வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, November 10, 2016

திரும்பப் பெற்ற ரூ.500, ரூ.1000 நோட்டு – யார் பாதிக்கப்படப் போகிறார்கள் ?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவுப்பு மூலம் கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக குறையும். கறுப்பு பணம் முழுவதுமாக ஓழியாவிட்டாலும் ஒரளவு குறையும். 

கார்ப்ரேட் முதலாளிகள், அமைச்சர்கள் பாதிக்கப்படுவார்களா ? 

மோடியின் அறிவிப்பில் கார்ப்ரேட் நிறுவனமும், பெரிய அரசியல்வாதிகளும் இல்லை. இவர்கள் Higher Upper-Class வகையினர்கள். அவர்களிடம் பெரிய ஆடிட்டர், வழக்கறிஞர் டீம் இருக்கிறது. இதை எளிதில் கையாள்வார்கள். ஏற்கனவே அவர்களின் கறுப்புப் பணம் தங்கமாகவோ, வெளிநாட்டில் சொத்துகளாகவோ வாங்கியவர்கள். அவர்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர இந்த அறிவிப்பு உதவப் போவதில்லை. (அவர்கள் மீது எதிர்ப்பாராத ஐ.டி ரைட் மட்டுமே சிறந்த வழி.) 

அப்போது, யார் பாதிக்கப்படுவர்கள் ? 

அமைச்சர் போன்ற பெரிய அரசியல்வாதிகள் பாதிப்பு இல்லையென்றாலும் கவுன்சிலர், எம்.எல்.ஏ அளவுக்கு இருக்கும் அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு கடையிலும் வாங்கிய கமிஷன் வருமானத்தை எப்படி மாற்றியாக வேண்டும். பலரை ஏமாற்றி சம்பாதித்தது, சில கொலைகள் செய்து, சில பல உறவுகள் வேண்டாம் என்று பணத்தின் பின்னால் சென்றவர்கள் இந்த தருணத்தில் யோசிக்க வேண்டும். 

இருபது வருடம் மேல் இருக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைகள். வட்டிக்கு விட்டு சம்பாதித்தவர்கள். அவர்கள் வருமான வரி கட்டியிருக்கமாட்டார்கள். அவர்கள் தங்கள் வருமானத்தை இப்போது வங்கியில் செலுத்தியாக வேண்டும். பத்து லட்சம் மேல் வங்கியில் செலுத்தினால் வரி ஏய்ப்பு செய்ததாக கருதப்படும். அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.



தாசில்தாரர் அளவில் இருக்கும் அரசாங்க ஊழியர்கள் தங்கள் பணத்தை வங்கியில் போட்டால் மட்டுமே பயன்படுத்த முடியும். 

அதேப் போல், திரைத்துறை, ரியர் எஸ்டேட், காய்கறிப வணிகம் போன்ற Unorganized துறையினர் சிரமப்படுவார்கள். குறிப்பாக, கறுப்புப் பணத்தில் கட்டவிருந்த ப்ளாட் கட்டும் பிராஜெக்ட் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள். பணத்தேவைக்காக ஏற்கனவே கட்டப்பட்ட ப்ளாட்டுக்கு அதிக விலை சொன்னவர்கள் குறைக்க வேண்டியதாக இருக்கும். 

வரிக்கட்டாமல் பல கோடி வைத்திருப்பவர்கள் வங்கியிலோ அல்லது குறுக்கு வழியிலோ மாற்ற முயற்சிப்பார்கள். இவர்கள் எத்தனை வழி கண்டுப்பிடித்தாலும், என்ன செய்தாலும் கடைசியில் அத்தனைப் பணமும் வங்கியில் செலுத்தினால் மட்டுமே பயன்படுத்த முடியும். யாருக்கும் பயன்படாமல் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தப் பணம் வங்கிக் கணக்குக்கு வருகிறதென்றால் அரசாங்கக் கணக்குக்கு வருகிறது என்று அர்த்தம்.

மொத்தத்தில், வருமான வரி கட்டாத Upper Class, Upper Middle-class வர்கத்தினர்களுக்கு சம்பாதித்தவர்களுக்கு இதுப் பெரிய Check. 


மோடியின் நல்லிரவு அறிவிப்பை பலர் எதிர்க்கிறார்கள். கால அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு நேரம் கொடுத்தால், தங்கள் பணத்தை தங்கத்திலோ அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்து வெள்ளையாக மாற்றிவிட வாய்ப்பு இருக்கிறது. நல்லிரவு அறிவிப்பு என்பது சரியானது தான். 


அடுத்தது அரசு என்ன செய்ய வேண்டும் ? 

எந்த அளவுக்கு விரைவாக அறிவிப்பு கொடுத்தாரோ, அதை சரிசெய்யும் விதமான சரியாக திட்டமிடல் இருக்க வேண்டும். 

அடுத்த இரண்டு மாதத்திற்கு 80C பெற்ற N.G.O கணக்குகளை வருவாய் துறையினர் கவனிக்க வேண்டும். யார் யார் எவ்வளவு நன்கோடை கொடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் கணக்கில் இருந்து எந்த வங்கிக் கணக்குக்கு பணப்படுவாட நடக்கிறதது என்பதை கண்காணிக்க வேண்டும்.

வங்கி ஊழியர்கள், குறிப்பாக மேனேஜர் அளவில் இருப்பவர்களையும் கண்காணிக்க வேண்டும். ரூ.4000 மாற்ற வரும் வாடிக்கையாளரின் PAN Cardயை அடையாள அட்டையை நகல் எடுத்து, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் உதவி செய்ய வாய்ப்பு இருக்கிறது. 

அடுத்து , தங்கம் மார்க்கெட்டின் அதிக முதலீடு வரும். தங்க முதலீட்டார்களையும் கண்காணிக்க வேண்டும். 

இதைச் செய்யாதப் பட்சத்தில் 500, 1000 நோட்டுகளை திரும்பப் பெற்ற உத்தரவில் எந்த பயனும் இருக்காது. 

** 

சரி… அதற்காக, அன்றாடம் வாழும் மக்கள் பாதிக்கப்படலாமா ? இயல்பு வாழ்க்கை பாதிக்கபடலாமா ? 

ஒழுங்காக வருமான வரிக் கட்டியவர்கள் இரண்டு நாள் தான் அவஸ்தை. இவர்கள் Middle-Class, Lower Middle-Class, Lower-Class வகையினர். சிறு வியாபாரிகள், தினக்கூலிகள் என்று தொடங்கி வெளியூருக்கு செல்பவர்கள் வரை அனைவருக்கும் இரண்டு நாள் அவஸ்த்தை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வருமான வரிக்கட்டாதவர்களுக்கு அடுத்த இரண்டு மாதம் அவஸ்தைப்பட போகிறார்கள். 

கவுன்சிலர்கள், ரியல் எஸ்டேட் வாதிகள், அரசாங்க ஊழியர்கள் போன்றவர்கள் நமது பணத்தை லஞ்சமாகவோ, கமிஷனாகவோ கொடுத்தது பழக்கப்படுத்தி நாம் தவறு செய்கிறோம். குறைந்தப்பட்சம் வேடிக்கைப்பார்த்து கொண்டு அமைதியாக இருந்திருக்கிறோம். அந்த தவறுக்கு இரண்டு நாள் அனுபவிப்போம். 

நமது பணத்தை ஆட்டையப் போட்டவர்கள் இரண்டு மாதம் அவஸ்தைப்படட்டும். வருமான வரி துறையினரிடம் மாட்டி நஷ்ட ஈடுக்கட்டடும். 

மோடி அரசு எடுத்து வைத்திருப்பது முதல் அடியாக இருந்து, தொடர்ந்து கார்ப்பிரேட் ஆசாமிகள் மீது சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் கறுப்புப்பணம் ஒழிப்பு நடவடிக்கையில் நிச்சயம் பலன் தரும். கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த ஒரு நடவடிக்கைப் போதும் என்று நினைத்தால், புது ரூ.500, ரூ.2000 நோட்டு வந்ததும் ஆறு மாதத்தில் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும்.

2 comments:

Unknown said...

bro arun jaitley and his team would certainly monitor the situation...

vic said...

நேர்மையான கட்டுரை

LinkWithin

Related Posts with Thumbnails