19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ஆண்டில் எழுதப்பட்டது என்று சரியான குறிப்புகள் இல்லை. 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பல நூற்றாண்டு முன் இலக்கியமல்லாத ஒரு புத்தகம் இவ்வளவு முக்கியத்துவம் பெரும் காரணம், இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையை எப்படி சீர்குழைக்க வேண்டும் என்று பிரிட்டன் பேரரசு இரகசியமாக சேகரித்த முக்கியமான ஆவணமாக இருப்பதால் தான்.
18ஆம் நூற்றாண்டில் ஓட்டோமன் பேரரசை சீர்குழைக்க இஸ்லாமிய வேடத்தில் பிரிட்டிஷ் உளவாளியான ஆலிவர் ஹெம்பர் ஊடூருவினார். அங்கு அவர் மேற்கொண்ட அனைத்து வழிமுறைகளை தனது நினைவுக்குறிப்புகளாக இந்த நூலில் எழுதியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், இஸ்லாமிய நாடுகளை தகர்க்க பிரிட்டன் அரசு ஆவணப்படுத்தியிருக்கும் ரகசிய அறிக்கையும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் இஸ்லாமிய தேசங்களை தகர்ப்பதற்கு ஒரு நூற்றாண்டு காலம் தேவைப்பட்டாலும், தங்களுக்கு அடுத்து வரும் பிரிட்டன் அதிகாரிகளுக்கும், பேரரசுக்கும் உதவியாக இருக்கும் என்பது தான் அந்த உளவாளியின் நோக்கம். ஏற்கக்குறைய அவர்களின் நோக்கப்படி சில இஸ்லாமிய தேசங்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பாகிஸ்தான் அமெரிக்க அனுதாபியாக இருக்கிறது. ஓட்டோமன் சாம்ராஜ்ஜியத்தில் இஸ்ரேல் தேசம். இன்னும் சில இஸ்லாமிய தேசங்கள் அமெரிக்காவுக்கு அஞ்சி அமைதியாக இருக்கிறது.
பிரிட்டனுக்கு பதிலாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இஸ்லாமிய தேசங்களை தகர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது. இதில் பிரிட்டன் தயாரித்த இரகசிய அட்டவனையில் எந்த மாற்றம் செய்யாமல் திட்டம் போட்டு செயல்படுத்திவருகிறார்கள்.
இஸ்லாமிய தேசம் ஒன்றுப்படாமல் இருப்பதற்கு ஏகாப்பத்திய நாடுகளில் இரகசிய அறிக்கையாகவே இந்தப் புத்தகம் இருக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்… !!!
***
பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
- ஆலிவர் ஹெம்பர் ( தமிழில் : நாஞ்சிலான்)
- அடையாளம் வெளியீடு
- ரூ.80
இணையத்தில் வாங்க...
No comments:
Post a Comment