வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, September 27, 2016

கவிதை : வாணி ஸ்ரீ !

அன்று என் காதலை மறுத்தவள்
இன்று பேஸ்புக்கின் என் நட்பை ஏற்க மறுக்கிறாள்

அன்றும் என்னை கடந்து போக விரும்பியவள்
இன்று என்னை பார்க்க விரும்பாதவளாக இருக்கிறாள்

என்றோ ஒரு நாள்
நீ என்னை மீண்டும் பார்த்தாள்
அடையாளம் தெரிவதற்காகவே
உடல் எடைப்போடாமல்
அதே எடையில் இருக்கிறேன்!
தலை முடிக்கு
கருப்பு சாயம் பூசுகிறேன் !

அந்த ஒற்றை நாளுக்காக
பல நாட்களாக
என்னை நான் பாதுகாத்துவருகிறேன் !

சந்தேகம் இல்லை
நீ என் வாணி ஸ்ரீ தான்
மாறவே இல்லை !
இந்த அளவுக்கு
ஒரு ஆணின் இதயத்தை உடைக்க
உன்னால் மட்டுமே முடியும் !!

ஆனால்,
அன்றும் சரி, இன்றும் சரி
நான் சிவாஜி கணேசன் அல்ல !

உன்னிடம் ஒரு நொடிக் கூட
நடிக்க தெரியாதவன் நான்
எப்படி சிவாஜியாக முடியும் ?

வாணி ஸ்ரீ !
நீ மறுப்பாய் என்று தெரிந்தும்
ஒரு முறை
உன்னை பார்க்க வேண்டும்
என்று என் மனம் விரும்புகிறது !

நீ என்னை மீண்டும் பார்த்தால்
அடையாளம் தெரிவதற்காகவே
நான் மார்க்கண்டேயனாக
 காத்திருக்கிறேன் !

Thursday, September 15, 2016

காவேரி பிரச்சனை

அரசியல் பிரச்சனையல்ல, கார்ப்ரேட் நிறுவனங்களால் உருவான பிரச்சனை.

காவேரி பிரச்சனையில் தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் வாய் திறக்கமாட்டார்கள். திறக்கவும் முடியாது. காரணம், விவசாயம் நிலம் அழிந்தால் தான் GAIL பிராஜெக்ட் கொண்டு வர முடியும். காவேரி நீர் வராமல் இருந்தால் தான் அவர்கள் சுதந்திரமாக மணல் கொள்ளை நடத்த முடியும். அவர்கள் நமக்காக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள் தனம். 

அடுத்து கன்னட சகோதரர்கள். தமிழ்நாட்டில் கொடுக்கும் நீரை குறைத்துக் கொண்டு தங்களுக்கு கொடுக்க போகிறார்கள் என்று நம்புகிறார்கள். விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். 

காவேரி பிரச்சனை உருவாக்கியது அங்குள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள் நீர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், அங்கு உருவாக இருக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் நீர் தேவைக்காகவும் தான். அதற்காக செயற்கையான நீர் பற்றாக்குறையை உருவாக்கி இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கியிருக்கிறார்கள். (நான்கு வருடம் முன்பு கூடாங்குளம் அணுமின்நிலையம் திறப்பதற்காக செயற்கையான மின்சார பற்றாக்குறை உருவாக்கியது போல் தான் இதுவும்.) 

கார்நாடகாவில் அரசியல்வாதிகள் அனைவரும் காவேரிக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்பதும், தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் அனைவரும் மௌனமாக இருப்பதும் கார்ப்ரேட் நிறுவனத்தின் லாபத்திற்காக மட்டுமே. 

இதில் முட்டாள் தனமாக பாதிக்கப்படுவது இரண்டு மாநில மக்கள் தான் !!

இந்தியாவை அரசியல்வாதிகள் ஆளவில்லை. கார்ப்ரேட் நிறுவனங்கள் தான் ஆள்கிறது!! 

LinkWithin

Related Posts with Thumbnails