வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, August 5, 2016

கவலை இல்லாத மனிதன் !

கண்ணதாசனுக்கு அதிகம் கவலை தந்த படம். அவர் தயாரித்த முந்தையப் படங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் நஷ்டம் கொடுக்கவில்லை. ஆனால், இந்தப்படத்தில் சந்திரபாபு ஒத்துழைப்பு இல்லாததால் படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. 

படப்பிடிப்பு இடையில் சந்திரபாபு பேசிய சம்பளத்தை விட அதிகமாக கேட்டார். அந்தக் காலக்கட்டத்தில், சிவாஜி வாங்கிய சம்பளத்தை விட அதிகமான சம்பளத்தை சந்திரபாபுவுக்கு கொடுக்க வேண்டியதாக இருந்தது என்று கண்ணதாசன் தனது சுயசரிதையில் புலம்பியிருப்பார். வேறு பல தடைகளும் இந்த படத்திற்கு இருந்தது என்பது தனிக்கதை. 

படம் மிகப் பெரிய தோல்வி. இருந்தாலும், கண்ணதாசன் வரிகளில் சந்திரபாபுவின் குரல் வரும் பாடல்கள் நம்மை எதோ செய்யும். சில வரிகள் நமது ஆறுதலாக இருக்கும், இன்னும் சில வரிகள் நம்மையறியாமல் கண்ணீர் சிந்த வைக்கும். 

குறிப்பாக, “பிறக்கும் போதும் அழுகின்றாய்” என்ற பாடலில்... 

இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் 
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.” 

நமது சோகத்தை மறு பரிசீலனை செய்ய வைக்கும் வரிகள். ஒரு வேளை இந்த படம் வெற்றி பெற்றிருந்தால், இரண்டு கலைஞர்கள் மனது ஆறுதலான பாடல்களை கொடுத்து கொண்டே இருந்திருப்பார்கள். 

”கவலை இல்லாத மனிதன்” இரண்டு கலைஞர்களுக்கு மன உலைச்சல் கொடுத்தாலும், ரசிகன் மனதுக்கு ஆறுதலாக பாடல்களை கொடுத்திருக்கிறது 

பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல் 


 கவலையில்லாத மனிதன்




Monday, August 1, 2016

என் கதை – கமலாதாஸ்

இந்தியாவில் அதிகம் விற்பனையான பெண் சுயசரிதை என்றால் கமலாதாஸின் “என் கதை” தான். 

இதற்கு முன் தமிழில் காப்புரிமையில்லாமல் கமலாதாஸின் “என் கதை” சுமாரான எழுத்துநடையில் வந்திருக்கிறது. எதுவும் வாசிக்க உகந்ததாக இல்லை. காலச்சுவடு பதிப்பகம் முறையாக காப்புரிமை வாங்கி வெளியிட்டு இருக்கிறார்கள். 

இந்த நூல் மலையாளத்தில் “என்டே கதா” என்ற பெயரில் வெளியிட்ட வருடம் 1973. அப்போது, கமலாதாஸூக்கு வயது 39. இரண்டு குழந்தைக்கு தாய். கணவனோடு வாழ்ந்து வருபவர். இப்படிப்பட்ட குடும்பப் பின்னனியில் இருப்பவர், தனது பதின்ம வயதில் அனுபவம் தொடங்கி, திருமணம் உறவு, அந்தரங்க காதல், காமம் என்று அனைத்தும் துணிவோடு பகிர்ந்து இருக்கிறார். தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கபட்டும் என்ற அச்சத்தை ஒடைத்து எரிந்தெரிந்திருக்கிறார். 

 “என் கணவரின் முன்பு எனக்குக் காமவேட்கை எழுந்ததில்லை. அவரெதிரில் என் காமவேட்கை எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. அறிவாற்றல் மிகுந்த எனது காதலர் என்னிடம் எப்போதும் பித்துப்பிடித்த பாலியல் மோகத்தை எழுப்புகிறார். அவர் என்னைத் திருப்திப்படுத்தியபோதிலும் அவர் திருப்தியடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஒரு முறை உடலுறவுக்குப் பிறகு நான் அரைத்தூக்கத்தில் இருந்தபோது என் கன்னங்களை அழுத்திக்கொண்டிருந்த அவரது உள்ளங்கை சட்டென்று மென்மையடைவதாக எனக்குத் தோன்றியது. அவர் ரகசியமாக மெல்ல எனது பெயரை உச்சரிப்பதைக் கேட்டேன். "

 இப்படி ஒரு பெண் சொல்லும் போது நமது சமூகம் அவளது ஒழுத்ததை கேள்வி கேட்கும். ஒரு பெண் உடலுறவின் கொண்டாட்டத்தை வெளிப்படையாக சொல்வதே தவறு. அதுவும் கணவனல்லாத ஒரு ஆண்ணுடன் கொண்ட உறவை, கணவனோடு கொண்ட உறவோடு ஒப்பிட்டு அதைவிட தனது காதலனுடன் இருந்த உறவை பெருமையாக பேசுவதை தங்கள் பண்பாட்டை கட்டிக்காப்பதாக சொல்லும் மாயச் சமூகம் ஏற்காத விஷயம். 

இந்தச் சமூக ஏற்றுகொண்ட ஓழுக்க விதிகளை கமலாதாஸ் பொருட்படுத்தியதில்லை. அதை ஏற்றுகொண்டதும் இல்லை. ஒழுத்தை பற்றி அவர் கூறும் கருத்து இது தான். 

 ”அழியக்கூடிய மனித உடலே இந்த ஒழுக்கத்தின் அடிக்கல். அழிவற்ற மனித ஆத்மாவில் அல்லது அதைக் கண்டறியக்கூடிய உருவாக்கப்பட வேண்டியதுதான் உன்னதமும் வணங்கத்தக்கதுமான ஒழுக்கம் என்று நம்புகிறேன்.” 

எழுபதுகளில் ஒரு பெண் இவ்வளவு துணிவோடு எழுதியதில்லாமல், தன்னுடைய சுயசரிதை இது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் கமலாதாஸ். சர்ச்சை நிறைந்த இந்த புத்தகம் அதிக விற்பனையானதற்கு இதுவும் ஒரு காரணம். 



 ** 
திருமண பந்தத்தில் வரும் காமம் வேறு, காதலில் வரும் காமம் வேறு…. இரண்டும் காமம் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது. 

திருமண பந்தத்தில் வரும் காமம் ஒரு commitment. சில சமயம் ஒருவர் விருப்பமில்லை என்றாலும், இன்னொருவர் விருப்பத்திற்காக ஈடுப்பட வேண்டியதாக இருக்கும். இருவரின் ஒருவரே திருப்தியடைந்த உறவாக முடியும். இருவருக்கும் வேறு சாய்ஸ் இல்லாத உறவு என்று கூட சொல்லலாம். 

 ஆனால், காதலில் வரும் காமம் அப்படியில்லை. இருவரும் கொண்டாட நினைக்கும் விஷயம். இருக்கும் கொஞ்ச நேரத்தை வீணடிக்காமல் உறவை முழுவதுமாக அனுபவிக்க நினைக்கும் உறவு. பண்பாடு, கண்ணியம் எல்லாம் மறந்து, கட்டிலில் தங்களை தாங்களே அடையாளம் கண்டுக் கொள்ளும் உறவு. உறவு முடிந்து இருவரும் தங்கள் வேலையை பார்க்க செல்லலாம். ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முடியாது. 

 இந்த இரண்டு உணர்வின் வித்தியாசத்தை கமலாதாஸ் “என் கதை” நூலின் தெளிவான நீரோடைப் போல் பதிவு செய்திருக்கிறார். 

தனது அந்தரங்கக் காதலைப் பற்றி ஆண்களே வெளிப்படையாக பேச தயங்கும் காலத்தில் இருக்கிறோம். ஆனால், கமலாதாஸ் 70களில் தனது காதலனோடு இருக்கும் பொழுதை இப்படி விவரிக்கிறார். ஒரு மூதாட்டி என்னிடம் கூறினாள் 

“ மேம்சாஹிப். நீங்க அந்த எடத்துக்குப் போகாதீங்க. அங்க போறது ஆபத்தானது”. ராஜாவுக்கு ஏழைகளின் மத்தியில் எந்தவித நற்பெயரும் கிடையாது. ஆனால், அவரெதிரில் போய் நின்று அவரை விமர்சிக்க யாருக்கு தைரியமில்லை. 

வாரத்தில் ஓரிருமுறை ஒரு மணப்பெண்ணின் ஆடையலங்காரங்களுடன் அவரைச் சந்திக்கப் போனேன். ஓய்வறையின் கதவு சாத்தப்படும்போது அவர் தாகம் நிறைந்த உதடுகளுடன் என்னை ஓயாமல் முத்தமிடுவார். அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த பல கண்ணாடிகளில் எங்கள் முத்தம் பிரதிபலித்தது. 

தான் நோயுற்று இருக்கும் போது கணவனோடு இருந்த நெருக்கத்தை விவரிக்கிறார். மற்ற ஆண்கள் மீது காதலனையும் கொண்டாடுகிறார். பதின்ம வயதில் கண்ணாடி முன் தனது உடலை நிர்வாணமாக ரசித்ததை கூறுகிறார். குழந்தை பெற்றப்பிறகு உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும் சொல்கிறார். 

ஒரு பெண் தனது சொந்த வாழ்க்கையை இந்த அளவிற்கு பகிரங்கமாக, அதுவும் தனது உடல் சார்ந்த விஷயத்தை புத்தக வடிவில் பகிர்ந்ததை இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். 

’ஒழுங்கீனம்’ என்பதை மனிதன் இன்னொரு மனிதனை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கியது. அதை பொருட்படுத்தாமல் இருக்கும் மனிதன் சுதந்திரமாக தெரிகிறான். சுதந்திரமாக திரியும் மனிதன் அடிமையாய் இருக்கும் மனிதனின் கண்ணுக்கு ஒழுக்கமற்றவனாக தெரிகிறான். 

 ’ஒழுக்கம்’ என்ற வார்த்தை கூட ஒருவரை அடிமையாக்குறது அல்லது அடுக்குமுறை கையாள்கிறது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. 

 ** 
என் கதை 
- கமலாதாஸ் 
- Rs.145 
- காலச்சுவடு பதிப்பகம்

LinkWithin

Related Posts with Thumbnails