வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, May 24, 2016

Yes, I am Yasmin ! - டிடெக்டிவ்

பெண் துப்பறியும் நிபுணர்களை பற்றிய தமிழில் வந்த முதல் புத்தகம் என்று சொல்லலாம். என்ன தான் பெண்ணியம், பெண் உரிமை பேசினாலும் பெரும்பாலான பெண்கள் சமூகத்தில் ஆண் காட்டிய பாதையில் தான் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்களே அஞ்சக்கூடிய ‘ஜெம்ஸ்பாண்ட்’ வேலையான துப்பறியும் வேலையை தேர்ந்தெடுத்திருக்கிறார் யாஸ்மின். 



துப்பறியும் துறையில் தன்னை தேடி வந்த வழக்குகள், அதை எப்படி எதிர்கொண்டார், அதை கையாளும் போது சந்தித்த சவால்கள் என்று யாஸ்மின் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்தப் புத்தகத்தில் பெண் உளவாளி, RAW பற்றிய ஒரு சில தகவல்களும் உண்டு. 

யாஸ்மினின் வாழ்க்கை வரலாற்று நூலாக இருந்தாலும், வெளிநாட்டு உளவாளிகளை பற்றிய தகவல்கள் என்று இந்த புத்தகத்திற்கு தேவையில்லாதது என்று தோன்றுகிறது. 

யாஸ்மின்னை பேட்டிக் கண்டு சலீம் அக்பர் என்பவர் எழுதியிருக்கிறார். யாஸ்மின் நேரடியாக எழுதியிருந்தால் அல்லது அவரே நேரடியாக விளக்குவது போல் எழுதப்பட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். 

**
 Yes, I am Yasmin ! - டிடெக்டிவ் 
- சலீம் அக்பர்
- Rs.100

 இணையத்தில் வாங்க… 

Monday, May 23, 2016

புத்தக விற்பனை பற்றி வீ கேன் புக்ஸ்

நண்பர்களே, 

ஒரு புத்தகத்தில் விற்பனையாளர்களுக்கு வரும் லாபம் 25-30% மட்டுமே !! 

Maximum Sales Maximum Profit எல்லாம் மளிகைக் கடைக்கு பொருந்தும். புத்தக விற்பனைக்கு பொருந்தாது. மாதம் மாதம் ரூ.2000 வாங்குபவரா நீங்கள்... வேண்டாம் ஒரு முறை 2000 ஆர்டர் கொடுத்துப் பாருங்கள் அதிகப்படியாக 10-15% கொடுக்க முடியும். அதற்கு மேல் கூட எங்களால் தர முடியாது. தபால் செலவு கூட நீங்கள் தான் ஏற்க வேண்டியது இருக்கும். 

பதிப்பாளர் எங்களுக்கு கொடுக்கும் கழிவில் இருந்து தான் நாங்கள் உங்களுக்கு கொடுக்க முடியும். எங்கள் லாபம் அனைத்தும் கொடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஒரு சில புத்தகங்கள் அதிக கழிவு (50% வரை) வழங்குகிறோம் என்றால், பதிப்பாளர் குறிப்பிட்ட நூல்களை விற்று தருவதற்காக அதிக கழிவு எங்களுக்கு கொடுக்கிறார்கள். அதில் இருந்து நாங்கள் உங்களுக்கு கொடுக்கிறோம். அவ்வளவு தான். 

Flipkart / Amazon எப்படி கொடுக்கிறது என்று கேள்வி கேட்பீர்கள் ? 

இதை அவர்களிடம் நீங்கள் கேட்டால் பதில் வராது. Reliance போன்ற பெரிய நிறுவனத்துடன் ரோட்டில் விற்பனை செய்யும் வியாபாரியோடு ஒப்பிடுவதற்கு சமம். 

Flipkart / Amazon எல்லா தமிழ் புத்தகங்கள் கிடையாது. கிடைக்கவும் கிடைக்காது. காரணம், அவர்கள் கேட்கும் கழிவை எந்த பதிப்பாளர்களால் கொடுக்க முடியாது. வருடத்திற்கு 100 - 300 கோடி நஷ்டத்தில் அவர்களால் வெற்றிக்கரமாக இயங்க முடியும். அப்படி தான் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். என்னால் ரூ.100 நஷ்டத்தில் கூட இயங்க முடியாது. 

Flipkart / Amazon யில் 200 - 300 பேர் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் முதலீடு வருகிறது. 

Wecanshopping.com - தமிழ் இணைய புத்தக அங்காடி தனி மனிதன் நடத்துவது. புத்தகம் வாங்கி, பேக்கிங் செய்வது, கஸ்டமரை தொடர்பு கொள்வது என்று நான் தனி மனிதனாக இயங்குகிறேன். wecanshopping.com என்ற இணையதளம் வைத்திருப்பதால், பெரிய நிறுவனம் எல்லாம் கிடையாது. 

உங்களுக்கு அதிக கழிவு ( 20% - 30% என்று வைத்துக் கொள்வோம் ) கொடுத்துவிட்டு சாப்பாட்டு நான் என்ன செய்யலாம் என்று நீங்கள் சொல்லுங்கள். ஒன்று புரிந்துக் கொள்ளுங்கள்.... 

நான் 
உங்கள் பணத்தை திருடவில்லை. 
நீங்கள் எனக்கு பிச்சைப் போடவில்லை !

- வீ கேன் புக்ஸ்

Friday, May 20, 2016

ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் !!

மக்கள் நலக் கூட்டணி மூலம் அ.தி.மு.க தனது ‘B team' வைத்து வெற்றிப் பெற்றது எப்படி மறுக்க முடியாதோ,. அதேப் போல் தி.மு.க தரப்பில் இரண்டு முக்கிய தவறு இருப்பதை மறைக்க முடியாது. 

முதல் காரணம், 

காங்கிரஸூடன் உறவு. அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தால் அதிகமாக 20 சீட் கொடுத்திருக்கலாம். ஜி.கே.வாசன் காங்கிரஸ்யை இரண்டாக உடைத்த நிலையில் அவர்களுக்கு 41 சீட் கொடுத்தது மிகப் பெரிய தவறு. 

தி.மு.க - அ.தி.மு.க போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில், அதிமுக 'Close Margin' தான் வெற்றிப் பெற்று இருக்கிறார்கள். ஆனால், அதிமுக - காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் அதிமுக ‘Comfortable Win' நிலைமையை பார்க்க முடிகிறது. 

இரண்டாவது காரணம், 

தி.மு.க ஸ்டாலின் தலைமை ஏற்க தயாராக இருக்கிறார்கள். 96ல் அவர் மேயராக கொண்டு வந்த திட்டங்களை மக்கள் மறக்கவில்லை. கனிமொழியும் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று தெரிக்கிறது. ஆனால், கலைஞர் இன்னும் தன்னை முதல்வர்’ வேட்பாளர் என்று அறிவிப்பது கட்சிக்குள்ளே அதிருப்தி ஏற்படுத்தி வருகிறது. மேலும், 

அழகிரி’ தி.மு.கவுக்கு எதிராக கருத்து கூறுவதும், கட்சி தலைமை அமைதியாக இருப்பதும் தொண்டர்களின் உற்சாகத்தை குறைத்தது என்று சொல்லலாம்.

இருந்தாலும், 

2011ல் எதிர்கட்சி இடத்தை இழந்தது, 2014ல் பாராளமன்றத் தேர்தலில் ஒரு சீட் கூட வெல்லாமல் இருந்தது... இப்படி இருந்த தி.மு.கவை தனி மனிதனாக ஸ்டாலின் பெரும்பான்மை கொண்ட எதிர்க்கட்சியாக மீட்டெடுத்திருக்கிறார். தமிழகத்தில் முதல் முறையாக அதிக இடங்கள் கொண்ட ( 99 சீட் ) எதிர்க்கட்சியாக கொண்டு வந்திருக்கிறார். 

அதிமுக வெற்றிப் பெற்றாலும், அவர்களின் கட்சி எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், திமுகவின் கட்சி எதிர்காலத் தலைமை யார் என்று காட்டியிருக்கிறது. 

ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் !!

Friday, May 13, 2016

உலக சினிமா : Coastal Guard

தேசப்பற்று என்பது தானாக விரும்பி வர வேண்டியது. உணர்வுப்பூர்வமாக உணர்ந்து புரிந்துக் கொள்ள வேண்டியவை. அதேப் போல், தேச சேவை தானாக விரும்பி செய்ய வேண்டிய ஒன்று. அதற்கான மனநிலையை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும், உடலை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். கற்பனைகளும், வார்த்தைகளும் தேசபக்தியை ஊட்டிவிட்டு பக்குவற்றவர்களை தேவைக்கு அதிகமான பயிற்சியெல்லாம் அளித்தால் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதற்கு “Coastal Guard” மிக சிறந்த உதாரணம். 

தென் கொரியா, வட கொரியாவின் எல்லை கடலோர பகுதியாக Saemangeum.

அந்த கடலோரப்பகுதியில், மீன் பிடிப்பவனாக ச்யோல் கு இருக்கிறான். அவனுக்கு மீ யோங் என்ற தங்கை உண்டு. அவள் கில் என்பவனை காதலிக்கிறாள். எல்லைப் பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு எதிரான விமர்சனம் இருப்பது போல் அந்த பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்கள் மீது இருக்கிறது. அவர்களால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பது அந்தப் பகுதி பொது மக்களின் கருத்து. 

கடலோர எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவனாக காங் ஹாங் இருக்கிறான். வட கொரியா உளவாளியை எப்படியாவது பிடிப்பது தான் அவனுடைய வாழ்நாள் லட்சியம். சக வீரர்கள் இந்த பகுதியில் எந்த உளவாளியும் ஊடுரூவதில்லை என்று சொல்லியும் அவன் ஏற்பதாக இல்லை.

யுத்த சாயத்துடன் யுத்திற்காக தன்னை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கடலோர பகுதியை காவல் காக்கிறான். 

ஒரு முறை, காங் ஹாங் தனது நண்பனோடு செல்லும் போது அவனுக்கும் ச்யோல் கு என்ற மீனவனுக்கும், வாக்குவாதம் முற்றுகிறது. அப்போது, ச்யோல் கு “எங்கள் வரி பணத்தை நீங்கள் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இங்கு உளவாளிகளே கிடையாது. உங்களிடம் இருப்பது வெத்து தூப்பாக்கி” என்கிறான். 

கோபத்தில், காங் ஹாங் “நான் உங்களை சுட நீங்கள் உளவாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறான். ஒரு கட்டத்தில், இருவரும் அடித்துக் கொள்ளும் வரை செல்கிறார்கள். பிறகு, அந்த பகுதியில் இருப்பவர்கள் அவர்களில் சண்டையை தடுக்கிறார்கள். 

காங் ஹாங் எப்படியாவது ஒரு உளவாளியை பிடித்துவிட வேண்டும் என்று எண்ணம் வலுப்பெறுகிறது. 



இதற்கிடையில், ச்யோல் கு கில்லிடம் குடிப் போதையில் இராணுவ எல்லைக்குள் சென்று வந்தால் தனது சகோதரி உனக்கு தான் என்று கூறுகிறான். போதையில் ச்யோல் உறங்கிய பிறகு, மீ யோங் கில்லை அழைத்துக் கொண்டு இராணுவ எல்லைக்குள் நுழைகிறாள். கில் செல்ல தயங்கியும், அவள் மீது கொண்ட காதலால் செல்கிறான். அங்கு இருவரும் கலவியில் ஈடுப்படுகிறார்கள். 

காங் ஹாங் வீரத்தை நிரூப்பிக்கும் வகையில் அந்த கடற்கரையில் மனித நடமாடும் சத்தம் கேட்கிறது. யாரோ எல்லைக்குள் புகுந்துவிட்டனர் என்று தனது தூப்பாக்கியை தயார்ப்படுத்துகிறான். தூரத்தில் தெரியும் உருவத்தை குறிப்பார்த்து சூடுகிறான். அப்போது, ஒரு பெண் கத்தும் குரல் கேட்கிறது. தூப்பாக்கி, பெண் குரல் என்று அந்த எல்லைப்பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்து விழிக்கிறார்கள். 

இறந்த சடலத்தில் அருகே மீ யோங் அழுது கொண்டிருப்பதை ஹாங் பார்க்கிறான். அவர்கள் கலவி ஈடுப்பட்டிருக்கும் போது ஏற்ப்பட்ட சத்தத்தை தவறாக புரிந்துக் கொண்டு கில்லை சுட்டிருக்கிறான். தான் செய்த தவறை நினைத்து வருந்துகிறான். குற்றவுணர்வில் தவிக்கிறான். 

அடுத்த நாள், இராணுவ முகாம்மில் விசாரணை நடக்கிறது. அந்த பகுதி மக்கள் ஹாங்யை அடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் தூப்பாக்கி காட்டி அவர்களை தங்கள் முகாமை விட்டு வெளியே துறத்துகிறார்கள். தனது கடமையை செய்ததற்காக ஹாங்க்கு ஏழு நாள் விடுமுறை கொடுக்கப்படுகிறது. அந்த பகுதி மக்களால் ஏற்படுத்தப்பட்ட காயத்தால் வழியும் இரத்ததை பார்த்து கொண்டு செல்கிறான். 

குற்றவுணர்வில் அவனால் முன்பு போல் இயல்பாக இருக்க முடியவில்லை. ஊருக்கு செல்லும் வழியில் ஒரு குழந்தையின் தூப்பாக்கியை உடைக்கிறான். தன் நண்பர்கள் மீது கோபப்படுகிறான். காதலியிடம் அன்பாக பேச மறுக்கிறான். அதனால் காதலியை விட்டு பிரிக்கிறான். 

மன உலைச்சலில் ஹாங் விடுமுறை முடிகிறது. எல்லைப்பகுதிக்கு வேலைக்கு வரும் போது ச்யோல் குவால் தாக்கப்படுகிறான். மீ யோங் தனது மனநிலை இழந்து பைத்தியமாக இருப்பதை பார்த்து, மேலும் குற்றவுணர்வில் தவிக்கிறான். 

தன் மீது இருக்கும் கோபத்தை தனது சக இராணுவ வீரர்கள் மீது காட்டுகிறான். வெறித்தனமாக அடிக்கிறான். இரவு நேரத்தில் தூப்பாக்கியோடு போது மக்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல முயற்சிக்கும் போது, மற்ற இராணுவ வீரர்கள் அவனை தடுக்க, தனது தூப்பாக்கியை வானத்தை நோக்கி சுடுகிறான். 

முரட்டு தனமாக நடந்துக் கொள்ளும் ஹாங் இனி இராணுவ வேலைக்கு தகுதியற்றவன் என்று சான்றிதழ் வழங்கி அவனை வேலையை விட்டு அனுப்புகிறார்கள். புத்தி பேதலித்த மீ யோங் அடிக்கடி இராணுவ எல்லைக்குள் நுழைகிறாள். அவள் ஒவ்வொரு முறை இராணுவ முகாமுக்குள் நுழையும் போது, ஒரு இராணுவ வீரனால் கற்பழிக்கப்படுகிறாள். தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவள் விளையாட்டு தனமாக இருக்கிறாள். 

ஒரு கட்டத்தில், மீ யோங் கற்பமாகிறாள். இந்த உண்மையறிந்த அவளது ச்யோல் கு இராணுவ முகாமுக்கு கோபமாக செல்கிறான். அங்கிருக்கும் கேப்டன் உதவியோடு தன் தங்கையோடு தவறாக நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இராணுவ தண்டனை வாங்கி கொடுக்கிறான். ஆனால், அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையால் பிறக்க போகும் குழந்தைக்கு என்ன பயனுமில்லை என்பதை சொல்கிறான். அதற்கு தான் ஒரு வழி செய்கிறேன் என்று கேப்டன் உறுதியளிக்கிறான். 

அன்றிரவு, மீ யோங் இராணுவ மருத்துவ முகாமுக்கு இழுத்து வரப்பட்டு கருக்கழைப்பு செய்கிறார்கள். ஹாங் தடுக்க நினைத்தும் முடியவில்லை. செயலற்றவனாக இருப்பதை தன் மீது கோபப்படுகிறான். 

கருகழைக்கப்பட்ட மீ யோங் மேலும் வெறிப்பிடித்தவள் போல் செயல்படுகிறாள். ச்யோல் கு வளர்க்கும் மீன்களை உயிருடன் கடித்து உண்கிறாள். தன் தங்கையில் நிலைமைக்கு காரணமாக இராணுவ வீரர்களை கொல்ல வேண்டும் என்று ச்யோல் கு தாக்க முயற்சிக்க இராணுவ வீரர்கள் அவனை கடுமையாக தாக்குகிறார்கள். அன்றிரவு ஒவ்வொரு இராணுவ வீரனும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருகிறார்கள். 

எதிரிகள் ஊடுரூவல் இருக்கிறது. உளவாளி அல்லது எதிரிகள் கடல் எல்லைப்பகுதிக்குள் நுழைந்துவிட்டார்கள் என்று பாதுகாப்பு பலப்படுத்துகிறார்கள். பகலில் கடுமையான பயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால், அப்படியும் அன்று இரவு இன்னொரு இராணுவ வீரன் இறக்கிறான். அப்போது அவர்களை தாக்குவது ஹாங் என்று தெரிகிறது. 

காட்சி மாறுகிறது. மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் இராணுவ உடையுடன் ராணுவ வீரர்கள் ஓய்வு நேரத்தில் பாடும் பாடலல் ஒன்றை காங் ஹாங் பாடிக்கொண்டிருக்கிறான். பாடலைப் பாடி முடித்துவிட்டு, இராணுவ பயிற்சி செய்கிறான். மக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக கூடுகிறார்கள். அப்போது, தனது துப்பாக்கியில் இருக்கும் கத்தியால் ஒருவனை தாக்கியவுடன், குடியிருந்த மக்கள் பிதியடைகிறார்கள். அவனைப் போலீஸ் தூப்பாக்கியோடு சுற்றி வளைக்கிறது. கேமரா, காங் ஹாங்கின் முகத்தை க்ளோஸப்பில் காட்ட, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. 

அடுத்து, ராணுவ வீரர்கள் அனைவரும் சந்தோஷமாக வாலிபால் விளையாடும் காட்சியின் பின்னணியில், இந்தப் பாடல் பாட, படம் முடிகிறது.

கிம் கி டுக்கின் மிக நேர்த்தியான படங்களில் இதுவும் ஒன்று. துண்டான இரண்டு நாடுகளில் எல்லை பகுதி. தங்கள் நாட்டை காப்பாற்ற தென் கொரியாவில் கட்டாய இராணுவம் கொண்டு வரப்படுகிறது. உளவாளி, எதிரி ஊடுரூவல் இல்லாத போதும் போருக்கான பயம் இராணுவத்திற்காக செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை தொலைத்து கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. தங்கள் இயல்பு தன்மையில் இருந்து மாறவும் முடியாமல், மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளும் போது மன பிழவு ஏற்படுகிறது. 

அதேப் போல், எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் இராணுவ வீரர்கள் எப்போது தூப்பாக்கியோடு நடமாடி அச்சத்தை ஏற்படுத்துவதால் மக்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. எந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்வார்களோ எண்ணம் பொது மக்கள் மனதில் இருந்துக் கொண்டே இருக்கும். ஜனநாயகப்படி முறையான கேள்வியோ, அதற்கான பதிலோ அவர்களிடம் கேட்டு பெற முடியாது என்ற அச்சம் அவர்களிடம் ஒட்டிக் கொண்டே இருக்கும். 

 இந்தப்படத்தில் கிம் கி டுக் நேரடியாக தனது நாட்டை விமர்சனம் செய்கிறார். தென் கோரியாவில் இந்த படம் அதிகம் கவனம் பெறவில்லை. ஆனால், உலக அளவில் பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம்.  

Thursday, May 12, 2016

மிருகம் சொல்லும் Management கதைகள் - 11

புலியும் , சிங்கமும் தங்களுக்கு வேலை செய்ய நான்கு நரியை வேலைக்கு வைத்திருந்தது. நான்கு நரிகளும் சிங்கம், புலி வேட்டைக்கு உதவியாக இருந்தார்கள். இருந்தாலும், நான்கில் யார் திறமையானவர்கள் என்பதில் தேர்வு செய்ய கடினமாக இருந்தது. அதனால், சிங்கமும், புலியும் நான்கு நரிகளுக்கு ஒரு சோதனை நடத்த முடிவெடுத்தது.



சிங்கம் நரிகளிடம், “இன்று நாங்கள் இருவரும் வேட்டைக்கு வரப் போவதில்லை. நீங்கள் தான் முயலை வேட்டையாடி கொண்டு வரப் போகிறீர்கள். ஒவ்வொருவரும் பத்து முயலாவது கொண்டு வர வேண்டும்” என்றது சிங்கம்.

முதல் நரி, “ஒருவரே பத்து முயல் கொண்டு வருவது கடினமானது. நாங்கள் குழுவாக செல்கிறோம்.”

புலி அதை ஏற்கவில்லை. உங்களிடம் இருக்கும் திறமையை கொண்டு வருவதற்கே இந்த சோதனை என்றது.

நான்கு நரிகளும் தங்களால் முடிந்த அளவுக்கு முயலை வேட்டையாடி வேட்டைக்கு சென்ற இடத்தில் 26 முயல்கள் மட்டுமே இருந்தது. இரண்டு நரி விரைவாக முயல்களை தாக்கி ஆளுக்கு பத்து முயலை கொண்டு கொண்டு வந்தது. மூன்றாவது முயல் கிடைத்த 6 முயலை கொண்டு சென்றது. நான்காவது வெறும் கையோடு திரும்பி வந்தது.

முதல் இரண்டு நரியைப் பார்த்ததும் புலிக்கு மகிழ்ச்சி. மூன்றாவது நரி, “மன்னிக்கவும் என்னால் மீதம் நான்கு முயலை கொண்டுவர முடியவில்லை என்று வருத்தமாக கூறியது.

வெறும் கையோடு வந்த நரி, “நாங்கள் நால்வரும் 26 முயலை கொன்று, உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறோம்” என்றது.

சிங்கம் அந்த நான்காவது நரியை மேலாளராக்கியது. மூன்றாவது முயலை மேற்பார்வை பார்ப்பவனாகாக்கியது. முதல் இரண்டு நரியை வேட்டையாடுவதற்கு வேலை செய்பவனாக மாற்றியது.

மேனேஜ்மெண்ட் நீதி :
வேலை செய்ய தெரிந்தவர்களுக்கு வேலைக் கொடுக்க வேண்டும். வேலை செய்யத்தெரியாதவர்களுக்கு, வேலை செய்பவர்களை கண்காணிக்கும் ’மேலாளர்’ பொறுப்பை கொடுக்க வேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails