரும் வருமானத்தில் அதை நடத்து பெண்மணி தனது மகன், மகளை படிக்க வைக்கிறாள். குடும்பமும் நடத்துகிறாள். ஆனால், அவளின் கணவன் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. அவனால் ஜின்-ஆ கற்பழிக்கப்படுகிறாள். ஆனால், அதை அவளது மனைவியிடம் கூறவில்லை.

பதின்ம வயது மகன் ஹ்யூன்- வூ புகைப்பட போட்டிக்காக அவளை நிர்வாணப்படத்திற்கு போஸ் கொடுக்க வற்பூறுத்திக் கொண்டே இருக்கிறான். ஜின் – ஆ பல முறை மறுத்தும் அவன் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் கடற்கரை படகில் அவன் புகைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க, அவளோடு உறவு கொள்ள கட்டாயப்படுத்துகிறான். ஜின் – ஆ மறுத்தும் அவன் விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் அவளும் இணங்கிறாள். 

அந்த வீட்டில் இரண்டு ஆண்கள் இப்படி இருக்க, முதலாளி பெண்மணியோ அவளை பணம் சம்பாதித்துக் கொடுக்கும் கருவியாக பார்க்கிறாள். தனக்கு நட்பாக பழகக்கூடியவள் ஹ்யே – மி என்று நினைத்து, அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி கொடுக்கிறாள். ஆனால், ஹ்யே – மி ஜின் – ஆவின் நட்பை ஏற்றுக் கொள்ளவில்லை. 

இதற்கு நடுவில், ஹ்யே – மிவுக்கு ஒரு காதலன் இருப்பது தெரியவருகிறது. ஹ்யே – மி உடல் உறவுக்கு அழைக்க, திருமணத்திற்கு முன் கிடையாது என்று மறுக்கிறாள். ஹ்யே – மி உறவுக்கு மறுத்த சோகத்தில் போதையோடு ஜின் – ஆவுடன் உறவுக்காக செல்கிறான். 

ஜின் - ஆ வாழும் அறையை பார்க்க ஹ்யே – மி உள்ள நுழைகிறான். அங்கு இருக்கும் பொருட்கள், படங்கள் எல்லாம் பார்த்து அவள் மீது இரக்கம் பிறக்கிறது. தன் சம வயதில் இருக்கும் ஒரு பெண் வாழும் வாழ்க்கை நினைத்து அவள் மீது பரிதாபம் பிறக்கிறது. 

அந்த சமயத்தில் ஹ்யூன்- வூ ஜின் – ஆவை எடுத்த நிர்வாணப்படம் பத்திரிகையில் வெளியாகிறது. அவளின் முன்னாள் தரகர் பத்திரிகையாளர் கொடுத்தப் பணத்தில் பங்குக்கேட்கிறான். தனக்கு யாரும் பணம் தரவில்லை என்று ஜின் – ஆ சொல்லியும் அவன் நம்ப மறுகிறான். கோபத்தில் ஜின் – ஆவை அடிக்கவும் செய்கிறான். அந்த சமயத்தில் ஹ்யே – மி அவளை காப்பாற்றுகிறாள். 

அந்த தரகர் திரும்பவும் பணத்திற்காக வருவேன் என்று சொல்லி செல்கிறான். விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஜின் – ஆ தற்கொலை செய்து கொள்ள தனது கையை அறுத்துக் கொள்கிறாள். ஆனால், சரியான நேரத்தில் ஹ்யே – மி அவளை காப்பாற்றுகிறாள். அந்த வீட்டில் இது வரை கிடைக்காத அன்பும், கனிவும் ஹ்யே – மி மூலம் கிடைக்கிறது. 

ஹ்யே – மி ஜின் – ஆவை கை கட்டோடு அழைத்து வந்து தனது அறையை காட்டுகிறாள். அப்போது, விடுதிக்கு ஒரு வாடிக்கையாளர் வர ஜின் – ஆ பதிலாக ஹ்யே – மி அந்த வாடிக்கையாளரோடு உறவுக் கொள்கிறாள். 


கதை என்று எடுத்துக் கொண்டால் ஒரே இடத்தில் வாழும் சமய வயதுடைய இரண்டு பெண்கள். ஒரு பெண்ணை வெறும் உடலாக பார்க்கிறார்கள். அதன் மூலம் வரும் ஆதாயத்தை மட்டும் அனுபவிக்கிறார்கள். இன்னொரு பெண்ணிடம் அன்பாக நடத்துகிறார்கள். இந்த இரண்டு பெண்களை நடத்தும் மனிதர்கள் அவர்களுக்குள் ஒரு பாசப்பினைப்பை உருவாக்குகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தனது காதலனுடன் இழக்க விரும்பாத தனது கண்ணித்தன்மையை, ஜின் – ஆவுக்காக இழக்கிறாள். 

மற்ற இயக்குனர்களை காட்டிலும் கிம் கி டுக் இதில் தான் வேறுபட்டு இருக்கிறார். ஏதார்த்த வாழ்க்கை இப்படி நடக்குமா என்ற கேள்வியோடு அதை நடத்தி காட்டி நம்மை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வார். அதை ஏற்றுக்கொண்டால் நாம் கணத்த மனதோடு செல்ல வேண்டும். ஏற்கக்கூடாது என்று நினைத்தால் நாம் கிம் கி டுக்கை முழுவதுமாக புரக்கணிக்க வேண்டும். 

இரண்டு பெண்ணின் வாழ்க்கை காட்டிய கிம் கி டுக்கின் “Birdcage Inn” படைப்பை உங்களால் புரக்கணிக்க முடியாது என்பது தான் உண்மை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails